மேலும் அறிய

போட்டித்தேர்வு எழுதுபவர்கள் வருகிற 28-ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்; தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

போட்டித்தேர்வு எழுதுபவர்கள் வருகிற 28-ந் தேதிக்குள் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்றும், குரூப்-4 தேர்வு மார்ச் மாதத்தில் அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் கூறினார்.

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றி வரும் பணியாளர்கள், அலுவலர்கள் பதவி உயர்வு பெறுவதற்கான துறைத்தேர்வு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் விழுப்புரம் காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்வு வருகிற 9-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறைகளில் அரசு பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். பதவி உயர்வின் மூலம் தகுதியான பணியாளர்கள், அலுவலர்களை தேர்ந்தெடுத்திடும் பொருட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆண்டுதோறும் 2 முறை துறைத்தேர்வு ஒவ்வொரு மாவட்ட தலைநகரத்திலும் நடத்தப்பட்டு வருகிறது. இத்துறைத்தேர்வில் தேர்ச்சி பெறும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.


போட்டித்தேர்வு எழுதுபவர்கள் வருகிற 28-ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்; தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

அதன் அடிப்படையில் கடந்த 1-ந் தேதி முதல் இத்தேர்வுகள் தொடங்கப்பட்டு வருகிற 9-ந் தேதி வரை நடைபெறுகிறது. இத்துறை தேர்வில் புதிய நடைமுறையாக கடந்த 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை கணினி முறையில் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில் அதேபோன்று 7, 8-ந் தேதிகளில் கணினி முறையில் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. சர்வே மற்றும் வருவாய்த்துறைகளுக்கு எழுத்துத்தேர்வு வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று இன்று (அதாவது நேற்று) முதல் 6-ந் தேதி வரையும் மற்றும் 9-ந் தேதியும் எழுத்துத்தேர்வு நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் இந்த ஆண்டு 32 வகையான தேர்வுகளை நடத்திட திட்டமிடப்பட்டு வருகிறது. குறிப்பாக குரூப்-1 தேர்வுகள் மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குரூப்-2, குரூப்- 2 ஏ தேர்விற்கான அறிவிப்பு இம்மாதத்திலேயே வெளியிடப்படும். குரூப்- 4 தேர்வு மார்ச் மாதத்தில் அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 75 நாட்களில் தேர்வுகள் நடத்தப்படும்.

தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் அனைத்து போட்டித்தேர்வுகளிலும் தமிழை மொழித்தேர்வாக கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெறும். இத்தேர்வில் 40 மதிப்பெண்கள் பெற்றவர்கள் அடுத்தகட்ட தேர்விற்கு எடுத்துக்கொள்ளப்படும்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் இனிவரும் காலங்களில் நடைபெறும் தேர்வுகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் தேர்வுகள் அனைத்தும் இனிவரும் காலங்களில் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும். பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெறும். தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையத்திற்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தினை விட 30 நிமிடத்திற்கு முன்னதாகவே வருகைபுரிய வேண்டும். அவ்வாறு வருகை தராதவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் இனிவரும் காலங்களில் நடைபெறும் போட்டித்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்திட கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே ஒருமுறை பதிவு செய்துள்ள போட்டித்தேர்வு எழுதுபவர்களில் 60 சதவீதம் பேர் ஆதார் எண்ணை பதிவு செய்துள்ளனர். மீதமுள்ளவர்கள் வருகிற 28-ந் தேதிக்குள் ஆதார் எண்ணை பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறினார்.


போட்டித்தேர்வு எழுதுபவர்கள் வருகிற 28-ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்; தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

அதனை தொடர்ந்து விழுப்புரம் சார்நிலை கருவூலத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் துறைத்தேர்வுகளுக்கான வினாத்தாள் வருகை மற்றும் தேர்வு நடைபெறும் மையத்திற்கு வினாத்தாள்கள் கொண்டு சென்ற விவரம் குறித்த பதிவேட்டினை ஆய்வு செய்ததோடு, கருவூல அறையில் உள்ள வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதையும், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதையும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் மோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

தலைப்பு செய்திகள்

டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Embed widget