மேலும் அறிய

Kanimozhi: அட்சயப் பாத்திரத்தை பிடுங்கி, பிச்சை பாத்திரத்தை தருவதா?- கல்விக்கான நிதி பற்றி கனிமொழி காட்டம்!

Kanimozhi karunanidhi MP in loksabha: கல்விப் பொதுப் பட்டியலில் இருந்தாலும் எங்களிடமிருந்து வரியை வாங்கிக் கொண்டு, நிதியை தர மறுக்கிறீர்கள் என்று மத்திய அரசை, கனிமொழி எம்.பி. விமர்சித்துள்ளார்.

மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேசியதாவது:

''தமிழ்நாட்டில் கல்விக்காக 12 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு வெறும் 2.5 சதவீதத்தை மட்டுமே ஒதுக்கி உள்ளது. அருகில் உள்ள பூட்டானில் கல்விக்காக 6 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி பொதுப் பட்டியலில் இருக்கிறது. ஆனால் மத்திய அரசு, கல்வி ஏதோ தங்களுக்கு மட்டுமே உரிமையான ஒன்று என்பதுபோல நடந்து கொள்கிறது. கல்விக்காக ஒதுக்கீடு செய்யப்படக்கூடிய நிதியில் 60 சதவீதம் மத்திய அரசு தர வேண்டும். 40 சதவீதத்தை மாநில அரசு தர வேண்டும். ஆனால் கல்விக்காகத் தமிழ்நாடு அரசு 50 சதவீதத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது.

கல்விப் பொதுப் பட்டியலில் இருந்தாலும் எங்களிடமிருந்து வரியை வாங்கிக் கொண்டு, நிதியை தர மறுக்கிறீர்கள். இது மணிமேகலை (தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று) அட்சய பாத்திரத்தை பிடுங்கிக் கொண்டு பிச்சை பாத்திரத்தை வழங்கியபோல் இருக்கிறது.

இந்தியைத் திணிக்கிறீர்கள்

தமிழ்நாட்டில் உள்ள 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 15-ல் மட்டுமே தமிழ் கற்பிக்கப்படுகிறது. அதையும் நாங்கள் கெஞ்சி, கோரிக்கை வைத்தால்தான் தமிழ் ஆசிரியர் இருந்தால் தமிழ் கற்பிக்கப்படும் என்கிறீர்கள். சொல்லப்போனால், ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு கூட வாங்க முடியவில்லை, அந்த அளவுக்கு இந்தியைத் திணித்து வருகிறீர்கள். இந்தியை மட்டுமா திணிக்கிறீர்கள்? சமஸ்கிருதத்தையும் சேர்த்துத் திணிக்கிறீர்கள். நீங்கள் எங்களின் மொழிக் கொள்கையை விமர்சிக்கிறீர்களா?

குஜராத் முதலமைச்சராக இருந்தபோது மாநில உரிமைகள் பற்றிப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இப்போது அவரே மாநில உரிமைகளைப் பறிக்கிறார்.

குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் திட்டத்துக்குக் கூட போதிய நிதி இல்லை

ஒரு மாணவர் இருந்தால்கூட பள்ளியை மூடாமல் நடத்திக்கொண்டிருக்கிறோம். ஆனால் நீங்கள் மாணவர்கள் குறைவாக இருக்கிறார்கள் என்று பள்ளியை மூடிவிட்டு, பல கி.மீ. தொலைவில் உள்ள பள்ளிகளுக்குக் குழந்தைகளைச் செல்ல வைக்கிறீர்கள். பிஎம் போஷன் என்னும் குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் திட்டத்துக்குக் கூட போதிய நிதி வழங்க மறுக்கிறீர்கள்.

உரிமைகளில் தலையிட ஒன்றிய அரசாங்கம் யார்?

பிஎம் ஸ்ரீ திட்டத்தில் சேராததால் மத்திய அரசு தமிழ்நாட்டு அரசுக்கு 500 கோடி நிதியை வழங்க மறுக்கிறது. எங்களின் கல்விக் கொள்கையில், மக்களின் நம்பிக்கையில், மக்கள் தேர்ந்தெடுத்திருக்கும் மக்கள் அரசின் உரிமைகளில் தலையிடுவதற்கு ஒன்றிய அரசாங்கம் யார்?’’

இவ்வாறு கனிமொழி எம்.பி. மக்களவையில் பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Rasi Palan Today, Sept 29: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை: உங்கள் ராசிக்கான பலன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Rasi Palan Today, Sept 29: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை: உங்கள் ராசிக்கான பலன்
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
Breaking News LIVE 29th SEP 2024: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
Breaking News LIVE 29th SEP 2024: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
Embed widget