மேலும் அறிய

’கவுரவ விரிவுரையாளர்களை வஞ்சிக்கும் திமுக அரசு’- அதிகரிக்கும் எதிர்ப்புக் குரல்கள்; ஊதிய உயர்வு எப்போது?

கௌரவ விரிவுரையாளர்களுக்கான தொகுப்பு ஊதியம் வெறும் ரூ.20,000 முதல் ரூ.25,000 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

மாநிலம் முழுவ்தும் 7,360 கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது வழங்கப்படும் என்று அரசியல் தலைவர்கள் எதிர்ப்புக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''தமிழகம் முழுவதும் உள்ள 171 அரசுக் கல்லூரிகளில் 7,360 கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் ஆண்டுக்கு 11 மாத காலம் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கௌரவ விரிவுரையாளர்கள் அனைவருமே, பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைக்கும், கல்லூரி உதவிப் பேராசிரியருக்கான கல்வித் தகுதியைப் பெற்றவர்கள் மட்டுமின்றி, அவர்களில் பலர், சிறப்புத் தேர்வு எழுதி பணி வாய்ப்பையும் பெற்றவர்கள்.

வெறும் ரூ.20,000 முதல் ரூ.25,000 மட்டுமே

நிரந்தரப் பணியில் இருப்பவர்கள் ஊதியம் சுமார் 80,000 ரூபாயாக இருக்கையில், முறையான தகுதியின் அடிப்படையில் தேர்வான கௌரவ விரிவுரையாளர்களுக்கான தொகுப்பு ஊதியம் வெறும் ரூ.20,000 முதல் ரூ.25,000 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரையின்படி, கௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.50,000 மாதச் சம்பளமாக வழங்கப்பட வேண்டும். கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம், இவர்களுக்கு, பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்த ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் திமுக அரசை வலியுறுத்தினோம். ஆனால் இதுவரை, ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.

தமிழகத்தில், பெரும்பாலான கல்லூரிகள் கௌரவ விரிவுரையாளர்களைக் கொண்டே செயல்படுகின்றன. இவர்கள், பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளின்படி, உரிய தகுதியின் அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டவர்கள்.

பல கல்லூரிகளில், பல்வேறு துறைகளில் துறைத் தலைவர்கள் இல்லாததால், அவர்கள் பணிகளையும், கௌரவ விரிவுரையாளர்களே, மேற்கொண்டு வருகின்றனர். பல கல்லூரிகளில், கற்பித்தல் பணியோடு கல்லூரியில் இருக்கும் அனைத்து பணிகளையும் மேற்கொள்பவர்கள் இவர்கள்தான். ஆனால், இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிகக் குறைவு.

இந்த நிலையில், உரிய தகுதியுடன் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அனைவருக்கும் ரூ.50,000 ஊதியம் வழங்கக் கூறி மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் 21.3.2024 அன்று தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பை, தமிழக உயர் கல்வித்துறை நடைமுறைப்படுத்தாததால், மீண்டும்  கௌரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்த 11 வழக்குகளில், 18.10.2024 அன்றும், மேலும் 20 வழக்குகளில், 21.11.2024 அன்றும், கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாதம், ரூ.50,000 ஊதியம் வழங்க வேண்டும் என்று, நீதியரசர்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்

பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளை பின்பற்றித்தான் கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் நடைபெற்றுள்ளது என, கல்லூரிக் கல்வி ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் தொடர்பாக, தமிழ்நாடு உயர்கல்வித் துறை ஏற்கனவே வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படியே, அனைவரும் நியமனம் செய்யப்பட்டனர்.

ஆனால், தற்போது, தமிழகத்தில் பணியாற்றக்கூடிய கௌரவ விரிவுரையாளர்கள் எவரையும் பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி நியமிக்கவில்லை என்றும், அதனால், மானியக் குழு பரிந்துரைத்துள்ள மாதம் ரூ.50,000 ஊதியம் வழங்க இயலாது என்றும், பொய்யான விளக்கத்தை அளித்துள்ளது திமுக அரசு.

கௌரவ விரிவுரையாளர்களை வஞ்சித்து வரும் திமுக அரசு

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பைக் கூட மதிக்காமல், கௌரவ விரிவுரையாளர்களை வஞ்சித்து வரும் திமுக அரசின் செயல்பாடு முற்றிலும் கண்டிக்கத்தக்கது. நீதிமன்றத்தில் பொய்யான விளக்கம் கொடுத்து, அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களை ஏமாற்றியதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் கௌரவ விரிவுரையாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்திலும் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அரசுக் கல்லூரி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. கௌரவ விரிவுரையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை, உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, பொய் சொல்லிப் புறக்கணிக்கும் அளவுக்கு, திமுக அரசுக்கு அவர்கள் மீது என்ன கோபம்?

உடனடியாக, தமிழக அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு, மானியக் குழு பரிந்துரையின்படி ரூ.50,000 ஊதியம் வழங்க வேண்டும் என்றும், ஊதிய உயர்வு கோரி நியாயமான போராட்டத்தில் ஈடுபடுகின்ற கௌரவ விரிவுரையாளர்களை அச்சுறுத்தும் விதமாக, கல்லூரி முதல்வர்கள், கல்லூரிக் கல்வி இணை இயக்குனர்கள் செயல்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். மேலும், தமிழகத்தில் பல்கலைக்கழக மானியக் குழு வழிகாட்டுதலின்படி நியமிக்கப்பட்டுள்ள கௌரவ விரிவுரையாளர்கள் எத்தனை பேர், பல்கலைக்கழக மானியக் குழு வழங்கும் நிதியை, திமுக அரசு எந்த வழிகளில் செலவிடுகிறது என்ற வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்திக் கொள்கிறேன்.

இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக, கௌரவ விரிவுரையாளர்களுக்கான முதல் மாத ஊதியமே இன்னும் வழங்கப்படவில்லை எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், முதல் மாத ஊதியத்தை, மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குத் தாமதப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது தமிழக அரசு.

எனவே, எந்தவித காலதாமதமும் இல்லாமல், ஒவ்வொரு மாதமும் கௌரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியத்தை, அந்தந்த மாத இறுதியில் வழங்க வேண்டும் என்றும், கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணை எண் 56ன் படி, புதிய விரிவுரையாளர்கள் பணி நியமனத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கௌரவ விரிவுரையாளர்களாகப் பணிபுரியும் தகுதி வாய்ந்தவர்களை நியமிக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்''.

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே கவுரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம் குறித்து, பாமக தலைவர் அன்புமணி, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது, 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
America Vs Venezuela: சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
Maruti Swift Without Tax: வரி இல்லாமல் மாருதி ஸ்விஃப்ட் வாங்கணுமா! இப்படி வாங்கினால் ரூ.1.89 லட்சம் மிச்சம் - விவரம் இதோ
வரி இல்லாமல் மாருதி ஸ்விஃப்ட் வாங்கணுமா! இப்படி வாங்கினால் ரூ.1.89 லட்சம் மிச்சம் - விவரம் இதோ
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
America Vs Venezuela: சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
Maruti Swift Without Tax: வரி இல்லாமல் மாருதி ஸ்விஃப்ட் வாங்கணுமா! இப்படி வாங்கினால் ரூ.1.89 லட்சம் மிச்சம் - விவரம் இதோ
வரி இல்லாமல் மாருதி ஸ்விஃப்ட் வாங்கணுமா! இப்படி வாங்கினால் ரூ.1.89 லட்சம் மிச்சம் - விவரம் இதோ
South Africa Gun Shoot: தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
Embed widget