மேலும் அறிய

Students Suicide: அதிகரிக்கும் மாணவர்கள் தற்கொலை; நடவடிக்கை என்ன? - அமைச்சர் அன்பில் பதில்

இதை தொலைபேசியில்‌ நாம்‌ பேசினால்‌ நமக்கு உரிய தீர்வு கிடைக்குமா என்று பயப்படுகிறவர்களுக்கு என்று நாங்கள்‌ இப்போது துறையின்‌ சார்பாக portal கொண்டு வர இருக்கிறோம்‌.

பள்ளி மாணவர்களின்‌ தற்கொலை அதிகரித்து வருகிறதே, இதைத்‌ தடுப்பதற்கு ஏதாவது முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறதா என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்ததாவது: 

’’வருகிற 27ஆம் தேதி நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சரின்‌ தலைமையில்‌ கூட்டம்‌ நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே, RDS case scheme மூலமாக கல்வி என்று வரும்போது 413 blocks இருக்கிறது. ஒவ்வொரு blocks-க்கும்‌ இரண்டு மருத்துவர்கள்‌ இருக்கிறார்கள்‌. மனநல counselling எப்படி கொடுக்க வேண்டும்‌ என்று அவர்களுக்கு நாங்கள்‌ பயிற்சி கொடுத்து வருகிறோம்‌. 

கிட்டத்தட்ட 800 மருத்துவர்கள்‌ தயாராக இருக்கிறார்கள்‌. அதில்‌ ஒவ்வொரு ஒன்றியத்திலும்‌ இரண்டு மருத்துவர்கள்‌ அங்கே இருக்கின்ற ஒவ்வொரு பள்ளிக்கூடத்திற்கு சென்று அங்கே உள்ள குழந்தைகளுக்கு கவுன்சிலிங்‌ வழங்குவது ஆகியவற்றைச் செய்வர். அதற்கான நிகழ்ச்சியை நம்முடைய  முதலமைச்சர்‌ வருகிற 27ஆம்‌ தேதி அன்று தொடங்கி வைக்கிறார்‌.

அதுமட்டுமல்ல, மாணவர்களுக்கு ஏற்கனவே மனரீதியாக மன அழுத்தம்‌ இருக்கின்றது, ஏதாவது ஒன்றை நண்பனிடம்‌ சொல்ல முடியவில்லை. ஆசிரியரிடம்‌ சொல்ல முடியவில்லை. பெற்றோரிடம்‌ சொல்லமுடியவில்லை. அப்படியிருப்பவர்கள்‌ எப்படி மற்றவர்களிடம்‌ பகிர்ந்து கொள்ளமுடியும்‌ என்பதற்காகத்‌ தான்‌, “மாணவர்‌ மனசு” என்று ஒரு பெட்டியை ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும்‌ வைத்து, ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை அது
திறக்கப்படும்‌ என்று நாம்‌ சொல்லியிருக்கின்றோம்‌. அதுமட்டுமல்லாமல்‌, 14417 எண்ணாக இருந்தாலும்‌ சரி, 1098 ஆக இருந்தாலும்‌ சரி, அந்த மாணவச்‌ செல்வங்களுக்கு இந்த எண்ணை ஒவ்வொரு வகுப்பறையிலும்‌ POCSO issue வரும்போது அதை நாங்கள்‌ ஒட்டி வைத்திருக்கின்றோம்‌. 

அதையும்‌ பேசுவதற்கு அவர்கள்‌ சங்கடப்படுகிறார்கள்‌, தயங்குகிறார்கள்‌, இதை தொலைபேசியில்‌ நாம்‌ பேசினால்‌ நமக்கு உரிய தீர்வு கிடைக்குமா என்று பயப்படுகிறவர்களுக்கு என்று நாங்கள்‌ இப்போது துறையின்‌ சார்பாக portal கொண்டு வர இருக்கிறோம்‌. அதை website மூலமாக, அந்தக்‌ குழந்தைகள்‌ உள்ளே சென்று தங்களைப்‌ பற்றி சொல்லலாம்‌, சொல்லாமலும்‌ கூட அவர்கள்‌, என்ன பிரச்சனை அந்தப்‌ பள்ளியில்‌ நடக்கிறது என்பதை பதிவு செய்யலாம்‌, அலலது சுற்றுவட்டார சமூகத்தில்‌ என்ன பிரச்சனைகள்‌ வருகிறது என்று சொல்லலாம்‌.

கண்டிப்பாக அது ஒரு accountability ஆக வரும்போது, அந்தப்‌ பிரச்சினைக்கு தீர்வுகாண்கின்ற பணியில்‌ அதற்கான portalலையும்‌ மிக விரைவில்‌ நாங்கள்‌ வெளியிட இருக்கின்றோம்‌’’.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். 


Students Suicide: அதிகரிக்கும் மாணவர்கள் தற்கொலை; நடவடிக்கை என்ன? - அமைச்சர் அன்பில் பதில்

ஏற்கெனவே உள்ள நடமாடும்‌ ஆலோசனை மையம்‌ தற்போது செயல்படுகின்றதா என்று கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதிலளித்த அவர், ''ஏற்கனவே 17 பேர்‌ இருந்தார்கள்‌, இப்போது பலர்‌ பணி ஓய்வில்‌ சென்று விட்டதால்‌, தற்போது 7 பேர்‌ மட்டுமே இருக்கின்றார்கள்‌. ஆகவே, அந்த 7 பேர்‌ என்பது கண்டிப்பாக போதாது. 

38,000 அரசுப்‌ பள்ளிகள்‌ இருக்கின்றன. எல்லாப்‌ பள்ளிகளும்‌ சேர்த்து மொத்தம்‌ 58,000 பள்ளிகள்‌ இருக்கின்றன. அதற்காகத்தான்‌ நான்‌ சொன்னது போல, ஒவ்வொரு ஒன்றியத்திறகும்‌ 413 கல்வி ஒன்றியம்‌ வைத்திருக்கிறோம்‌ என்று சொன்னால்‌, அதில்‌ நம்முடைய RDS Case scheme மூலமாக இரண்டு மருத்துவர்கள்‌ இருப்பார்கள்‌. கிட்டத்தட்ட 600 மருத்துவர்கள்‌ இருக்கிறார்கள்‌. அவர்களைத்தான்‌ நாங்கள்‌ இதற்கு பயன்படுத்த இருக்கிறோம்‌'' என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
Embed widget