மேலும் அறிய

லிவ் இன் ரிலேஷன்ஷிப்புக்கு மறுப்பு! காதலன் தற்கொலை! உடனே காதலி எடுத்த விபரீத முடிவு

அந்தப் பெண் அந்த இளைஞருடன் செல்ல மறுத்ததால், ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

24 வயது காதலன் தற்கொலை செய்து கொண்டதால், 17 வயது சிறுமியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

அந்தப் பெண் அந்த இளைஞருடன் செல்ல மறுத்ததால், ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதலனின் மரணத்தால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்ணும் தற்கொலை செய்து கொண்டார்.

 24 வயது இளைஞன் ஒருவர் நைகான் கிழக்கின் கோல்ஹி கிராமத்தில் உள்ள ஆஷா நகரில் வசித்து வந்தார். அதேபோல் 17 வயது சிறுமி ஒருவர் கல்லூரியில் படித்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் காதலன் 17 வயது சிறுமியிடம் அவரின் பெற்றோரை விட்டு வருமாறும், தன்னுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்குமாறும் வலியுறுத்தியதாக தெரிகிறது. தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவே அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த அந்த பெண் தானும் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், “அவரது குடும்பத்தினர் அவரை ஆறுதல்படுத்த முயன்றனர், ஆனால் அவர் ஆறுதல் அடைய முடியவில்லை. அவரது தற்கொலைக்கு அவர் பொறுப்பேற்று, குற்ற உணர்வைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவரும் தற்கொலை செய்துகொண்டார்” எனத் தெரிவித்தனர்.

17 வயது சிறுமி சனிக்கிழமை தனது காதலனின் வீட்டிற்குச் சென்றதாகவும், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த நபர் சிறுமியை தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார். இருப்பினும், வாக்குவாதத்திற்குப் பிறகு, சிறுமி அங்கிருந்து சென்றுள்ளார்.

அன்றைய இரவே காதலன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அடுத்த நாள் காலை பக்கத்து வீட்டுக்காரர் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

காதலன் இறந்த மறுநாளே அந்தப் பெண் அதே முறையில் தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விபத்து மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளனர். சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget