மேலும் அறிய

அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி கனவை நனவாக்கும் நிர்வாகம்! 'கற்றலைத்தேடி' திட்டம் மூலம் வெற்றி உறுதி!

கடலூர்: 'நடுவுல கொஞ்சம் கற்றலைத்தேடி', 'தடைகளைத்தாண்டி தேர்ச்சி' திட்டங்களால் 13,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்!

கடலூர் : கடலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் 'நடுவுல கொஞ்சம் கற்றலைத்தேடி' மற்றும் 'தடைகளைத்தாண்டி தேர்ச்சி' ஆகிய சிறப்புத் திட்டங்கள் மூலம் 13,502 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

நடுவுல கொஞ்சம் கற்றலைத்தேடி

நடுவுல கொஞ்சம் கற்றலைத்தேடி மற்றும் தடைகளைத்தாண்டி தேர்ச்சி திட்டங்களின் மூலம் நடைபெறும் சிறப்பு வகுப்புகளால், மாவட்டத்தில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் தேவைக்கேற்ப பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்துதல்

அரசுப்பள்ளிகளில் 6,7,8 ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் வகையில், 'நடுவுல கொஞ்சம் கற்றலைத் தேடி' திட்டத்தில் பல்வேறு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. சில மாணவர்களுக்கு கணிதம், அறிவியல், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கு தேவையான அடிப்படை பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்படுகிறது.

பள்ளிகளில் கூடுதல் கவனம் தேவை என கண்டறியப்பட்ட மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கு, பொறுப்பாசிரியர்களை கொண்டு, தனி வகுப்பறையில் சிறப்பு வகுப்புகள் பாடவாரியாக நடத்தப்பட்டு வருகிறது. கடலுார் கல்வி கோட்டத்தில் 257 பள்ளிகளிலும், விருத்தாசலம் கல்வி கோட்டத்தில் 264 பள்ளிகளிலும் என மொத்தம் கடலுார் மாவட்டத்தில் 521 பள்ளிகளில் பயிலும் 13,502 மாணவர்களுக்கு இந்த சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

தடைகளை தாண்டி தேர்ச்சி

நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வில், 100 சதவீதம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்றிடவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம், 'தடைகளை தாண்டி தேர்ச்சி' திட்டத்தின் மூலம் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 10ம் வகுப்பில் 1,671 மாணவர்கள் இடைநிற்றல் கண்டறியப்பட்டு, 'தடைகளை தாண்டி தேர்ச்சி' என்ற திட்டத்தின் முயற்சியால் அந்த மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்க வழிவகை செய்யப் பட்டுள்ளது. அண்மையில் மாவட்டத்தில் 'நடுவில் கொஞ்சம் கற்றலைத்தேடி' திட்டத்தில் மாணவர்கள் கல்வி கற்கும் விதத்தை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.

அப்போது, மீண்டும் பள்ளிக்கு பயில வருகைபுரிந்த மாணவர்களின் வருகை பதிவை ஆசிரியர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும் மாணவர்கள் இடைநிற்றல் இன்றி பள்ளிக்கு வருவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், கல்வி மட்டுமே நமது எதிர்காலத்தை சிறப்பாக மாற்ற முடியும். எனவே வருகின்ற பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற மாணவர்கள் முழுமுயற்சியுடன் படித்து வாழ்வில் மேன்மையடைய வேண்டும் என மாணவர்களிடம், மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

தலைப்பு செய்திகள்

எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget