மேலும் அறிய

NExT Exam: 2025 முதல் மருத்துவ மாணவர்களுக்கு நெக்ஸ்ட் தேர்வு; தேர்வு எப்படி இருக்கும்?- முழு விவரம்

மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வை 2025 ஆகஸ்ட் மாதத்தில் நடத்தவும் 2020 பேட்ச் மாணவர்களை எழுத வைக்கவும் மத்திய சுகாதார அமைச்சகம், தேசிய மருத்துவ ஆணையத்துடன் ஆலோசனை செய்து வருகிறது. 

மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வை 2025 ஆகஸ்ட் மாதத்தில் நடத்தவும் 2020 பேட்ச் மாணவர்களை எழுத வைக்கவும் மத்திய சுகாதார அமைச்சகம், தேசிய மருத்துவ ஆணையத்துடன் ஆலோசனை செய்து வருகிறது. 

நெக்ஸ்ட் தேர்வு என்றால் என்ன?

நெக்ஸ்ட் தேர்வு வழிமுறைகள் குறித்த அறிவிக்கையை அண்மையில் தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டது. இதில், இறுதி ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு, பொது தகுதித் தேர்வாக நெக்ஸ்ட் தேர்வு (National Exit Test NExT) நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது. 

3 பிரிவினருக்கு நெக்ஸ்ட் தேர்வு கட்டாயம்

நெக்ஸ்ட் தேர்வு 3 வகைகளில் பயன்படுத்தப்பட உள்ளது. இதன்படி, 

* நெக்ஸ்ட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, மெரிட் அடிப்படையில் முதுநிலை மருத்துவம் படிக்க முடியும். 
* அதேபோல மருத்துவத் தொழில் செய்யப் பதிவு செய்ய முடியும். 
* மேலும் வெளிநாடுகளில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்கள் இந்தியாவில் பதிவு செய்ய முடியும்.

இறுதித் தேர்வாக இருக்காது

முன்னதாக மத்திய அமைச்சர்  மன்சுக் மாண்டவியா நெக்ஸ்ட் தேர்வு குறித்துப் பேசும்போது, 2019 பேட்ச் எம்பிபிஸ் மாணவர்கள் நெக்ஸ்ட் தேர்வை எழுத வேண்டியதில்லை. 2020 பேட்ச் மாணவர்கள் நெக்ஸ்ட் தேர்வை எழுத வேண்டி இருக்கும். மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் எந்த முடிவையும் மத்திய அரசோ, தேசிய மருத்துவ ஆணையமோ எடுக்காது.  அதேபோல நெக்ஸ்ட் தேர்வு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கான இறுதித் தேர்வாக இருக்காது. 

மருத்துவம் முடித்த மாணவர்களுக்குப் பட்டம் வழங்கப்படும். ஆனால் பட்டம் பெற்ற பிறகு, மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய நெக்ஸ்ட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம் என்று அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்து இருந்தார்.

தேசிய மருத்துவ ஆணையத்துடன் ஆலோசனை

இந்த நிலையில், மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வை 2025 ஆகஸ்ட் மாதத்தில் நடத்தவும் 2020 பேட்ச் மாணவர்களை எழுத வைக்கவும் மத்திய சுகாதார அமைச்சகம், தேசிய மருத்துவ ஆணையத்துடன் ஆலோசனை செய்து வருகிறது. 

இதுகுறித்து அமைச்சக மூத்த அதிகாரிகள் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

’’2023 ஜூன் மாதம் வெளியான நெக்ஸ்ட் தேர்வுக்கான வழிமுறைகளின்படி, நெக்ஸ்ட் தேர்வு படிநிலை 1 ( NExT Step 1) மற்றும் படிநிலை 2  ( NExT Step 2) என இரண்டு கட்டங்களாக 12 மாதங்களுக்குள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக ஆகஸ்ட் 2025-ல் முதல் படிநிலை நெக்ஸ்ட் தேர்வு நடைபெற உள்ளது. ஆன்லைன் மூலம் நடத்தப்படும் இந்தத் தேர்வு தியரி அடிப்படையில் அமைந்திருக்கும். அடுத்து 2026 பிப்ரவரியில் 2ஆம் நெக்ஸ்ட் தேர்வு நடைபெற உள்ளது. முதல் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ள விரும்புவர்களும் இந்தத் தேர்வில் பங்கேற்கலாம்.

நாடு முழுவதும் 2020 பேட்ச்சில் சுமார் 65 ஆயிரம் மாணவர்கள் எம்பிபிஎஸ் சேர்ந்து படித்து வருகின்றனர். சுகாதார அமைச்சகத்தின் தகவல் அறிக்கைப்படி, 2025 ஆகஸ்ட் மாதம் நடக்கவுள்ள நெக்ஸ்ட் தேர்வை 62 ஆயிரம் மாணவர்கள் எழுதத் தகுதி பெற்றுள்ளனர். இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம், தேசிய மருத்துவ ஆணையத்துடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. 

இதைத் தொடர்ந்து முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஒரு கலந்தாய்வு மட்டுமே நடத்தப்படும்’’. 

இவ்வாறு சுகாதார அமைச்சக மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்Salem leopard | இறந்து கிடக்கும் ஆடுகள்! சிறுத்தை பீதியில் மக்கள்! வனத்துறைக்கு கோரிக்கைChennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Breaking News LIVE: கள்ளச்சாராய மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை  தேவை - நிர்மலா சீதாராமன்
Breaking News LIVE: கள்ளச்சாராய மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை - நிர்மலா சீதாராமன்
Embed widget