மேலும் அறிய

Students Suicide: அதிகரிக்கும் மாணவர்கள் தற்கொலை; நடவடிக்கை என்ன? - அமைச்சர் அன்பில் பதில்

இதை தொலைபேசியில்‌ நாம்‌ பேசினால்‌ நமக்கு உரிய தீர்வு கிடைக்குமா என்று பயப்படுகிறவர்களுக்கு என்று நாங்கள்‌ இப்போது துறையின்‌ சார்பாக portal கொண்டு வர இருக்கிறோம்‌.

பள்ளி மாணவர்களின்‌ தற்கொலை அதிகரித்து வருகிறதே, இதைத்‌ தடுப்பதற்கு ஏதாவது முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறதா என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்ததாவது: 

’’வருகிற 27ஆம் தேதி நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சரின்‌ தலைமையில்‌ கூட்டம்‌ நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே, RDS case scheme மூலமாக கல்வி என்று வரும்போது 413 blocks இருக்கிறது. ஒவ்வொரு blocks-க்கும்‌ இரண்டு மருத்துவர்கள்‌ இருக்கிறார்கள்‌. மனநல counselling எப்படி கொடுக்க வேண்டும்‌ என்று அவர்களுக்கு நாங்கள்‌ பயிற்சி கொடுத்து வருகிறோம்‌. 

கிட்டத்தட்ட 800 மருத்துவர்கள்‌ தயாராக இருக்கிறார்கள்‌. அதில்‌ ஒவ்வொரு ஒன்றியத்திலும்‌ இரண்டு மருத்துவர்கள்‌ அங்கே இருக்கின்ற ஒவ்வொரு பள்ளிக்கூடத்திற்கு சென்று அங்கே உள்ள குழந்தைகளுக்கு கவுன்சிலிங்‌ வழங்குவது ஆகியவற்றைச் செய்வர். அதற்கான நிகழ்ச்சியை நம்முடைய  முதலமைச்சர்‌ வருகிற 27ஆம்‌ தேதி அன்று தொடங்கி வைக்கிறார்‌.

அதுமட்டுமல்ல, மாணவர்களுக்கு ஏற்கனவே மனரீதியாக மன அழுத்தம்‌ இருக்கின்றது, ஏதாவது ஒன்றை நண்பனிடம்‌ சொல்ல முடியவில்லை. ஆசிரியரிடம்‌ சொல்ல முடியவில்லை. பெற்றோரிடம்‌ சொல்லமுடியவில்லை. அப்படியிருப்பவர்கள்‌ எப்படி மற்றவர்களிடம்‌ பகிர்ந்து கொள்ளமுடியும்‌ என்பதற்காகத்‌ தான்‌, “மாணவர்‌ மனசு” என்று ஒரு பெட்டியை ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும்‌ வைத்து, ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை அது
திறக்கப்படும்‌ என்று நாம்‌ சொல்லியிருக்கின்றோம்‌. அதுமட்டுமல்லாமல்‌, 14417 எண்ணாக இருந்தாலும்‌ சரி, 1098 ஆக இருந்தாலும்‌ சரி, அந்த மாணவச்‌ செல்வங்களுக்கு இந்த எண்ணை ஒவ்வொரு வகுப்பறையிலும்‌ POCSO issue வரும்போது அதை நாங்கள்‌ ஒட்டி வைத்திருக்கின்றோம்‌. 

அதையும்‌ பேசுவதற்கு அவர்கள்‌ சங்கடப்படுகிறார்கள்‌, தயங்குகிறார்கள்‌, இதை தொலைபேசியில்‌ நாம்‌ பேசினால்‌ நமக்கு உரிய தீர்வு கிடைக்குமா என்று பயப்படுகிறவர்களுக்கு என்று நாங்கள்‌ இப்போது துறையின்‌ சார்பாக portal கொண்டு வர இருக்கிறோம்‌. அதை website மூலமாக, அந்தக்‌ குழந்தைகள்‌ உள்ளே சென்று தங்களைப்‌ பற்றி சொல்லலாம்‌, சொல்லாமலும்‌ கூட அவர்கள்‌, என்ன பிரச்சனை அந்தப்‌ பள்ளியில்‌ நடக்கிறது என்பதை பதிவு செய்யலாம்‌, அலலது சுற்றுவட்டார சமூகத்தில்‌ என்ன பிரச்சனைகள்‌ வருகிறது என்று சொல்லலாம்‌.

கண்டிப்பாக அது ஒரு accountability ஆக வரும்போது, அந்தப்‌ பிரச்சினைக்கு தீர்வுகாண்கின்ற பணியில்‌ அதற்கான portalலையும்‌ மிக விரைவில்‌ நாங்கள்‌ வெளியிட இருக்கின்றோம்‌’’.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். 


Students Suicide: அதிகரிக்கும் மாணவர்கள் தற்கொலை; நடவடிக்கை என்ன? - அமைச்சர் அன்பில் பதில்

ஏற்கெனவே உள்ள நடமாடும்‌ ஆலோசனை மையம்‌ தற்போது செயல்படுகின்றதா என்று கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதிலளித்த அவர், ''ஏற்கனவே 17 பேர்‌ இருந்தார்கள்‌, இப்போது பலர்‌ பணி ஓய்வில்‌ சென்று விட்டதால்‌, தற்போது 7 பேர்‌ மட்டுமே இருக்கின்றார்கள்‌. ஆகவே, அந்த 7 பேர்‌ என்பது கண்டிப்பாக போதாது. 

38,000 அரசுப்‌ பள்ளிகள்‌ இருக்கின்றன. எல்லாப்‌ பள்ளிகளும்‌ சேர்த்து மொத்தம்‌ 58,000 பள்ளிகள்‌ இருக்கின்றன. அதற்காகத்தான்‌ நான்‌ சொன்னது போல, ஒவ்வொரு ஒன்றியத்திறகும்‌ 413 கல்வி ஒன்றியம்‌ வைத்திருக்கிறோம்‌ என்று சொன்னால்‌, அதில்‌ நம்முடைய RDS Case scheme மூலமாக இரண்டு மருத்துவர்கள்‌ இருப்பார்கள்‌. கிட்டத்தட்ட 600 மருத்துவர்கள்‌ இருக்கிறார்கள்‌. அவர்களைத்தான்‌ நாங்கள்‌ இதற்கு பயன்படுத்த இருக்கிறோம்‌'' என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget