மேலும் அறிய

Crime: தூத்துக்குடியில் பயங்கரம்.. நடுரோட்டில் பெண்ணை வெட்டிக்கொன்ற கணவன், தாய்மாமா - காரணம் என்ன?

நேற்று மாலை சந்தன மாரியம்மாள் வெளியே சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில் கணேஷ் நகர் வழியாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பாலமுருகன், காளிமுத்து வழிமறித்துள்ளனர்.

தூத்துக்குடியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் எட்டையப்புரம் அருகேயுள்ள முத்துலாபுரம் கோட்டூர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் சந்தன மாரியம்மாள் என்ற பெண்ணுக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பாலமுருகன் சிங்கப்பூரில் வேலை செய்து வந்த போது அங்கு சம்பாதித்த பணத்தை மனைவிக்கு அனுப்பி வைப்பது வழக்கம். 

அந்த பணத்தைக் கொண்டு தூத்துக்குடி மாவட்டம் கிருபை நகரில் சந்த மாரியம்மாள் இடம் வாங்கி வீடு கட்டியுள்ளார். வீட்டை தனது பெயரில் தான் பதிவு செய்துள்ளார். இதனிடையே கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு பாலமுருகன் சிங்கப்பூரில் இருந்து திரும்பி வந்து கிருபை நகரில் உள்ள வீட்டில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். அப்போது பாலமுருகன் செலவுக்கு பணம் கேட்கும்போதெல்லாம் சந்தன மாரியம்மாள் கொடுக்க மறுத்ததாக சொல்லப்படுகிறது. 

அதேசமயம் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் வீட்டில் சந்தன மாரியம்மாள் வேலை செய்து வந்தது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கடந்த 6 மாதங்களாக கணவன், மனைவி இருவரும் பிரிந்துள்ளனர். இப்படியான நிலையில் சந்தன மாரியம்மாள் சுமார் 40 பவுன் நகையை தனது தாய்மாமா காளிமுத்துவிடம் வாங்கி விட்டு திருப்பி கேட்டபோது கொடுக்க மறுத்து ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் பாலமுருகன், காளிமுத்து இருவரும் சந்தன மாரியம்மாள் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர். 

இதனிடையே நேற்று மாலை சந்தன மாரியம்மாள் வெளியே சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில் கணேஷ் நகர் வழியாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த பாலமுருகன், காளிமுத்து இருவரும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதனால் ரத்தவெள்ளத்தில் படுகாயமடைந்த சந்தன மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

நடுரோட்டில் பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் காட்டுத்தீயாக பரவியது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சந்தன மாரியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதற்குள் காளிமுத்து, பாலமுருகன் இருவரும் தூத்துக்குடி தென்பாகம் போலீஸில் சரணடைந்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget