JEE Advanced: ஜேஇஇ அட்வான்ஸ்டு முறைகேடு புகார்: ஐஐடி ரூர்க்கி ஆய்வில் வெளியான உண்மை!
ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முறைகேடு புகார்கள்: 2 மாணவர்களின் மதிப்பெண்களில் மட்டுமே முரண்பாடு என ஐஐடி ரூர்க்கி விளக்கம்!

ஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஐஐடி ரூர்கி முக்கிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது. தாள் 1 மற்றும் தாள் 2 ஆகிய இரண்டு தேர்வுகளிலும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை ஒப்பிட்டுப் பார்த்ததில், வெறும் இரண்டு விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்களில் மட்டுமே பெரிய அளவிலான முரண்பாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஐஐடி ரூர்க்கி தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள ஐஐடி உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 என இரண்டு தாள்கள் உள்ளன.
மதிப்பெண்களில் முரண்பாடா?
மாணவர்கள் இந்த இரண்டு தேர்வுகளையும் ஒரே நாளில் கட்டாயம் எழுத வேண்டும். இந்நிலையில், தேர்வில் சில மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்தன. ஒரு தேர்வில் அதிக மதிப்பெண்களும், மற்றொரு தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்களும் பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டி இந்தப் புகார்கள் முன்வைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்கள் குறித்து ஐஐடி ரூர்கி விரிவான பகுப்பாய்வை மேற்கொண்டது. ஒவ்வொரு மாணவரும் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 ஆகிய இரண்டு தாள்களிலும் பெற்ற மதிப்பெண்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் உன்னிப்பாக ஆராயப்பட்டன.
இந்த ஆய்வின் முடிவில், ஒட்டுமொத்தமாகத் தேர்வு எழுதிய மாணவர்களில் வெறும் இரண்டு பேரின் மதிப்பெண்களில் மட்டுமே இயல்புக்கு மாறான பெருமளவிலான வித்தியாசம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்த இரண்டு விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஒரு தாளில் மிக அதிக மதிப்பெண்களையும், மற்றொரு தாளில் மிகக் குறைவான மதிப்பெண்களையும் பெற்றுள்ளனர். மற்ற அனைத்து மாணவர்களின் மதிப்பெண்களும் இரண்டு தாள்களிலும் இயல்பான மற்றும் சீரான விகிதத்திலேயே அமைந்துள்ளன என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தரவுகளின் அடிப்படையில், ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் பரவலாக முறைகேடுகளோ அல்லது பெரிய அளவிலான மோசடியோ நடைபெறவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெறும் இரண்டு மாணவர்களின் முடிவுகளில் மட்டுமே இந்த முரண்பாடு இருப்பதால், தேர்வு நடைமுறைகள் மற்றும் அதன் நேர்மை குறித்து எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஐஐடி ரூர்க்கி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
Before You Go
Pregnant Woman Attack On Train | ரயிலில் கர்ப்பிணிக்கு கொடூரம்”அந்த சைக்கோவை விடாதீங்க” ஹேமராஜின் பகீர் பின்னணி!
ட்ரெண்டிங் செய்திகள்























