மேலும் அறிய

போட்டித்தேர்வு எழுதுபவர்கள் வருகிற 28-ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்; தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

போட்டித்தேர்வு எழுதுபவர்கள் வருகிற 28-ந் தேதிக்குள் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்றும், குரூப்-4 தேர்வு மார்ச் மாதத்தில் அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் கூறினார்.

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றி வரும் பணியாளர்கள், அலுவலர்கள் பதவி உயர்வு பெறுவதற்கான துறைத்தேர்வு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் விழுப்புரம் காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்வு வருகிற 9-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறைகளில் அரசு பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். பதவி உயர்வின் மூலம் தகுதியான பணியாளர்கள், அலுவலர்களை தேர்ந்தெடுத்திடும் பொருட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆண்டுதோறும் 2 முறை துறைத்தேர்வு ஒவ்வொரு மாவட்ட தலைநகரத்திலும் நடத்தப்பட்டு வருகிறது. இத்துறைத்தேர்வில் தேர்ச்சி பெறும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.


போட்டித்தேர்வு எழுதுபவர்கள் வருகிற 28-ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்; தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

அதன் அடிப்படையில் கடந்த 1-ந் தேதி முதல் இத்தேர்வுகள் தொடங்கப்பட்டு வருகிற 9-ந் தேதி வரை நடைபெறுகிறது. இத்துறை தேர்வில் புதிய நடைமுறையாக கடந்த 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை கணினி முறையில் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில் அதேபோன்று 7, 8-ந் தேதிகளில் கணினி முறையில் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. சர்வே மற்றும் வருவாய்த்துறைகளுக்கு எழுத்துத்தேர்வு வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று இன்று (அதாவது நேற்று) முதல் 6-ந் தேதி வரையும் மற்றும் 9-ந் தேதியும் எழுத்துத்தேர்வு நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் இந்த ஆண்டு 32 வகையான தேர்வுகளை நடத்திட திட்டமிடப்பட்டு வருகிறது. குறிப்பாக குரூப்-1 தேர்வுகள் மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குரூப்-2, குரூப்- 2 ஏ தேர்விற்கான அறிவிப்பு இம்மாதத்திலேயே வெளியிடப்படும். குரூப்- 4 தேர்வு மார்ச் மாதத்தில் அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 75 நாட்களில் தேர்வுகள் நடத்தப்படும்.

தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் அனைத்து போட்டித்தேர்வுகளிலும் தமிழை மொழித்தேர்வாக கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெறும். இத்தேர்வில் 40 மதிப்பெண்கள் பெற்றவர்கள் அடுத்தகட்ட தேர்விற்கு எடுத்துக்கொள்ளப்படும்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் இனிவரும் காலங்களில் நடைபெறும் தேர்வுகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் தேர்வுகள் அனைத்தும் இனிவரும் காலங்களில் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும். பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெறும். தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையத்திற்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தினை விட 30 நிமிடத்திற்கு முன்னதாகவே வருகைபுரிய வேண்டும். அவ்வாறு வருகை தராதவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் இனிவரும் காலங்களில் நடைபெறும் போட்டித்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்திட கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே ஒருமுறை பதிவு செய்துள்ள போட்டித்தேர்வு எழுதுபவர்களில் 60 சதவீதம் பேர் ஆதார் எண்ணை பதிவு செய்துள்ளனர். மீதமுள்ளவர்கள் வருகிற 28-ந் தேதிக்குள் ஆதார் எண்ணை பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறினார்.


போட்டித்தேர்வு எழுதுபவர்கள் வருகிற 28-ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்; தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

அதனை தொடர்ந்து விழுப்புரம் சார்நிலை கருவூலத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் துறைத்தேர்வுகளுக்கான வினாத்தாள் வருகை மற்றும் தேர்வு நடைபெறும் மையத்திற்கு வினாத்தாள்கள் கொண்டு சென்ற விவரம் குறித்த பதிவேட்டினை ஆய்வு செய்ததோடு, கருவூல அறையில் உள்ள வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதையும், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதையும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் மோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
TATA Sierra Speed Milage: 222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
திட்டம் போட்டு குழி பறித்தார்.. தஞ்சையில் ரூ.44 லட்சம் வழிப்பறி சம்பவத்தில் 4 பேர் கைது
திட்டம் போட்டு குழி பறித்தார்.. தஞ்சையில் ரூ.44 லட்சம் வழிப்பறி சம்பவத்தில் 4 பேர் கைது
Embed widget