மேலும் அறிய

Crime: தூத்துக்குடியில் பயங்கரம்.. நடுரோட்டில் பெண்ணை வெட்டிக்கொன்ற கணவன், தாய்மாமா - காரணம் என்ன?

நேற்று மாலை சந்தன மாரியம்மாள் வெளியே சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில் கணேஷ் நகர் வழியாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பாலமுருகன், காளிமுத்து வழிமறித்துள்ளனர்.

தூத்துக்குடியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் எட்டையப்புரம் அருகேயுள்ள முத்துலாபுரம் கோட்டூர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் சந்தன மாரியம்மாள் என்ற பெண்ணுக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பாலமுருகன் சிங்கப்பூரில் வேலை செய்து வந்த போது அங்கு சம்பாதித்த பணத்தை மனைவிக்கு அனுப்பி வைப்பது வழக்கம். 

அந்த பணத்தைக் கொண்டு தூத்துக்குடி மாவட்டம் கிருபை நகரில் சந்த மாரியம்மாள் இடம் வாங்கி வீடு கட்டியுள்ளார். வீட்டை தனது பெயரில் தான் பதிவு செய்துள்ளார். இதனிடையே கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு பாலமுருகன் சிங்கப்பூரில் இருந்து திரும்பி வந்து கிருபை நகரில் உள்ள வீட்டில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். அப்போது பாலமுருகன் செலவுக்கு பணம் கேட்கும்போதெல்லாம் சந்தன மாரியம்மாள் கொடுக்க மறுத்ததாக சொல்லப்படுகிறது. 

அதேசமயம் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் வீட்டில் சந்தன மாரியம்மாள் வேலை செய்து வந்தது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கடந்த 6 மாதங்களாக கணவன், மனைவி இருவரும் பிரிந்துள்ளனர். இப்படியான நிலையில் சந்தன மாரியம்மாள் சுமார் 40 பவுன் நகையை தனது தாய்மாமா காளிமுத்துவிடம் வாங்கி விட்டு திருப்பி கேட்டபோது கொடுக்க மறுத்து ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் பாலமுருகன், காளிமுத்து இருவரும் சந்தன மாரியம்மாள் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர். 

இதனிடையே நேற்று மாலை சந்தன மாரியம்மாள் வெளியே சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில் கணேஷ் நகர் வழியாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த பாலமுருகன், காளிமுத்து இருவரும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதனால் ரத்தவெள்ளத்தில் படுகாயமடைந்த சந்தன மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

நடுரோட்டில் பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் காட்டுத்தீயாக பரவியது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சந்தன மாரியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதற்குள் காளிமுத்து, பாலமுருகன் இருவரும் தூத்துக்குடி தென்பாகம் போலீஸில் சரணடைந்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget