மேலும் அறிய

அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி, மாலை அணிவித்த கரூர் ஆட்சியர்

கரூரில் "அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம் தலைப்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு மாலையும் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

கரூரில் "அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்" என்ற தலைப்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு 


அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி, மாலை அணிவித்த கரூர் ஆட்சியர்

பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து, பள்ளியில் புதிதாக சேரும் குழந்தைகளுக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.


அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி, மாலை அணிவித்த கரூர் ஆட்சியர்

கரூர் கோட்டைமேடு மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் "அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்" மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

முன்னதாக பள்ளி வளாகத்தில் தொடக்கப் பள்ளிகளில் புதிதாக சேரும் மாணவ, மாணவிகளுக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி, மாலை அணிவித்த கரூர் ஆட்சியர்

தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 3ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் ஏப்ரல் 17ஆம்தேதி முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்று வருகிறது. அதன்படி கரூர் மாவட்டத்தின் 46 பள்ளிகளில் இவ்விழிப்புணர்வு பேரணி 19.04.2023 முதல் 28.04.2023 வரை நடைபெறவுள்ளது. இப்பேரணியில் மாவட்ட அளவில் தயார் செய்யப்பட்ட ஒரு வாகனம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான அரசின் நலத்திட்டங்களான எண்ணும் எழுத்தும் கற்பித்தல் முறை, மன்ற செயல்பாடுகள், காலை உணவு, சத்தான சத்துணவுடன் வாரம் ஐந்து முட்டை வழங்குதல், அரசுப் பள்ளிகளில் தரமான இலவசக்கல்வி ஆகியவை வழங்கப்படுவதை பொதுமக்கள் அனைவரும் அறியும் வண்ணம் பேனர்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் மூலம் மாணவர்களின் பெற்றோருக்கு தெரியப்படுத்தும் வகையில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளின் அருகில் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள், மக்கள் குடியிருப்புகள் அதிகமுள்ள இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

சுகாதாரத்துறை பணிகள் குறித்தான ஆய்வுக்கூட்டம் மற்றும் மகப்பேறு மரணம், குழந்தை மரணம் குறித்தான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(18.04.2023) சுகாதாரத்துறை பணிகள் குறித்தான ஆய்வுக்கூட்டம் மற்றும் மகப்பேறு மரணம், குழந்தை மரணம் குறித்தான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர்  தலைமையில் நடைபெற்றுது.

இக்கூட்டத்தில் உதிரம் உயர்த்துவோம் திட்டத்தில் பரிசோதனை செய்யப்பட்ட 17000 மாணவியர்களுக்கு வரப்பெற்ற முடிவில் Mild, Moderate, Severe Anemia என வகைப்படுத்தி அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்தும்,. கரூர் மாவட்டத்தில் நடைபெறும் சிசு மரணம் குறித்த ஆய்வு நடத்தப்பட்டு இறப்பிற்கான காரணங்களை ஆய்வு செய்து அவற்றில் சிசு இறப்பை முற்றிலும் தவிர்க்க மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதேபோல் குழந்தை மரணம் குறித்தும் ஒவ்வொரு குழந்தை பிறந்த பின்பும், பிரசவகால பின் கவனிப்பு 48 நாட்கள் வரை கட்டாயம் கிராம சுகாதார செவிலியர்களால் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

குழந்தைகளுக்கு பிறப்பிலேயே ஏற்படும் நோய்கள் கண்டறிதல் பற்றி ஆய்வு செய்து பிறவி காதுகேளாமை போன்ற நோய்கள் கண்டறிதல் துரிதமாக கண்டறிய வேண்டும்.மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு, எல்லா மருத்துவமனைகளிலும் குறைந்தது 3 மாத இருப்புகள் இருப்பதை அந்தந்த மருத்துவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.. மேலும் காய்ச்சல் மற்றும் டெங்கு பணிகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டு, வரும்காலங்களில் காய்ச்சல் மற்றும் டெங்குவினால் தீவிர நோய் பரவல் ஏற்படாவண்ணம் இருக்க வேண்டும்.. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏற்படும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். தொற்றா நோய்கள் கண்டறிவது மற்றும் மக்களை தேடி மருத்துவம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, இதில் கண்டறியும் விகிதம் அதிகரிக்கப்பட வேண்டும். 

இரண்டுக்கும் மேற்பட்ட நலமுடன் வாழக்கூடிய குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் மற்றும் தந்தையர்களுக்கு ஒரு சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடத்தி அதில் குடும்ப நல அறுவை சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கருவுற்ற தாய்மார்களுக்கு இரத்தசோகையினால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்து அவற்றை சரி செய்வது குறித்து ஆலோசனைகள் வழங்க வேண்டும்

தற்போது பரவிவரும் கொரோனா தொற்று குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மாவட்டத்தில் உள்ள படுக்கை வசதிகள், ஆக்ஜிசன் இருப்பு மற்றும் தேவையான மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்., தொற்று இருப்பவர்களின் உறவினர்கள் மற்றும் தொடர்பில் உள்ளவர்களுக்கும் சளி மாதிரிகள் எடுத்து கொரோனா பரிசோதனை செய்யவும் மேலும், அதிகப்படியான சளி தடவல் மாதிரிகள் எடுத்து கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் மேலும் பொது இடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர்.இ.ஆ.ப.. அவர்கள் மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) மரு.ரமாமணி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.சந்தோஷ்குமார்,  கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முதல்வர்(பொ) மரு.ராஜர மற்றும் மருத்துவ அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Embed widget