மேலும் அறிய

காவிரி ஆற்றில் மூழ்கிய ஐடி ஊழியர்கள் - கிடா வெட்டு விருந்துக்கு வந்தபோது நேர்ந்த சோகம்

தனது நண்பர் கிடாவெட்டு நிகழ்ச்சிக்கு வந்த கோவையைச் சேர்ந்த ஐடி ஊழியர்கள் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற நிலையில் இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி மாயம். தீயணைப்பு படை வீரர்கள் தேடும் பணியில் தீவிரம்.

தளவாபாளையம் அருகே காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு இளைஞர்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 


காவிரி ஆற்றில் மூழ்கிய ஐடி ஊழியர்கள் - கிடா வெட்டு விருந்துக்கு வந்தபோது நேர்ந்த சோகம்

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே  குளத்தூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் திவாகர் வயது 25. இவர் வாங்கல் கடம்பக்குறிச்சி அருகே உள்ள தனது குலதெய்வமான பவுலியம்மன் கோவிலில் கிடா வெட்டு விருந்து வைத்திருந்தார். இதில் திவாகரனின் நண்பரான கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர் விஷ்ணு வயது 25, கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் சேர்ந்த ஆதர்ஷ் வயது 25 மற்றும் அவர்கள் நண்பர்கள் ஆன கோவையைச் சேர்ந்த சங்கர், நவீன் குமார், அஜித் உள்ளிட்ட ஐந்து பேர் நேற்று கிடா வெட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காலையில் கடம்பக்குறிச்சி வந்தனர் .

 


காவிரி ஆற்றில் மூழ்கிய ஐடி ஊழியர்கள் - கிடா வெட்டு விருந்துக்கு வந்தபோது நேர்ந்த சோகம்

இவர்கள் நேற்று மதிய உணவை முடித்துவிட்டு குளிப்பதற்காக கடம்பன்குறிச்சி பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் ஐந்து நபர்கள் சென்றுள்ளனர்.  காவிரி ஆற்றில் வெள்ளம் இரு கரைகளையும் தொட்டு வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு உள்ளது.  ஆற்றில் தற்போது அதிகப்படியான தண்ணீர் செல்லும் நிலையில் ஆழமான பகுதியில் முதலில் இறங்கிய ஆதர்ஷை தண்ணீர் இழுத்துச் சென்றதை  கண்ட விஷ்ணு அவரைக் காப்பாற்ற ஆற்றுக்குள் இறங்கிய போது அவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதனால் பதட்டமடைந்த அவரது நண்பர்களான சங்கர், நவீன் குமார், அஜித் ஆகியோர் மற்ற உறவினர் இணைந்து வேலாயுதம் பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

 


காவிரி ஆற்றில் மூழ்கிய ஐடி ஊழியர்கள் - கிடா வெட்டு விருந்துக்கு வந்தபோது நேர்ந்த சோகம்


தகவலை பெற்ற தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவிரி ஆற்றுக்குள் இறங்கி மாயமான இரண்டு பேரை பைப்பர் படத்தின் மூலம் தேடினர். இரவு நேரம் ஆனதால் தேடும்படி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் தேடுதல் பணி தொடங்கியுள்ளது.

 


காவிரி ஆற்றில் மூழ்கிய ஐடி ஊழியர்கள் - கிடா வெட்டு விருந்துக்கு வந்தபோது நேர்ந்த சோகம்

இதுகுறித்து வாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து நீரில் மூழ்கிய கோவையைச் சேர்ந்த ஐடி ஊழியர்களின் விரிவான தகவலை சேகரித்து வருகின்றனர். கரூர் கடங்குறிச்சி பகுதியில் கிடா வெட்டுக்கு வந்த கோவையைச் சேர்ந்த ஐந்து இளைஞர்களின் இரண்டு இளைஞர்கள் காவிரி நீரால் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர்களின் இரண்டாவது நாளாக தேடும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளதால் அவரது உறவினர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget