மேலும் அறிய

Common Syllabus: பல்கலை., கல்லூரிகளில் பொது பாடத்திட்டத்தை எதிர்த்து போராட்டம்: கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பு

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பொது பாடத்திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என்று கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு (JAC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பொது பாடத்திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என்று கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு (JAC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

தமிழ்நாடு முழுவதும்‌ அனைத்து பல்கலைக்கழக மற்றும்‌ கல்லூரிகளில்‌ (தன்னாட்சி உட்பட) "ஒரே பாடத்திட்டம்‌" என்ற முறையை திரும்பப்பெற வேண்டும்‌ என்ற JAC-ன்‌ முதற்கட்ட போராட்டத்தை தொடர்ந்து, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம்‌ பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. தமிழகம்‌ முழுவதும்‌ ஒரே பாடத்திட்டம்‌ என்பது, பல்கலைக்கழகங்களின்‌ தன்னாட்சி உரிமையை பறிப்பதோடு மட்டுமல்லாமல்‌, தரமற்றதாகவும்‌ அமைந்துள்ளது.

உலகத்தில்‌ கல்வியில்‌ வளர்ந்து உயர்ந்த நாடுகளில்‌ கூட, ஒரே பாடத்திட்டம்‌ என்ற நடைமுறை இல்லை. மேலும்‌ தமிழ்‌, ஆங்கிலம்‌ போன்ற மொழிப்‌ பாடங்களில்‌ கூட ஒரே பாடத்திட்டம்‌ என்பது எந்த அடிப்படையிலும்‌ ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழகம்‌ முழுவதும்‌ ஒரே பாடத்திட்டம்‌ என்ற கொள்கை முடிவை எடுப்பதற்கு முன்‌ அது தொடர்பான எந்தக்‌ கருத்துக்‌ கேட்புக்‌ கூட்டத்தையும்‌ தமிழ்நாடு அரசோ, தமிழ்நாடு உயர்‌ கல்வி மாமன்றமோ நடத்தியதாக தெரியவில்லை.

மேலும்‌ இனி வரும்‌ காலங்களில்‌ மூன்று வருடத்திற்கு ஒரு முறை உயர்‌ கல்வி மாமன்றமே பாடத்திட்டத்தை வகுக்குமா? அப்படியென்றால்‌ 13 பல்கலைக்கழகங்களிலுள்ள 500 க்கும்‌ மேற்பட்ட Boards of Studies எதற்கு? பல்கலைக்கழகங்களின்‌ தன்னாட்சியை பறிப்பதாக அமையாதா? என்ற வாதங்களை நாம்‌ எடுத்து வைத்தோம்‌.

அதற்கு தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்‌ துணைத்தலைவர்‌ அவர்கள்‌ "நாங்கள்‌ அனுப்பியது வெறும்‌ Model Syllabus தான்‌". பொதுப்பாடத்திட்டம்‌ இல்லை. அந்த Model Syllabus-ஐ பல்கலைக்கழகங்கள்‌ ஏற்றுக்கொள்வதும்‌ மறுப்பதும்‌ அந்தந்த பல்கலைக்கழகங்களின்‌ Boards of Studies-ன்‌ உரிமையாகும்‌. நாங்கள்‌ யாரையும்‌ ஒருபோதும்‌ கட்டாயப்படுத்தவில்லை” என கூறினார்‌. 

அதற்கு  JAC பொறுப்பாளர்கள்‌ நீங்கள்‌ எங்களிடம்‌ கூறிய கருத்தை தமிழ்நாடு உயர்‌ கல்வி மாமன்ற சுற்றறிக்கையாக அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும்‌ அனுப்ப வேண்டும்‌ என கேட்டுக்‌ கொண்டோம்‌. அவர்களும்‌ பேசிய விவரங்களின்‌ முடிவின்படி சுற்றறிக்கை அனுப்புவதாக உறுதியளித்தார்கள்‌. எனவே,
அவர்களுடன்‌ பேசியது மற்றும்‌ கூட்டாக இணைந்து எடுத்த முடிவுகளைக்‌ கருத்தில்‌ கொண்டு, 12.07.2023 அன்று தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்துடன்‌ நடத்திய கூட்டத்தின்‌ அடிப்படையில்‌ பத்திரிக்கை செய்தியையும்‌ வெளியிட்டோம்‌.

