மேலும் அறிய

Crime: தூத்துக்குடியில் பயங்கரம்.. நடுரோட்டில் பெண்ணை வெட்டிக்கொன்ற கணவன், தாய்மாமா - காரணம் என்ன?

நேற்று மாலை சந்தன மாரியம்மாள் வெளியே சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில் கணேஷ் நகர் வழியாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பாலமுருகன், காளிமுத்து வழிமறித்துள்ளனர்.

தூத்துக்குடியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் எட்டையப்புரம் அருகேயுள்ள முத்துலாபுரம் கோட்டூர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் சந்தன மாரியம்மாள் என்ற பெண்ணுக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பாலமுருகன் சிங்கப்பூரில் வேலை செய்து வந்த போது அங்கு சம்பாதித்த பணத்தை மனைவிக்கு அனுப்பி வைப்பது வழக்கம். 

அந்த பணத்தைக் கொண்டு தூத்துக்குடி மாவட்டம் கிருபை நகரில் சந்த மாரியம்மாள் இடம் வாங்கி வீடு கட்டியுள்ளார். வீட்டை தனது பெயரில் தான் பதிவு செய்துள்ளார். இதனிடையே கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு பாலமுருகன் சிங்கப்பூரில் இருந்து திரும்பி வந்து கிருபை நகரில் உள்ள வீட்டில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். அப்போது பாலமுருகன் செலவுக்கு பணம் கேட்கும்போதெல்லாம் சந்தன மாரியம்மாள் கொடுக்க மறுத்ததாக சொல்லப்படுகிறது. 

அதேசமயம் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் வீட்டில் சந்தன மாரியம்மாள் வேலை செய்து வந்தது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கடந்த 6 மாதங்களாக கணவன், மனைவி இருவரும் பிரிந்துள்ளனர். இப்படியான நிலையில் சந்தன மாரியம்மாள் சுமார் 40 பவுன் நகையை தனது தாய்மாமா காளிமுத்துவிடம் வாங்கி விட்டு திருப்பி கேட்டபோது கொடுக்க மறுத்து ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் பாலமுருகன், காளிமுத்து இருவரும் சந்தன மாரியம்மாள் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர். 

இதனிடையே நேற்று மாலை சந்தன மாரியம்மாள் வெளியே சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில் கணேஷ் நகர் வழியாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த பாலமுருகன், காளிமுத்து இருவரும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதனால் ரத்தவெள்ளத்தில் படுகாயமடைந்த சந்தன மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

நடுரோட்டில் பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் காட்டுத்தீயாக பரவியது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சந்தன மாரியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதற்குள் காளிமுத்து, பாலமுருகன் இருவரும் தூத்துக்குடி தென்பாகம் போலீஸில் சரணடைந்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
EPS:
EPS: "விவசாயிகளுக்கு பச்சைத் துரோகி நானா?" ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Embed widget