மேலும் அறிய

Class 12 Exam: சிபிஎஸ்இ சிறப்புத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் இறுதியானது அல்ல - உச்சநீதிமன்றம்

சிபிஎஸ்இ-ன் இந்த புதிய நடைமுறையால் மாணவர்களின் உயர்க்கல்வி சேர்க்கை மற்றும் எதிர்கால வாய்ப்புகள் பாதிக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

12ம் வகுப்பு சிறப்புத் தேர்வில் (Improvement Exams)  பெறப்படும்  மதிப்பெண்களே இறுதியானது என்ற சிபிஎஸ்இ-ன் வழிமுறையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.   

முன்னதாக, சிபிஎஸ்இ கல்வி வாரியம் கடந்தாண்டு 12ம் ஆண்டு மாணவர்களுக்கான மதிப்பீடு முறையில் சில மாற்றங்களை கொண்டு வந்தது. அதன்படி, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர் யாராவது தனக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களில் திருப்தியடையா விட்டால், சிறப்புத் தேர்வை எழுதலாம். ஆனால், சிறப்புத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களே இறுதியானது. அதாவது,பொதுத் தேர்வை  விட மதிப்பெண்கள் குறைவாக வந்தாலும், கூடுதலாக வந்தாலும் சிறப்புத் தேர்வு மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தது. 

சிபிஎஸ்இ-ன் இந்த நடவடிக்கையை எதிர்த்து, சுக்ரிதி மற்றும் பலர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர் (Sukriti & Ors v CBSE & Ors). நீதிபதிகள் ஏஎம் கன்வில்கார் மற்றும் சிடி ரவிகுமார்  ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. 


Class 12 Exam: சிபிஎஸ்இ சிறப்புத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் இறுதியானது அல்ல - உச்சநீதிமன்றம்

 

முன்னதாக, இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்த சிபிஎஸ்இ, " சிறப்புத் தேர்வு என்பது ஒருவகையான மதிப்பீட்டு முறையே. மாணவர்களின் கல்வித் திறன் அங்கு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. பாரபட்சமற்ற நிலை மற்றும் சமவாய்ப்பு ஆகியவற்றைப் பாதுகாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தது. 

மேலும், 12ம் வகுப்புத் தேர்வில் மதிப்பெண்கள் வழங்குவதில் சரியான நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறோம். ஏற்கனவே, மாணவர்களின் நலன் கருதி பல்வேறு சீர்திருத்தங்களை சிபிஎஸ்இ அறிமுகப்படுத்தியுள்ளோம். உதாரணமாக, சிறப்புத் தேர்வில் மாணவர் ஒருவர் தோல்வியடைந்தால், பழைய மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்வதற்கான திருத்தமும் இதில் அடங்கும் என்று தெரிவித்தது.  

 ஆனால், சிபிஎஸ்இ-ன் இந்த புதிய நடைமுறையால் மாணவர்களின் உயர்க்கல்வி சேர்கை மற்றும் எதிர்கால வாய்ப்புகள் பாதிக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், சிபிஎஸ்இ- ன் புதிய மதிப்பீட்டு முறையில் அர்த்தமில்லை என்று தெரிவித்தது.  "இரண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். மாணவர்களின் எதிர்காலாத்தை பாதிக்கும் இத்தகைய போக்கை நியாயப்படுத்த முயற்சிக்கக் கூடாது" என்று கூறிய நீதிபதிகள், புதிய மதிப்பட்டு முறையை ரத்து செய்வதாக அறிவித்தனர். 

சிபிஎஸ்இ தேர்வு: 

கொரோனா இரண்டாவது அலை காரணமாக, கடந்தாண்டு 12ம் வகுப்புக்கான வாரியத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. முன்னதாக,  நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

மாணவர்களுக்கு நிதித் திட்டமிடல் கற்றுக்கொடுப்பது அவசியம் - ஏன் தெரியுமா?
மாணவர்களுக்கு நிதித் திட்டமிடல் கற்றுக்கொடுப்பது அவசியம் - ஏன் தெரியுமா?
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
கியூட், பொதுத்தேர்வுகள்.. லட்சக்கணக்கான மாணவர் தகவல்கள் டார்க் வெப்பில் விற்பனை- பெரும் ஆபத்து!
கியூட், பொதுத்தேர்வுகள்.. லட்சக்கணக்கான மாணவர் தகவல்கள் டார்க் வெப்பில் விற்பனை- பெரும் ஆபத்து!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget