மேலும் அறிய

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சீர்காழியில் மாணவர்கள் இணைந்து உருவாக்கிய பிரமாண்ட நேரு உருவம்! மெய்சிலிர்த்து போன மக்கள்..!

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பள்ளி மாணவர்கள் இணைந்து பிரமாண்ட நேரு உருவதை உருவாக்கியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சீர்காழி: இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் 136-வது பிறந்த நாளான இன்று, நாடு முழுவதும் குழந்தைகள் தின விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள பெஸ்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள், வழக்கமான கொண்டாட்ட முறைகளில் இருந்து விலகி, ஒரு வித்தியாசமான மற்றும் பிரமாண்டமான முயற்சியின் மூலம் நேருவுக்கு மரியாதை செலுத்தினர். ஏராளமான மாணவ மாணவிகள் இணைந்து உருவாக்கிய அதிசயம் பெஸ்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகம் முழுவதும் விழாக்கோலத்தை ஏற்படுத்தியுயது. 

சீர்காழி பள்ளியில் நேருவின் பிறந்தநாள் கொண்டாட்டம் 

பள்ளி நிர்வாகம், நேருவின் பிறந்தநாளை மறக்க முடியாத வகையில் கொண்டாடத் திட்டமிட்டது. இதன் ஒரு பகுதியாக, பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் அனைவரும் ஒன்றிணைந்து, பள்ளி வளாகத்தின் திறந்தவெளியில் நின்று, மனித வடிவங்களைக் (Human Formation) கொண்டு பண்டிட் ஜவஹர்லால் நேருவின் உருவத்தைப் பிரமாண்டமாக உருவாக்கினர்.

பள்ளியின் பயிலும் மாணவர்கள், முன்னரே திட்டமிட்டபடி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், வெவ்வேறு வண்ண உடையணிகளை அணிந்து நின்றனர். மேலிருந்து பார்க்கும்போது, இந்த மனித வடிவங்களே நேருவின் முக அமைப்பு, அவரது தொப்பி மற்றும் கோட் ஆகியவற்றைத் தத்ரூபமாகப் பிரதிபலிக்கும் வகையில் துல்லியமாக உருவாக்கப்பட்டிருந்தது.

துல்லியமான வடிவமைப்பு 

இத்தகைய ஒரு பிரமாண்டமான மனித உருவத்தை உருவாக்குவது என்பது சாதாரண செயல் அல்ல. இதற்குத் துல்லியமான திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் கடுமையான பயிற்சி தேவைப்படுகிறது. நேருவின் உருவத்தை வளாகத்தில் எந்த இடத்தில், எவ்வளவு பெரிய அளவில் உருவாக்க வேண்டும் என்று பள்ளி ஆசிரியர்கள் குழுவினர் பல வாரங்களுக்கு முன்பே திட்டமிட்டனர். நேருவின் உருவப் பொலிவுக்கும், வண்ண மாறுபாடுகளுக்கும் ஏற்ப மாணவர்கள் வெவ்வேறு நிறம் கொண்ட ஆடைகள் அல்லது குறியீடுகளை அணிந்து குறிப்பிட்ட புள்ளிகளில் நிறுத்தப்பட்டனர். மாணவர்கள் அனைவரும் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, இறுதி வடிவமைப்புக்கு வருவதற்கு முன்பு பலமுறை ஒத்திகை பார்த்ததன் பயனாக இதனை சாத்திய படுத்தியுள்ளனர்.

தலைமை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி, மாணவர்கள் அனைவரும் தங்கள் இடங்களில் நிலை கொண்டு நின்றபோது, கீழே இருந்து பார்க்கும்போது வெறும் கூட்டமாகத் தெரிந்தாலும், சற்று உயரமான இடத்தில் இருந்து காணும்போது, நேருவின் சிரிக்கும் முகம் தெளிவாகத் தெரிந்தது. மாணவர்களின் இந்த ஒற்றுமையும், ஒழுக்கமும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

நேருவுக்கு நெகிழ்ச்சியான மரியாதை

மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உருவத்தை உருவாக்கிய பின்னர், அந்த மனித உருவ அமைப்பின் நடுவில் நின்று, பள்ளி முதல்வரும், ஆசிரியர்களும் நேருவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்வு குறித்து பேசிய பள்ளி முதல்வர், "குழந்தைகளின் மாமா என்று அன்போடு அழைக்கப்பட்ட நேருவின் பிறந்தநாளை, குழந்தைகளே இணைந்து அவரது உருவத்தை உருவாக்கி மரியாதை செலுத்துவது ஒரு உணர்வுபூர்வமான நிகழ்வு. ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் தேசபக்தி ஆகியவற்றை மாணவர்களுக்கு உணர்த்த இந்த முயற்சி ஒரு சிறந்த வழியாயிற்று" என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.மாணவர்கள் தாங்கள் பங்கேற்ற இந்த வித்தியாசமான நிகழ்வால் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். 

கல்வி மற்றும் ஒழுக்கத்தின் எடுத்துக்காட்டு

சீர்காழி பெஸ்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியின் இந்த முயற்சி, குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தை வெறும் கேளிக்கை நிகழ்வாக மட்டுமின்றி, தேசத் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் ஒரு ஒழுக்கமான நிகழ்வாகவும் மாற்றிக் காட்டியுள்ளது. பள்ளி மாணவர்களின் ஒருங்கிணைப்பும், அவர்கள் காட்டிய ஒழுக்கமும், இத்தகைய பிரமாண்டமான மற்றும் சிக்கலான வடிவமைப்பு வெற்றிகரமாக அமைய முக்கிய காரணமாய் அமைந்தது.

பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களும் இந்தப் பிரமாண்டமான மனித உருவத்தைப் பார்வையிட்டு மாணவர்களுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். இந்த நிகழ்வு, எதிர்காலத் தலைமுறையினருக்குப் பழைய தலைவர்களின் பங்களிப்பையும், கூட்டுச் செயல்பாட்டின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாய் அமைந்தது என்பதில் ஐயமில்லை.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

நிறைவேற போகும் ஆயிரக்கணக்கானோரின் பேராசிரியர்களின் கனவு..! 
நிறைவேற போகும் ஆயிரக்கணக்கானோரின் பேராசிரியர்களின் கனவு..! 
Student admissions in colleges : மாணவர்களுக்கு குஷி.! கல்லூரிகளில் கூடுதல் பாடப்பிரிவு, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி- வெளியான அரசாணை
மாணவர்களுக்கு குஷி.! கல்லூரிகளில் கூடுதல் பாடப்பிரிவு, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி- வெளியான அரசாணை
ITI படிக்க ஆசையா? ரூ.20,000 சம்பளத்தில் வேலை உறுதி! – விழுப்புரம் கலெக்டரின் முக்கிய அறிவிப்பு!
ITI படிக்க ஆசையா? ரூ.20,000 சம்பளத்தில் வேலை உறுதி! – விழுப்புரம் கலெக்டரின் முக்கிய அறிவிப்பு!
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: கர்நாடகத்தவருக்கு தமிழக அரசின் பிரதிநிதி பதவியா? உரிமை காக்கப்படுமா? தவெக-வை விளாசும் அதிமுக
ADMK: கர்நாடகத்தவருக்கு தமிழக அரசின் பிரதிநிதி பதவியா? உரிமை காக்கப்படுமா? தவெக-வை விளாசும் அதிமுக
TVK Govt. Vs Nainar Nagendran: “காங்கிரஸின் கைப்பாவையாக செயல்படும் விஜய் அரசு வெட்கப்பட வேண்டும்“ - வறுத்தெடுத்த நயினார்
“காங்கிரஸின் கைப்பாவையாக செயல்படும் விஜய் அரசு வெட்கப்பட வேண்டும்“ - வறுத்தெடுத்த நயினார்
Annamalai: சிஎம் விஜய்யின் 'ரெய்டு' ஆக்ஷன், எ.வ.வேலுவோடு நிறுத்தாதீங்க - ஊழல் வேட்டைக்கு அண்ணாமலை கொடுத்த கிரீன் சிக்னல்
சிஎம் விஜய்யின் 'ரெய்டு' ஆக்ஷன், எ.வ.வேலுவோடு நிறுத்தாதீங்க - ஊழல் வேட்டைக்கு அண்ணாமலை கொடுத்த கிரீன் சிக்னல்
கையை விரித்த கனிமொழி.. கை கொடுத்த அமைச்சர் ஸ்ரீநாத்! தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கையை விரித்த கனிமொழி.. கை கொடுத்த அமைச்சர் ஸ்ரீநாத்! தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Minister Sarathkumar: ‘Drug‘ பயன்படுத்தினேனா.? அவசரப்பட்டுட்டீங்களே.! சர்ச்சை வீடியோவிற்கு அமைச்சர் சரத்குமார் விளக்கம்
‘Drug‘ பயன்படுத்தினேனா.? அவசரப்பட்டுட்டீங்களே.! சர்ச்சை வீடியோவிற்கு அமைச்சர் சரத்குமார் விளக்கம்
EV Vs CNG Value: EV காரா.? CNG காரா.? நீண்ட கால பயன்பாட்டில் பணத்தை மிச்சப்படுத்துவதில் எது சிறந்தது.? ஒப்பீடு இதோ
EV காரா.? CNG காரா.? நீண்ட கால பயன்பாட்டில் பணத்தை மிச்சப்படுத்துவதில் எது சிறந்தது.? ஒப்பீடு இதோ
Gold Rate June 26th: ஒரே நாளில் இரு முறை ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி; மாலையிலும் விலை உயர்வு; தற்போது விலை என்ன.?
ஒரே நாளில் இரு முறை ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி; மாலையிலும் விலை உயர்வு; தற்போது விலை என்ன.?
Upcoming Honda Cars: ஹூண்டாய், கியாவுக்கு தலைவலி.! க்ரெட்டா, செல்டோஸ்-க்கு போட்டியாக 3 கார்களை களமிறக்கும் ஹோண்டா
ஹூண்டாய், கியாவுக்கு தலைவலி.! க்ரெட்டா, செல்டோஸ்-க்கு போட்டியாக 3 கார்களை களமிறக்கும் ஹோண்டா
Embed widget