ஆனால்‌, 12.07.2023 அன்று இரண்டு மணி நேரத்திற்கும்‌ மேலாக நடந்த பேச்சுவார்த்தைகளுக்கு முற்றிலும்‌ மாறுபட்ட வகையில்‌, உண்மைக்கு புறம்பாக மறுநாளே தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம்‌, தமிழ்நாட்டில்‌ "ஒரே பாடத்திட்டம்‌" அமல்படுத்தப்பட்டு விட்டதாகவும்‌, கல்வியாளர்கள்‌ வரவேற்பதாகவும்‌ பத்திரிக்கை செய்தி வெளியிட்டது. இதனால்‌ தமிழ்நாடு முழுவதும்‌ உள்ள பத்தாயிரத்திற்கும்‌ மேற்பட்ட கல்லூரி ஆசிரியர்கள்‌ மிகவும்‌
அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்‌.

எனவே, அதனை எவ்வாறு எதிர்‌ கொள்வது, தமிழ்நாட்டின்‌ உயர்கல்வியை தாழ விடாமல்‌ எவ்வாறு பார்த்துக்‌ கொள்வது, இதனை எவ்வாறு சந்திப்பது என்பதற்கான  JAC-ன் இணையவழிப்‌ பொதுக்குழுக்‌ கூட்டம்‌ 14.07.2023 மாலை 7 மணிக்கு நடைபெற்றது. அந்தக்‌ கூட்டத்தில்‌ தமிழ்நாடு முழுவதும்‌ பல்கலைக்கழக மற்றும்‌ கல்லூரிகளில்‌ தமிழ்நாடு மாநில உயர்‌ கல்வி மன்றத்தினால்‌ "மாதிரி பாடத்திட்டம்‌" என்ற முகமூடியை அணிந்து, அனைவர்‌ மீதும்‌ திணிக்கப்பட்ட "பொதுப்பாடத்திட்டம்‌" பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்துடன்‌ 12.07.2023 அன்று நடத்திய சந்திப்பில்‌ தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு முற்றிலும்‌ மாறான பத்திரிக்கை செய்தியை தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற உறுப்பினர்‌- செயலர்‌ வெளியிட்டிருப்பது  JAC பொறுப்பாளர்களுக்கு அதிர்ச்சியையும்‌, மீண்டும்‌ ஏமாற்றத்தையும்‌ ஏற்படுத்தி உள்ளது.

அதனடிப்படையில்‌ தமிழ்நாடு உயர்‌ கல்வி நிறுவனங்கள்‌ மீது திணிக்கப்பட்ட "பொதுப்‌ பாடத்திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தொடர்‌ போராட்டங்களை நடத்த ஜே.ஏ.சி பொதுக்குழு தீர்மானித்துள்ளது.

அதன்‌ அடிப்படையில்‌,

17.07.2023 அன்று கோரிக்கை அட்டை அணிந்து தமிழகம்‌ முழுவதும்‌ கல்லூரிகளில்‌ வாயில்‌ முழக்கப்‌ போராட்டமானது தமிழ்நாடு முழுமைக்கும்‌ அனைத்து அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ கல்லூரிகளில்‌ சிறப்பாக நடைபெற்றுள்ளது.

பொதுப்‌ பாடத்திட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்‌ நடத்துதல்‌

21.07.2023 அன்று பல்கலைக்கழகங்கள்‌ முன்பு மாலை 4:30 மணிக்கு வாயில்‌ முழக்கப்‌ போராட்டம்‌

25.07.2023 அன்று தமிழ்நாடு உயர்‌ கல்வி மன்றத்தில்‌ "பயணப் படியைத் திருப்பி வழங்கும்‌ போராட்டம்‌". (12.03.2023அன்று தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்துடன்‌ நடந்த  பொதுப்‌ பாடத்திட்டம்‌" குறித்த கூட்டத்தில்‌ கலந்து கொண்ட ஜே. ஏ. சி. பொறுப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட பயணப்படியைத்திருப்பி வழங்கும்‌ போராட்டம்‌)

 JAC-யின்‌ அடுத்த கட்ட போராட்டங்களை ஜே.ஏ.சி.யின்‌ பொதுக்குழு கூடி முடிவெடுக்கும்‌’’.

இவ்வாறு கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு தெரிவித்துளது. 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

சிவகங்கை: அனுமதியற்ற 16 மழலையர் பள்ளிகள் மூடல்.. குழந்தைகளை சேர்க்க வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை !
சிவகங்கை: அனுமதியற்ற 16 மழலையர் பள்ளிகள் மூடல்.. குழந்தைகளை சேர்க்க வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை !
பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!
பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Mahindra EV: சூடுபறக்க தயாராகும் மஹிந்த்ராவின் புதிய, பெரிய மின்சார SUV - ட்ரிபிள் ஸ்க்ரீன், ரேஞ்ச் & பல விவரங்கள்
சூடுபறக்க தயாராகும் மஹிந்த்ராவின் புதிய, பெரிய மின்சார SUV - ட்ரிபிள் ஸ்க்ரீன், ரேஞ்ச் & பல விவரங்கள்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
TTV DHINAKARAN : ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
Embed widget