மேலும் அறிய

தனியார் பள்ளிக்கு இணையாக அரசுப் பள்ளியில் யூகேஜி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கரூர் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு எல்.கே.ஜி, யூ.கே.ஜிக்கு மாணவர் சேர்க்கை நடத்தி வகுப்புகளை எடுத்து வந்தனர். 

கரூரில் அரசுப் பள்ளியில் கே.ஜி வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தி மகிழ்ந்த ஆசிரியர்கள்.

 


தனியார் பள்ளிக்கு இணையாக அரசுப் பள்ளியில் யூகேஜி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

 

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் காலணியில் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு எல்.கே.ஜி, யூ.கே.ஜிக்கு மாணவர் சேர்க்கை நடத்தி வகுப்புகளை எடுத்து வந்தனர். 

 


தனியார் பள்ளிக்கு இணையாக அரசுப் பள்ளியில் யூகேஜி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

 

நேற்று இறுதி நாள் என்பதால் யூ.கே.ஜி படித்த 10 மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மாணவ, மாணவிகளுக்கு அங்கி அணிவித்தும், தொப்பி அணிவித்தும் பட்டமளிக்கப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் பட்டமளிப்பு உடை அணிந்து மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், பாராட்டுச் சான்றிதழ், பதக்கம் அணிவித்து பாராட்டினார். 

 


தனியார் பள்ளிக்கு இணையாக அரசுப் பள்ளியில் யூகேஜி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

 

இதனை பள்ளியில் படிக்கும் மற்ற மாணவ, மாணவிகள் கைதட்டி பட்டம் பெற்றவர்களை உற்சாகப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் குழந்தைகளின் பெற்றோர், ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டு வாழ்த்தினர். அரசுப் பள்ளியில் கே.ஜி படிக்கும் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா நடத்தியது, அரசுப் பள்ளிகளிலும் தனியாருக்கு இணையாக அனைத்தும் இருப்பதை வெளிக்காட்டவே நடத்தியதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.


லிட்டில் ஏஞ்சல் ஆங்கில மேல்நிலை வகுப்பு பள்ளியில் 20 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா.


கரூர் வஞ்சியம்மன் கோவில் பகுதியில் உள்ள லிட்டில் ஏஞ்சல் ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் 07.04.2023 மாலை 20 வது ஆண்டு குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக மருத்துவர் திவ்யா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி மற்றும் நாடக நிகழ்ச்சி பல்வேறு வண்ண உடைகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பிரமிப்பை ஏற்படுத்தினர். இந்த சிறப்பு நிகழ்ச்சியின் முன்னிலை பொறுப்பை பள்ளியின் தாளாளர் எண் மணிராஜ் அவர்களும் இந்த சிறப்பு நிகழ்ச்சியின் ஏற்பாட்டை பள்ளியின் முதல்வர் உஷா அவர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் இருபால் ஆசிரியர் பெருமக்களும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கரூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளி அமைப்பதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மாயனூர் ஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகத்தில்  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபு சங்கர் கரூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளி அமைப்பதற்கான  இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,

தமிழகத்தில் ஏற்கனவே 26 மாவட்டங்களில் அரசு மாதிரி பள்ளிகள் நடைபெற்று வருகிறது நடப்பு கல்வி ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மாதிரி பள்ளிகள் இயங்கும் என்று அரசு அறிவித்ததன் அடிப்படையில் வருகின்ற கல்வியாண்டு முதல் கரூர் மாவட்டத்தில் அரசு மாதிரி பள்ளி இயங்க உள்ளது. இந்தப் பள்ளி 9 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் நடைபெற உள்ளது. இப்பள்ளியில் 400 மாணவர்களும் 400 மாணவியர்களும் தங்கும் விடுதி வசதியுடன் செயல்பட உள்ளது. இப்பள்ளியில் 19 முதுகலை ஆசிரியர்களும் 10 பட்டதாரி ஆசிரியர்களும் பணிபுரிந்து பாடங்களை நடத்த உள்ளார்கள். அனைத்து வகுப்புகளும் ஸ்மார்ட் வகுப்பறைகளாக அமைக்கப்பட உள்ளது. இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பாடப் புத்தகங்களை தவிர உயர்கல்வி படிப்பதற்கான போட்டி தேர்வுகள் எழுதுவதற்கு பயிற்சி அளிக்கப்படும் குறிப்பாக எந்தவித கட்டணமும் இல்லாமல் தமிழக அரசு இப்பள்ளியை நடத்த உள்ளது. அதற்காக மாயனூர் ஆசிரியர் பயிற்சி  மைய வளாகத்தில் கரூர் அரசு மாதிரி பள்ளி நடத்துவதற்கு ஏதுவாக உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி கீதா, மாதிரி பள்ளி மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு.தீனதயாளன். கரூர் மாவட்ட மாதிரி பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி விஜயலட்சுமி கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் திரு. மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget