மேலும் அறிய

அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி கனவை நனவாக்கும் நிர்வாகம்! 'கற்றலைத்தேடி' திட்டம் மூலம் வெற்றி உறுதி!

கடலூர்: 'நடுவுல கொஞ்சம் கற்றலைத்தேடி', 'தடைகளைத்தாண்டி தேர்ச்சி' திட்டங்களால் 13,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்!

கடலூர் : கடலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் 'நடுவுல கொஞ்சம் கற்றலைத்தேடி' மற்றும் 'தடைகளைத்தாண்டி தேர்ச்சி' ஆகிய சிறப்புத் திட்டங்கள் மூலம் 13,502 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

நடுவுல கொஞ்சம் கற்றலைத்தேடி

நடுவுல கொஞ்சம் கற்றலைத்தேடி மற்றும் தடைகளைத்தாண்டி தேர்ச்சி திட்டங்களின் மூலம் நடைபெறும் சிறப்பு வகுப்புகளால், மாவட்டத்தில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் தேவைக்கேற்ப பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்துதல்

அரசுப்பள்ளிகளில் 6,7,8 ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் வகையில், 'நடுவுல கொஞ்சம் கற்றலைத் தேடி' திட்டத்தில் பல்வேறு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. சில மாணவர்களுக்கு கணிதம், அறிவியல், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கு தேவையான அடிப்படை பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்படுகிறது.

பள்ளிகளில் கூடுதல் கவனம் தேவை என கண்டறியப்பட்ட மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கு, பொறுப்பாசிரியர்களை கொண்டு, தனி வகுப்பறையில் சிறப்பு வகுப்புகள் பாடவாரியாக நடத்தப்பட்டு வருகிறது. கடலுார் கல்வி கோட்டத்தில் 257 பள்ளிகளிலும், விருத்தாசலம் கல்வி கோட்டத்தில் 264 பள்ளிகளிலும் என மொத்தம் கடலுார் மாவட்டத்தில் 521 பள்ளிகளில் பயிலும் 13,502 மாணவர்களுக்கு இந்த சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

தடைகளை தாண்டி தேர்ச்சி

நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வில், 100 சதவீதம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்றிடவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம், 'தடைகளை தாண்டி தேர்ச்சி' திட்டத்தின் மூலம் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 10ம் வகுப்பில் 1,671 மாணவர்கள் இடைநிற்றல் கண்டறியப்பட்டு, 'தடைகளை தாண்டி தேர்ச்சி' என்ற திட்டத்தின் முயற்சியால் அந்த மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்க வழிவகை செய்யப் பட்டுள்ளது. அண்மையில் மாவட்டத்தில் 'நடுவில் கொஞ்சம் கற்றலைத்தேடி' திட்டத்தில் மாணவர்கள் கல்வி கற்கும் விதத்தை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.

அப்போது, மீண்டும் பள்ளிக்கு பயில வருகைபுரிந்த மாணவர்களின் வருகை பதிவை ஆசிரியர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும் மாணவர்கள் இடைநிற்றல் இன்றி பள்ளிக்கு வருவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், கல்வி மட்டுமே நமது எதிர்காலத்தை சிறப்பாக மாற்ற முடியும். எனவே வருகின்ற பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற மாணவர்கள் முழுமுயற்சியுடன் படித்து வாழ்வில் மேன்மையடைய வேண்டும் என மாணவர்களிடம், மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

தலைப்பு செய்திகள்

13 ஆண்டு காத்திருப்பு: 410 ஆசிரியர்களுக்கு பணி மறுப்பு அநீதியா? அன்புமணி ஆவேசம்
13 ஆண்டு காத்திருப்பு: 410 ஆசிரியர்களுக்கு பணி மறுப்பு அநீதியா? அன்புமணி ஆவேசம்
இந்தியாவில் STEM கல்வி: ஒரு கோடியை தாண்டிய மாணவர் சேர்க்கை, பெண்கள் பங்களிப்பு எவ்ளோ தெரியுமா?
இந்தியாவில் STEM கல்வி: ஒரு கோடியை தாண்டிய மாணவர் சேர்க்கை, பெண்கள் பங்களிப்பு எவ்ளோ தெரியுமா?
Thiruvallur District Holiday : ஆகஸ்ட் 6ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷியான நியூஸ்
ஆகஸ்ட் 6ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷியான நியூஸ்
NEET UG 2026: நீட் தேர்வு கலந்தாய்வு எப்போது? தேதிகள், விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு- இதோ விவரம்!
NEET UG 2026: நீட் தேர்வு கலந்தாய்வு எப்போது? தேதிகள், விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு- இதோ விவரம்!

வீடியோ

Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
Ford Company Chennai : தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
TVK Vijay: ஸ்டாலின் தொடங்கி கனிமொழி வரை..! ”பொய்யாய் சொல்லும் திமுக, எது விமர்சனம்?” தவெக சரமாரி அட்டாக்
ஸ்டாலின் தொடங்கி கனிமொழி வரை..! ”பொய்யாய் சொல்லும் திமுக, எது விமர்சனம்?” தவெக சரமாரி அட்டாக்
MK Stlain: தமிழ்நாட்டில் சாத்தானின் ஆட்சியா? முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
தமிழ்நாட்டில் சாத்தானின் ஆட்சியா? முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
DGP Anurag Dhankar :'ஒரு மாநிலத்தின் டிஜிபியே தற்கொலை’ திரிபுராவில் நடப்பது என்ன..?
DGP Anurag Dhankar :'ஒரு மாநிலத்தின் டிஜிபியே தற்கொலை’ திரிபுராவில் நடப்பது என்ன..?
அன்றாடம் மின்வெட்டு; 2 மடங்கு அதிகரித்த கட்டணம்; மின்சாரத் துறை குளறுபடி- கொந்தளித்த டிடிவி!
அன்றாடம் மின்வெட்டு; 2 மடங்கு அதிகரித்த கட்டணம்; மின்சாரத் துறை குளறுபடி- கொந்தளித்த டிடிவி!
EV கார் வாங்கற ஐடியா இருக்கா? 500 கி.மீ.+ ரேஞ்ச்- வெளியாகும் 3 SUV கார்கள்- விவரம்!
EV கார் வாங்கற ஐடியா இருக்கா? 500 கி.மீ.+ ரேஞ்ச்- வெளியாகும் 3 SUV கார்கள்- விவரம்!
CJP Protest: கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்
கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்
Embed widget