மேலும் அறிய

அடடே.. அரசு பொறியியல் கல்லூரிகளில் அறிமுகமாகும் புது வசதி; அமைச்சர் அசத்தல் அறிவிப்பு

 செயற்கை நுண்ணறிவு மற்றும்‌ எந்திரனியல்‌ தொழில்நுட்ப ஆய்வகங்கள்‌, மாணாக்கர்களின்‌ திறமைகளை வளர்ப்பதிலும்‌, திறமையான மனிதவளத்தினை உருவாக்குவதிலும்‌ முக்கிய பங்கு வகிக்கிறது.

உயர் கல்வித்துறையின்‌ மூலம்‌ தமிழ்நாட்டின்‌ பல்வேறு பகுதிகளில்‌ உள்ள 11 அரசு பொறியியல்‌ கல்லூரிகளில்‌ புதிய நவீன ஆய்வகங்களை அமைக்க ரூ.12.38 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்று உயர் கல்வித்துறை அமைச்சர்‌ கோவி.செழியன்‌ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் கூறி உள்ளதாவது:

’’கடந்த 2024-2025 ஆம்‌ ஆண்டின்‌ உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கையில்‌ அறிவிக்கப்பட்டஅறிவிப்புகளின்படி மாநிலத்தில்‌ உள்ள 11 அரசு பொறியியல்‌ கல்லூரிகளில்‌ புதிய நவீன ஆய்வகங்களை அமைக்க தற்போது தமிழ்நாடு முதலமைச்சர்‌ நிதிஒதுக்கீடு வழங்கியுள்ளார்கள்‌.

இணைய ஆய்வகம்‌

மாணாக்கர்கள்‌, பொருட்களின்‌ இணைய பயன்பாடுகள்‌ மற்றும்‌ பிற மேம்பட்ட உட்பொதிக்கப்பட்ட அமைப்பு அடிப்படையிலான திட்டத்தை உருவாக்க காரைக்குடி மற்றும்‌ போடிநாயக்கனூர்‌ ஆகிய இடங்களில்‌ உள்ள 2 அரசு பொறியியல்‌ கல்லூரிகளில்‌ பொருட்களின்‌ இணைய ஆய்வகம்‌ (IOT Library) அமைக்க தலா ரூ.92,10,000 வீதம்‌ மொத்தம்‌ ரூ.1,84,20,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 வேலூர்‌, தஞ்சாவூர்‌ மற்றும்‌ திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில்‌ உள்ள 3 அரசு பொறியியல்‌ கல்லூரிகளில்‌ பொருள்சேர்‌ உற்பத்தி ஆய்வகம்‌ அமைக்க தலா ரூ.1,16,00,000 வீதம்‌, மொத்தம்‌ ரூ.3,48,00,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மையம்‌ தொழில்துறை, அரசு மற்றும் கல்வியாளர்களை ஒன்றிணைத்து ஆராய்ச்சி மற்றும்‌ மேம்பாட்டை ஒருங்கிணைத்து நிலையான தயாரிப்புகளுக்கான மேம்பாடு, குறைந்த செலவில்‌ அதிக உற்பத்தித்திறனைக்‌ கொண்டிருப்பது, தொடர்புடைய கல்வி மற்றும்‌ பயிற்சியை ஆதரிப்பது மற்றும்‌ பல நோக்கங்களைக்‌ கொண்டுள்ளதாகும்‌.

 செயற்கை நுண்ணறிவு மற்றும்‌ எந்திரனியல்‌ தொழில்நுட்ப ஆய்வகங்கள்‌, மாணாக்கர்களின்‌ திறமைகளை வளர்ப்பதிலும்‌, திறமையான மனிதவளத்தினை உருவாக்குவதிலும்‌ முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே கோயம்புத்தூர்‌, சேலம்‌ மற்றும்‌ பர்கூர்‌ ஆகிய இடங்களில்‌ உள்ள 3 அரசு பொறியியல்‌ கல்லூரிகளில்‌ செயற்கை நுண்ணறிவு மற்றும்‌ எந்திரனியல்‌ ஆய்வகம்‌ அமைக்க தலா ரூ.1,31,87.975 வீதம்‌ மொத்தம்‌ ரூ.3,95,63,926 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எதற்காக இந்த ஆய்வகங்கள்?

இந்த ஆய்வகம்‌, மாணாக்கர்களுக்கு பலவிதமான பயிற்சி திட்டங்கள்‌, பட்டறைகள்‌ மற்றும்‌ படிப்புகளை வழங்கும்‌. மின்சார வாகன வடிவமைப்பு மற்றும்‌ மேம்பாடு, மோட்டார்‌ மற்றும்‌ மோட்டார்‌ கட்டுப்பாடு, மின்சார வாகன மின்கலன்கள்‌ மற்றும்‌ மின்கல மேலாண்மை அமைப்புகள்‌, மின்னேற்றி, உட்பொதிக்கப்பட்ட அமைப்புகள்‌, பொருட்களின்‌ இணையம்‌ மற்றும்‌ தானியங்கி வாகன மின்னணுவியல்‌ ஆகியவற்றில்‌ ஆராய்ச்சி மற்றும்‌ மேம்பாட்டை துரிதப்படுத்த, திருநெல்வேலி, தருமபுரி மற்றும்‌ ஈரோடு ஆகிய இடங்களில்‌ உள்ள 3 அரசு பொறியியல்‌ கல்லூரிகளில்‌ மின்சார வாகன தொழில்நுட்ப ஆய்வகம்‌ அமைக்க தலா ரூ.1,03,33,910 வீதம்‌, மொத்தம்‌ ரூ.3,10.01,730 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,

இதன்மூலம்‌ தமிழ்நாட்டில்‌ உள்ள 11 அரசு பொறியியல்‌ கல்லூரிகளில்‌ அப்பகுதியில்‌ உள்ள மாணவர்களின்‌ தேவையினை பூர்த்தி செய்ய இந்த புதிய நவீன ஆய்வகங்கள்‌ அமையும்‌ என்பதில்‌ ஐய்யமில்லை. இவற்றை அமைக்க மொத்தம்‌ ரூ.12.38 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணைகள்‌ வெளியிட்டுள்ளது’’.

இவ்வாறு உயர்கல்வித்துறை அமைச்சர்‌ தெரிவித்துள்ளார்‌.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Vijay: குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Vijay: குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Embed widget