மேலும் அறிய

UPSC Reforms: இனி இதெல்லாம் முக்கியம்; யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் என்னென்ன மாற்றங்கள்? சீர்திருத்தங்கள் ? முழு விவரம்

UPSC Civil Services Exam 2026: யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் தொழில்நுட்ப சீர்திருத்தங்கள் மூலம் என்னென்ன மாற்றங்கள்? - முழு விவரம்

யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்  2026-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு  மற்றும் இந்திய வனப் பணித் தேர்வு ஆகியவற்றில், தேர்வர்களுக்கான அணுகுமுறையை எளிதாக்கவும், தேர்வுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் பல தொழில்நுட்ப வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டு, விண்ணப்பப் பதிவு நடந்து வருகிறது. தகுதியும் விருப்பமும் உள்ள தேர்வர்கள் பிப்ரவரி 24 வரை தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இத்தேர்வுகளின் மூலம் சிவில் சர்வீசஸ் பிரிவில் 933 காலியிடங்களும், இந்திய வனப் பணிப் பிரிவில் 80 காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

புதுப்பிக்கப்பட்ட ஆன்லைன் இணையதளம்

செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் தேர்வர்களின் வசதியை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும் தேர்வுகளை நடத்தவும் மேம்பட்ட ஆன்லைன் விண்ணப்ப இணையதளத்தை யுபிஎஸ்சி அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இணையதளம், தேர்வர்களுக்கான விண்ணப்ப முறையையும் எளிதாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.


UPSC Reforms: இனி இதெல்லாம் முக்கியம்; யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் என்னென்ன மாற்றங்கள்? சீர்திருத்தங்கள் ? முழு விவரம்

மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கான  சீர்திருத்தம்

யுபிஎஸ்சியின் மிகமுக்கியமான சீர்திருத்தங்களில் ஒன்று, நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் (PwBD) தொடர்பானது; குறிப்பாக தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்வதில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்படி, "திருத்தப்பட்ட நடைமுறையின்படி, மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கான தேர்வு மையங்களின் இட கொள்ளளவுக்கு எவ்வித உச்ச வரம்பும் இருக்காது. ஒவ்வொரு மையத்தின் தற்போதைய கொள்ளளவு மாற்றுத்திறனாளி மற்றும் மாற்றுத்திறனாளி அல்லாத தேர்வர்களால் நிரப்பப்படும். ஒரு மையம் முழுவதுமாக நிரம்பியவுடன், மாற்றுத்திறனாளி அல்லாத தேர்வர்களால் அந்த மையத்தைத் தேர்ந்தெடுக்க முடியாது.

ஆனால், மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தொடர்ந்து அதே மையத்தைத் தேர்ந்தெடுக்கும் வசதி இருக்கும். எந்தவொரு மாற்றுத்திறனாளி தேர்வருக்கும், அவர் விரும்பும் தேர்வு மையம் மறுக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்ய, தேவைப்படும் இடங்களில் கூடுதல் இடவசதி உருவாக்கப்படும்" என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கான காரணத்தை விளக்கிய யுபிஎஸ்சி தலைவர் டாக்டர் அஜய் குமார், "இந்தத் திருத்தப்பட்ட நடைமுறையின் மூலம், ஒவ்வொரு மாற்றுத்திறனாளி  தேர்வருக்கும் அவர்கள் விரும்பும் தேர்வு மையம் கிடைப்பது உறுதி செய்யப்படும். இதனால் அவர்கள் யுபிஎஸ்சி தேர்வுகளை எழுதுவது மிகவும் எளிதாகவும் வசதியாகவும் அமையும்" என்று தெரிவித்தார்.

தேர்வு மையங்களின் விரிவாக்கம்

அதிக தேவை உள்ள மையங்களின் மீதான சுமையைக் குறைக்க, யுபிஎஸ்சி தனது தேர்வு மையங்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்தியுள்ளது. டெல்லி- என்சிஆர் பகுதியில் நெரிசலைக் குறைக்க மீரட், லக்னோவைச் சுற்றியுள்ள இடங்கள் மீதான தேவையைக் குறைக்க கான்பூர் மற்றும் கட்டாக் நகருக்கு அருகிலுள்ள மையங்களுக்கு உதவ புவனேஸ்வர் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த புதிய சேர்க்கைகளுடன், முதல்நிலைத் தேர்வு மையங்களின் எண்ணிக்கை 80-லிருந்து 83-ஆக அதிகரித்துள்ளது. முதன்மைத் தேர்வைப் பொறுத்தவரை, மையங்களின் எண்ணிக்கை 24-லிருந்து 27 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் புவனேஸ்வர், ஸ்ரீநகர் மற்றும் இம்பால் ஆகியவை புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

புதிய தேர்வு மையம் அமைக்கப்படுமா?

புதுப்பிக்கப்பட்ட விண்ணப்ப இணையதளத்தில் தேர்வு மைய முன்னுரிமை தொடர்பான புதிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட மையங்களைத் தேர்ந்தெடுப்பதோடு மட்டுமல்லாமல், தேர்வர்கள் தங்களுக்கு அருகிலுள்ள விருப்பமான நகரங்களை டிராப்-டவுன் பட்டியல் மூலம் குறிப்பிட வேண்டும். இந்தத் தரவுகள் தேர்வர்களின் விருப்பங்களை அறியும் கணக்கெடுப்பாகச் செயல்படும். மேலும், சாத்தியமான இடங்களில் புதிய தேர்வு மையங்களை அமைப்பதற்கான இடங்களைக் கண்டறிய இது பயன்படுத்தப்படும்.

தொழில்நுட்பம் சார்ந்த அடையாளச் சரிபார்ப்பு

தேர்வின் நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்த, புதிய இணையதளத்தில் தொழில்நுட்பம் சார்ந்த புகைப்படச் சரிபார்ப்பு மற்றும் முக அங்கீகார வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை தேர்வு முறையின் பல்வேறு கட்டங்களில் அடையாளச் சரிபார்ப்பை மேம்படுத்தி, மிகவும் உறுதியான மற்றும் வெளிப்படையான அமைப்பை உருவாக்க உதவும்.

தேர்வர்களின் வசதி மற்றும் பங்கேற்பை எளிதாக்குவதில் அதிக கவனம் செலுத்தும் அதே வேளையில், தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேர்வுகள் நடைபெறுவதையும் இந்த சீர்திருத்தங்கள் உறுதி செய்யும் என்று யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
புதுச்சேரியில் எகிறிய MBBS அரசு சீட்டுகள்: 429 ஆக உயர்வு - முதல்வர் ரங்கசாமி அதிரடி!
புதுச்சேரியில் எகிறிய MBBS அரசு சீட்டுகள்: 429 ஆக உயர்வு - முதல்வர் ரங்கசாமி அதிரடி!
பள்ளிக்கல்வி அமைச்சரிடம் பகுதிநேர ஆசிரியர்கள் வைத்த மெகா கோரிக்கை! என்ன தெரியுமா..?
பள்ளிக்கல்வி அமைச்சரிடம் பகுதிநேர ஆசிரியர்கள் வைத்த மெகா கோரிக்கை! என்ன தெரியுமா..?
கல்லூரி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை பெற அரியர் இல்லா தேர்ச்சி அவசியமா? புதிய வழிகாட்டுதல்..
கல்லூரி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை பெற அரியர் இல்லா தேர்ச்சி அவசியமா? புதிய வழிகாட்டுதல்..

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
Tata Harrier: டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? அப்படி என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்?
டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? ஹாரியரில் என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்
Ramayana Trailer: ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
Embed widget