மேலும் அறிய

Crime: தூத்துக்குடியில் பயங்கரம்.. நடுரோட்டில் பெண்ணை வெட்டிக்கொன்ற கணவன், தாய்மாமா - காரணம் என்ன?

நேற்று மாலை சந்தன மாரியம்மாள் வெளியே சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில் கணேஷ் நகர் வழியாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பாலமுருகன், காளிமுத்து வழிமறித்துள்ளனர்.

தூத்துக்குடியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் எட்டையப்புரம் அருகேயுள்ள முத்துலாபுரம் கோட்டூர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் சந்தன மாரியம்மாள் என்ற பெண்ணுக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பாலமுருகன் சிங்கப்பூரில் வேலை செய்து வந்த போது அங்கு சம்பாதித்த பணத்தை மனைவிக்கு அனுப்பி வைப்பது வழக்கம். 

அந்த பணத்தைக் கொண்டு தூத்துக்குடி மாவட்டம் கிருபை நகரில் சந்த மாரியம்மாள் இடம் வாங்கி வீடு கட்டியுள்ளார். வீட்டை தனது பெயரில் தான் பதிவு செய்துள்ளார். இதனிடையே கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு பாலமுருகன் சிங்கப்பூரில் இருந்து திரும்பி வந்து கிருபை நகரில் உள்ள வீட்டில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். அப்போது பாலமுருகன் செலவுக்கு பணம் கேட்கும்போதெல்லாம் சந்தன மாரியம்மாள் கொடுக்க மறுத்ததாக சொல்லப்படுகிறது. 

அதேசமயம் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் வீட்டில் சந்தன மாரியம்மாள் வேலை செய்து வந்தது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கடந்த 6 மாதங்களாக கணவன், மனைவி இருவரும் பிரிந்துள்ளனர். இப்படியான நிலையில் சந்தன மாரியம்மாள் சுமார் 40 பவுன் நகையை தனது தாய்மாமா காளிமுத்துவிடம் வாங்கி விட்டு திருப்பி கேட்டபோது கொடுக்க மறுத்து ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் பாலமுருகன், காளிமுத்து இருவரும் சந்தன மாரியம்மாள் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர். 

இதனிடையே நேற்று மாலை சந்தன மாரியம்மாள் வெளியே சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில் கணேஷ் நகர் வழியாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த பாலமுருகன், காளிமுத்து இருவரும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதனால் ரத்தவெள்ளத்தில் படுகாயமடைந்த சந்தன மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

நடுரோட்டில் பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் காட்டுத்தீயாக பரவியது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சந்தன மாரியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதற்குள் காளிமுத்து, பாலமுருகன் இருவரும் தூத்துக்குடி தென்பாகம் போலீஸில் சரணடைந்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget