மேலும் அறிய

எத்தனை கோடிகள் ஒதுக்கீடு செய்து என்ன பலன்? - பள்ளி கட்டிடத்தை பேட்ச் ஒர்க் செய்து ஒட்டி வரும் அரசு - ஆபத்தில் மாணவர்கள்...!

மயிலாடுதுறை அருகே பழுதடைந்த பழைய பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடத்தை கட்டித்தர  பெற்றோர்கள் அரசுக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை அருகே மேற்கூறை பெயர்ந்து விழும் பழைய பள்ளி கட்டிடத்தை மழைக்காலத்திற்குள் இடித்து விட்டு புதிய வகுப்பறைகளை கட்டி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்வித்துறைக்கு அதிக நிதி

தமிழக பட்ஜெட்டில் ஒவ்வொரு முறையும் பள்ளிக்கல்வி துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் அவைகள் முறையாக சென்று சேருகிறதா? என்றால் அது கேள்வி குறியாக தான் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் பலரும் கூறி வருகின்றனர். அதற்கு உதாரணமாக ஏராளமான பள்ளிகளில் போதிய அளவில் கட்டிடம் இல்லாமலும், பல கட்டங்கள் பழுதடைந்தும் இருப்பதே உதாரணம். இருத்த போதிலும் கடந்த பட்ஜெடில் கூட  பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டு திட்டத்திற்கு 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக் கட்டமைப்பு வதிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.


எத்தனை கோடிகள் ஒதுக்கீடு செய்து என்ன பலன்? - பள்ளி கட்டிடத்தை பேட்ச் ஒர்க் செய்து ஒட்டி வரும் அரசு - ஆபத்தில் மாணவர்கள்...!

பள்ளிக்கல்விக்கு கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக ரூ. 3743 கோடி

28 பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக 100 கோடி ரூபாயில் தரம் உயர்த்தப்படும். 15000 திறன்மிகு வகுப்பறைகள் 300 கோடி ரூபாயில் உருவாக்கப்படும். இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் நிதி என  பள்ளி கல்வித்துறைக்கு மட்டும் 44,042 கோடி ரூபாய் நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீட்டு செய்தது. பள்ளிக்கல்விக்கு கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக ரூ. 3743 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு. (2023-24 பட்ஜெட் ரூ.40,299 கோடி, 2024-25 பட்ஜெட் ரூ.44,042 கோடி செய்யப்பட்டது.

Anbumani: பள்ளிகளில் அதிகரித்து வரும் கஞ்சா புழக்கம்; வேடிக்கை பார்க்கும் அரசு- அன்புமணி கண்டனம்


எத்தனை கோடிகள் ஒதுக்கீடு செய்து என்ன பலன்? - பள்ளி கட்டிடத்தை பேட்ச் ஒர்க் செய்து ஒட்டி வரும் அரசு - ஆபத்தில் மாணவர்கள்...!

ஆபத்தான பள்ளி கட்டிடம் 

மயிலாடுதுறை மாவட்டம் மேலபாண்டூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் அக்கிராமத்தை சேர்ந்த ஏராளமான ஏழை எளிய விவசாய கூலி தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் அந்த மாணவர்கள் அமர்ந்து பயிலும் வகுப்பறை கட்டம் கடந்த 63 ஆண்டுகளுக்கு  முன்பு கட்டப்பட்ட பழைய கட்டிடம் ஆகும். ஆகையால் அந்த கட்டிடத்தை கடந்த 2013 - 2014 காலகட்டத்தில் அரசால் பேட்ச் ஒர்க் எனப்படும் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டுள்ளனர். சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகிய நிலையில் பள்ளி கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு மேற்புற காங்கிரட் மேற்கூற காரைகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. இந்தளவிற்கு மிக மோசமான நிலையில் உள்ள  கட்டிடத்தில் தான் தற்போது மாணவர்கள் அமர்ந்து பெரும் அபாயத்திற்கு நடுவில் கல்வி பயின்று வருகின்றனர்.


எத்தனை கோடிகள் ஒதுக்கீடு செய்து என்ன பலன்? - பள்ளி கட்டிடத்தை பேட்ச் ஒர்க் செய்து ஒட்டி வரும் அரசு - ஆபத்தில் மாணவர்கள்...!

பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை

இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் சமீபத்தில் மேற்புற காரை பெயர்ந்து விழுந்ததில் மாணவர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே அடுத்து வரக்கூடிய நாட்களும் மழைக்காலம் என்பதால் இக்கட்டிடம் முழுவதுமாக இடிந்து விழும் அபாயம் இருப்பதாக அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அரசு சான்றிதழ் பெற்று 30 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க முன்கூட்டியே மாணவர்களை தற்காலிகமாக வேறு பகுதிக்கு மாற்றி, கட்டிடத்தை இடித்து தரம் உயர்த்தப்பட்ட புதிய பள்ளி கட்டிடமாக கட்டித் தர வேண்டும் என முன்னாள் மாணவர்களும் அங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
School Student : மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Property Tax : இனி ஒரு கட்டிடமும் தப்பாது.! சொத்து வரியை வசூலிக்க அரசு போட்ட மாஸ்டர் பிளான்- என்ன தெரியுமா.?
இனி ஒரு கட்டிடமும் தப்பாது.! சொத்து வரியை வசூலிக்க அரசு போட்ட மாஸ்டர் பிளான்- என்ன தெரியுமா.?
Holiday Special Bus : 2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
School Student : மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
Embed widget