மேலும் அறிய

சென்னையில் வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை : கணவர் உட்பட 3 பேர் கைது..!

கேரளாவில் வரதட்சணை கொடுமையால் பெண் விஸ்மயா தற்கொலை செய்து கொண்டது போல சென்னையிலும் 19 வயது பெண் ஜோதிஸ்ரீ தற்கொலை செய்து கொண்ட சம்பவர் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது- தற்கொலைக்கு முன் ஜோதிஸ்ரீ வெளியிட்ட வீடியோவால் கணவர், மாமியார் உள்ளிட்ட 3 பேர் கைது

சென்னை, கே.கே நகர் அருகே உள்ள எம்ஜிஆர் நகர், தந்தை பெரியார் தெருவை சேர்ந்த பி.காம் பட்டதாரி ஜோதிஸ்ரீக்கும் (19), ஆவடி அருகே திருமுல்லைவாயல், அன்னை சத்யா நகரைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் பாலமுருகன் (29) என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு பாலமுருகனும் அவரது தாயார் அம்சாவும் சேர்ந்து, "வீட்டிற்காக கடன் வாங்கி உள்ளோம். எனவே, எங்களுக்கு பணம் தேவைப்படுகிறது. உனது பெற்றோரிடம் இருந்து பணம் வாங்கி கொடு" என கூறி ஜோதிஸ்ரீயை கொடுமைப்படுத்தி உள்ளனர்.

இதனையடுத்து கடந்த டிசம்பர் மாதம் இறுதியில், ஜோதிஸ்ரீ தனது கணவர் பாலமுருகனை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டில் அடைக்கலம் ஆனார். இந்நிலையில், ஏப்ரல் மாதம் 4்-ஆம் தேதி ஜோதிஸ்ரீ திருமுல்லைவாயிலில் உள்ள கணவர் பாலமுருகன் வீட்டுக்கு மீண்டும் வந்தார். அப்போது மாமியார் அம்சா அவரை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. இதனையடுத்து ஜோதிஸ்ரீ வீட்டின் முதல் மாடிக்கு சென்றார். இதனால் ஆத்திரமடைந்த அம்சா, முதல் மாடி அறைக்கு செல்லும் மின் வயரை துண்டித்தார். இதனால் மனமுடைந்த ஜோதிஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜோதிஸ்ரீயின் தற்கொலை குறித்து ஆவடி காவல் உதவி ஆணையர் சத்தியமூர்த்தி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஜோதிஸ்ரீ செல்போனில் ஒரு வீடியோ பதிவிட்டு இருந்தார். மேலும், அவர் கைப்பட எழுதிய உருக்கமாக ஒரு கடிதம் ஒன்றும் விசாரணையில் சிக்கியது. அதில், எனது சாவுக்கு கணவர் பாலமுருகனும், மாமியார் அம்சா மற்றும் குடும்பத்தினர் தான் காரணம் என கூறியிருந்தார். அதேபோல்  தமது தற்கொலைக்கு காரணமான தனது கனவர் மற்றும் அவரது குடும்பத்தினரை விட வேண்டாம் என தமது குடும்பத்தினருக்கு உருக்கமாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில்  ஜோதிஸ்ரீ தற்கொலைக்கு காரணமான அவரது கணவர் பாலமுருகன், மாமியார் அம்சா மற்றும் பாலமுருகனின் அண்ணன் சத்யராஜ் ஆகியோர்தான் என்பது காரணம் திருவள்ளூர் ஆர்.டி.ஓ  விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து, அவரின் உத்தரவுவின் பேரில் திருமுல்லைவாயில் போலீசார் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

சென்னையில் வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை : கணவர் உட்பட 3 பேர் கைது..!

திருமணமான நான்கே மாதத்தில் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் பி.காம் பட்டதாரியான ஜோதிஸ்ரீ உயிரிழந்தது அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரம் கேரளா மாநிலம் கொல்லத்தில் கரண்குமார் என்பவருக்கு 100 சவரன் நகை, 1.2 ஏக்கர் நிலம், 20 லட்சம் மதிப்புள்ள கார் ஆகியவை வரதட்சணையாக கொடுக்கப்பட்டும், தனக்கு கொடுக்கப்பட்ட காரின் மதிப்பு குறைவு என்பதால் அவரது மனைவி விஸ்மயாவை அடித்து துன்புறுத்தியாதால் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவர் கேரளாவில் கடும் சோகத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் இதே போன்ற சம்பவம் சென்னையிலும் நிகழ்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஊதாரியாக ஊர் சுத்துறியே வேலைக்கு போடா?.. திட்டிய பெற்றோர், புரிந்து கொள்ளாமல் மகன் எடுத்த விபரீத முடிவு
ஊதாரியாக ஊர் சுத்துறியே வேலைக்கு போடா?.. திட்டிய பெற்றோர், புரிந்து கொள்ளாமல் மகன் எடுத்த விபரீத முடிவு
முதல் இரவில் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கணவன்.. திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே நடந்த கொடூரம்
முதல் இரவில் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கணவன்.. திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே நடந்த கொடூரம்
Crime: அச்சச்சோ.. கிரிக்கெட் போட்டியில் தகராறு.. ஒரு ரன்னால் பறிபோன உயிர்..
Crime: அச்சச்சோ.. கிரிக்கெட் போட்டியில் தகராறு.. ஒரு ரன்னால் பறிபோன உயிர்..
உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் - நீதிபதி வேதனை !
உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் - நீதிபதி வேதனை !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Iran War: புஸ்வானமாகும் போர்நிறுத்தம்.? இன்னும் பெரிய, வலிமையான தாக்குதல்; ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
புஸ்வானமாகும் போர்நிறுத்தம்.? இன்னும் பெரிய, வலிமையான தாக்குதல்; ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Pod Taxi: இந்தியாவின் முதல் டிரைவர் இல்லா டாக்ஸி அறிமுகம்; எங்கே, எப்படி செயல்படும்? பாதுகாப்பா?
Pod Taxi: இந்தியாவின் முதல் டிரைவர் இல்லா டாக்ஸி அறிமுகம்; எங்கே, எப்படி செயல்படும்? பாதுகாப்பா?
US-Israel-Iran War: ஹார்மஸ் திறக்கவே முடியாது..! அப்படிக்கா போங்க - கப்பல்களுக்கு புது நீர் வழிப்பாதையை அறிவித்த ஈரான்
US-Israel-Iran War: ஹார்மஸ் திறக்கவே முடியாது..! அப்படிக்கா போங்க - கப்பல்களுக்கு புது நீர் வழிப்பாதையை அறிவித்த ஈரான்
Top 10 News Headlines: விஜயை வீழ்த்த வேண்டும், மீண்டும் போர் மூளும், குறைந்த தங்கம் விலை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: விஜயை வீழ்த்த வேண்டும், மீண்டும் போர் மூளும், குறைந்த தங்கம் விலை - 11 மணி வரை இன்று
Puducherry Election 2026 LIVE: நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்கும் மக்கள்.. புதுச்சேரி தேர்தல் அப்டேட்ஸ் உடனுக்குடன்!
Puducherry Election 2026 LIVE: நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்கும் மக்கள்.. புதுச்சேரி தேர்தல் அப்டேட்ஸ் உடனுக்குடன்!
Tamilnadu Roundup: இன்று இறுதி வேட்பாளர் பட்டியல், இலங்கை கடற்படை அராஜகம், வாக்காளர்களை வரவேற்கும் ரோபோ - 10 மணி செய்திகள்
இன்று இறுதி வேட்பாளர் பட்டியல், இலங்கை கடற்படை அராஜகம், வாக்காளர்களை வரவேற்கும் ரோபோ - 10 மணி செய்திகள்
Puducherry Election 2026 : 30 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம் - நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் ஓட்டு!
Puducherry Election 2026 : 30 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம் - நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் ஓட்டு!
USA Iran War: 10 நிமிடங்களில் 100 ஏவுகணைகள்..! போர் நிறுத்தம், எங்ககிட்ட பேசவே இல்லை - கடுப்பாகி ஈரான் முடிவு
USA Iran War: 10 நிமிடங்களில் 100 ஏவுகணைகள்..! போர் நிறுத்தம், எங்ககிட்ட பேசவே இல்லை - கடுப்பாகி ஈரான் முடிவு
Embed widget