மேலும் அறிய

Mahavishnu Controversy : சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணு விவகாரம்: சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் அதிரடி இடமாற்றம்

முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாகவே அரசுப் பள்ளிக்கு வந்து பேசியதாக மகா விஷ்ணு வாக்குமூலம் அளித்தார்.

சர்ச்சைப் பேச்சாளர் மகா விஷ்ணு அரசுப் பள்ளிகளில் பேசிய விவகாரத்தில் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை அசோக் நகர், சைதாப் பேட்டை அரசுப் பள்ளிகளில் முந்தைய ஜென்மங்கள், பாவ, புண்ணியங்கள் பற்றி ஆன்மீக சொற்பொழிவாளர் என கூறப்படும் மகாவிஷ்ணு என்பவர், மாணவிகளிடம் பேசினார். மகா விஷ்ணு அரசுப் பள்ளிகளில்  பேசிய கருத்துக்களும், அரசுப்பள்ளி ஆசிரியருடன் கருத்து மோதலில் ஈடுபட்டதும், மாற்றுத்திறனாளிகள் பற்றிய அவரது பேச்சும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரமானது, அவரே தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டதை தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்தது.

5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைப்பு

இதையடுத்து, அவர் மீது திருவொற்றியூர் காவல் நிலையம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் பலரும் புகார் அளித்தனர். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகா விஷ்ணுவிடம், சென்னை விமான நிலையத்தில் வைத்தே போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாகவே அரசுப் பள்ளிக்கு வந்து பேசியதாக மகா விஷ்ணு வாக்குமூலம் அளித்தார்.

செப்.20 வரை நீதிமன்றக் காவல்

விசாரணைக்கு பிறகு அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர் மீது 5 பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து செப்.20ஆம் தேதி வரை மகா விஷ்ணுவை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், அசோக் நகர், சைதாப் பேட்டை பள்ளிகளில் மகா விஷ்ணு வந்து பேச முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸே காரணம் என்று தகவல் வெளியானது.

இதை அடுத்து, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பனே நேரில் பள்ளிகளுக்குச் சென்று விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக விசாரணை அறிக்கை, தமிழக அரசிடம் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் இடமாற்றம்

இந்த அறிக்கை அடிப்படையில், முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவர் தஞ்சாவூர் சரபோஜி மன்னர் நூலகத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

புதிய முதன்மை கல்வி அலுவலர் யார்?

சென்னை மாவட்டத்தின் புதிய முதன்மைக் கல்வி அலுவலராக ஏஞ்சலோ இருதயசாமி நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவர் இதற்குமுன் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
அரசுப் பள்ளி ஆய்வு அராஜகம்: அமைச்சர் கீர்த்தனா மீது நயினார் நாகேந்திரன் பாய்ச்சல்!
அரசுப் பள்ளி ஆய்வு அராஜகம்: அமைச்சர் கீர்த்தனா மீது நயினார் நாகேந்திரன் பாய்ச்சல்!
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்

வீடியோ

TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!
12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
SC On Karur Stampede: உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
’வாரியத் தலைவர் பதவியை பெறுவதில் போட்டா, போட்டி’ காங்கிரஸ் 2, விசிக 1 ?
’வாரியத் தலைவர் பதவிக்கு கடும் போட்டி’ காங்கிரஸ் 2, விசிக 1 ?
கருமுட்டையை உறையவைத்துவிட்டேன்...ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன்
கருமுட்டையை உறையவைத்துவிட்டேன்...ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன்
E.V.Velu Asset : ‘திமுக குடும்பத்தின் கஜானா – ஏவ வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
'ஏ.வ.வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
Embed widget