மேலும் அறிய

Srimathi: இருளர் பழங்குடியின் முதல் மருத்துவ மாணவியானது எப்படி? 4 முறை முயன்று நீட்டில் வென்ற ஸ்ரீமதி உத்வேகப் பேட்டி

இருளர் பழங்குடியின் முதல் மருத்துவ மாணவியானது எப்படி என்பது குறித்து ABP Nadu சார்பில் ஸ்ரீமதியிடம் பேசினேன். 

நீலகிரியில் இருந்து முதன்முறையாக மருத்துவம் படிக்க இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் ஸ்ரீமதி தேர்வாகி உள்ளார்.  நீட் தேர்வில் நான்கு முறை முயற்சித்து, நான்காவது முறையில் வெற்றிக் கனியைச் சுவைத்துள்ளார். 

இருளர் பழங்குடியின் முதல் மருத்துவ மாணவியானது எப்படி என்பது குறித்து ABP Nadu சார்பில் ஸ்ரீமதியிடம் பேசினேன். 

உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்...

நீலகிரி மாவட்டத்தைச் சுற்றிலும் இருளர், கோத்தர், குரும்பர், பணியர் உள்ளிட்ட பல்வேறு பழங்குடியின மக்கள் வசித்து வருகிறோம். கோத்தகிரி அருகே சோலூர்மட்டம் அடுத்த தும்பிபெட்டு பகுதியில் உள்ள இருளர் பழங்குடிகள் நாங்கள். அப்பா பாலன், தேயிலை எஸ்டேட்டில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். அம்மா ராதா அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். என்னுடைய தங்கை ஜனனி 10ஆம் வகுப்பு படிக்கிறார். 

எங்கு படித்தீர்கள்?

நான் நன்றாகப் படிக்க வேண்டும் என்று என்னைவிட எனது பெற்றோர் ஆசைப்பட்டனர். புனித அந்தோணியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை படித்தேன். ஹில்போர்ட் பள்ளியில் மேல்நிலை வகுப்புகளை முடித்தேன். 2019-ம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 406 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றேன். 


Srimathi: இருளர் பழங்குடியின் முதல் மருத்துவ மாணவியானது எப்படி? 4 முறை முயன்று நீட்டில் வென்ற ஸ்ரீமதி உத்வேகப் பேட்டி

நீட் தேர்வுக்குத் தயாரானது எப்படி?

பிளஸ் 2 முடித்தபோதே, சுயமாகப் படித்து நீட் தேர்வை எழுதினேன். ஆனால் வெற்றி பெறவில்லை. 2 ஆண்டுகள் நானாகவே யூடியூப் உள்ளிட்ட வீடியோக்களைப் பார்த்துப் படித்தேன். வெற்றி கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு கோவையில், தனியார் நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தேன். அப்போதும் தோல்வியே பரிசாகக் கிடைத்தது.

பிறகு என்ன நடந்தது?

தொடர்ந்து 3 ஆண்டுகள் ஏமாற்றத்தைச் சந்தித்தாலும், என்னுடைய முயற்சியைக் கைவிடவில்லை. 3ஆவது முறை 282 மதிப்பெண்களை வாங்கி இருந்தேன். அப்போது தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்பிருந்தது. போதிய பொருளாதார வசதி இல்லாததால், அப்போது மருத்துவப் படிப்பில் சேரவில்லை. 

4ஆவது முறையாக 2022ஆம் ஆண்டு நீட் தேர்வை எழுதினேன். தேர்வு முடிவுகளில் 370 மதிப்பெண்கள் பெற்றேன். மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் பங்கேற்றதில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது. 

 

Srimathi: இருளர் பழங்குடியின் முதல் மருத்துவ மாணவியானது எப்படி? 4 முறை முயன்று நீட்டில் வென்ற ஸ்ரீமதி உத்வேகப் பேட்டி

வீட்டில் இருவருமே மகள்கள். 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து மருத்துவப் படிப்புக்குத் தயாராகப் பெற்றோர்கள் ஒத்துக் கொண்டார்களா?

சிறு வயதில் இருந்தே மருத்துவராக வேண்டும் என்பதுதான் என் கனவு. எனினும் பெற்றோருடைய முழு ஆதரவுதான் நான் மருத்துவ மாணவியாக முதல் காரணம். நான் நன்றாகப் படிக்க வேண்டும் என்று தொடர்ந்து ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தார்கள். அவர்கள் இல்லை என்றால், என்னால் மருத்துவ மாணவி ஆகி இருக்க முடியாது. வருங்காலத்தில் குழந்தைகள் நல மருத்துவராக விரும்புகிறேன்.

தேர்வுக்கு எப்படித் தயார் ஆனீர்கள்?

விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கைதான் என்னுடைய வெற்றிக்குக் காரணம் என்று நினைக்கிறேன். நீட் பயிற்சி மையத்தில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள், தேர்வு இருக்கும். பிறகு அறைக்கு வந்து மீண்டும் படிப்பேன். சில தினங்களில் அதிகாலை 4 மணி வரையெல்லாம் படித்திருக்கிறேன். 


Srimathi: இருளர் பழங்குடியின் முதல் மருத்துவ மாணவியானது எப்படி? 4 முறை முயன்று நீட்டில் வென்ற ஸ்ரீமதி உத்வேகப் பேட்டி

உங்களின் சக பழங்குடி மாணவிகளுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

வாய்ப்பு தானாக உருவாகாது. நாம்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும். விடாமுயற்சியுடன் தன்னம்பிக்கையைக் கைவிடாமல் படித்தால், நிச்சயம் வெற்றி பெறலாம் என்று மாணவி ஸ்ரீமதி தெரிவித்தார். 

தனியார் பள்ளியில் படித்ததால், தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெற முடியாத சூழலிலும், தொடர்ந்து முயற்சி செய்து இருளர் பழங்குடி இனத்தின் முதல் மருத்துவ மாணவியாக மாறி, விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கான உதாரணமாகத் திகழ்கிறார் ஸ்ரீமதி. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
Embed widget