மேலும் அறிய

Crime | ஷேர் ஆட்டோவில் புகைபிடித்த நபர் செய்த கொடூரம்.. தட்டிக்கேட்ட பெண் மீது பயங்கர தாக்குதல்..

உத்தரப் பிரதேசம் குருகிராமில் ஷேர் ஆட்டோவில் புகைபிடித்த தனியார் வங்கி அதிகாரியிடம் புகைபிடிக்க மறுப்பு தெரிவித்த பெண் பயணி தாக்கப்பட்டுள்ளதாக குருகிராம் காவல்துறையினர் இன்று செய்தி வெளியிட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேசம் குருகிராம் பகுதியில் ஷேர் ஆட்டோவில் புகைபிடித்த தனியார் வங்கி அதிகாரியிடம் புகைபிடிக்க மறுப்பு தெரிவித்த மற்றொரு பெண் பயணி தாக்கப்பட்டுள்ளதாக குருகிராம் காவல்துறையினர் இன்று செய்தி வெளியிட்டுள்ளனர். 

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பரிதாபாத் பகுதியின் பல்லப்கார் பகுதியைச் சேர்ந்த வாசு சிங் என்பவர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, பின்னர் பிணை வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் சுமன் லதா எனவும், அவர் டெல்லியின் வசீராபாத் பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் சுமன் லதா அளித்துள்ள புகாரில், கடந்த பிப்ரவரி 7 அன்று மாலை தனது வீட்டுக்கு ஷேர் ஆட்டோவில் திரும்பி வந்துகொண்டிருந்த போது, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

Crime | ஷேர் ஆட்டோவில் புகைபிடித்த நபர் செய்த கொடூரம்.. தட்டிக்கேட்ட பெண் மீது பயங்கர தாக்குதல்..

குருகிராம் பகுதியின் க்ரீன்வுட் சிட்டி, 46வது செக்டாருக்கு அருகில் ஆட்டோவில் தம்பதி ஒருவர் ஏறியதாகவும், அவர்களுள் இருந்த ஆண் புகைப்பிடித்துக் கொண்டே ஆட்டோவில் ஏறி, புகைப்பிடிப்பதைத் தொடர்ந்ததாகவும் சுமன் லதா கூறியுள்ளார். அவரைப் புகைப்பிடிப்பதை நிறுத்துவாறு கூறிய போது, அந்த நபர் கோபப்பட்டு மறுத்ததாகவும், இதனால் கோபமடைந்த சுமன் லதா அவரின் வாயில் இருந்து சிகரெட்டை எடுத்து வெளியில் வீசியதாகத் தெரிவித்துள்ளார். கடும் ஆத்திரமடைந்த வாசு சிங், சுமன் லதாவின் முகத்தில் குத்தியதில், அவரது மூக்கில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. மேலும் வாசு சிங் சுமன் லதாவைத் தரக்குறைவாகத் திட்டியதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார் சுமன் லதா. 

ஆட்டோ ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தியவுடன், தனது குடும்பத்தினருக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்ததாகப் புகார்தாரரான சுமன் லதா தெரிவித்துள்ளார். 

Crime | ஷேர் ஆட்டோவில் புகைபிடித்த நபர் செய்த கொடூரம்.. தட்டிக்கேட்ட பெண் மீது பயங்கர தாக்குதல்..

குருகிராம் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, வாசு சிங்கைக் கைது செய்து அவர் மீது, சட்டப்பிரிவுகள் 323 ( தாக்குவது), 325 (வேண்டுமென்றே கடுமையாகத் தாக்குவது), 509 (பெண்களை அவமானப்படுத்துவது) ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இந்த வழக்கை விசாரித்து வரும் காவல்துறை துணை ஆய்வாளர் அமித் குமார், வாசு சிங் விசாரணைக்கு ஒப்புக் கொண்டதால் பிணையில் விடுவிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget