மேலும் அறிய

Crime: ஆன்லைனில் கடன்.. அரை நிர்வாண படம்.. மிரட்டிய நிதி நிறுவனம்.. விஷமருந்தி இளைஞர் தற்கொலை

திருவாரூரில் ஆன்லைன் மூலம் கடன் வாங்கிய நபர் விஷமருந்தி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூரில் ஆன்லைன் மூலம் கடன் வாங்கிய நபர் விஷமருந்தி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட இந்த காலக்கட்டத்தில் இருந்த இடத்தில் இருந்து கொண்டே மொபைல்போன் மூலம் அனைத்தையும் பெறும் நிலைக்கு வந்து விட்டோம். அந்த வகையில் கடன் பெறும் வகையில் சில செயலிகளும் செயல்பட்டு வருகிறது. வங்கிகள், நிதி நிறுவனங்களும் வாடிக்கையாளர்கள் தங்களை எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் சேவையை எளிதாக்குகின்றன. தினம் தினம் நமக்கு கடன் வேண்டுமா என்ற மெசெஜ்களும் வந்து கொண்டே தான் இருக்கின்றன. 

இப்படியான நிலையில் ஆன்லைன் மூலம் கடன் வாங்கிய நபர் விஷமருந்தி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் உள்ள ஏரி வேலூர் கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவரது மகன் ராஜேஷ் என்ற 27 வயது இளைஞர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இதற்கிடையில் கடன் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த அவர், மொபைல் ஆப் மூலம் ஆன்லைன் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். இந்த தொகையை முழுவதையும் ராஜேஷ் செலுத்தி விட்டதாக சொல்லப்படுகிறது. 

ஆனால் கடன் கொடுத்த நிதி நிறுவனம் கட்ட வேண்டிய பாக்கித்தொகை உள்ளது என கூறி ராஜேஷை தொடர்ந்து தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர். மேலும் ராஜேஷ் செல்போனில் அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டு மிரட்டியும் வந்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த ராஜேஷ் வயலுக்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டு மயங்கியுள்ளார். 

சிறிது நேரம் கழித்து மயங்கி கிடந்த ராஜேஷை பார்த்த அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வலங்கைமான் காவல் ஆய்வாளர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

தலைப்பு செய்திகள்

" நிலப் பிரச்சனை என வாட்ஸ் அப்பில் மெசேஜ் " போலீஸ் விசாரணையில் அம்பலமான காதலி கொலை பயங்கரம்
" 70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை " தட்டி கேட்ட பேரனுக்கும் நேர்ந்த சோகம்
40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
"என்னை காதலிக்கா விட்டால் ஆசிட் ஊற்றுவேன் " 17 வயது சிறுமிக்கு மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget