மேலும் அறிய

மாஸ்டர் ப்ளான் போட்டு மூன்று திருமணம் : வடிவேலு பட பாணியில் தெரியவந்த மோசடி..!

எனக்கு யாரும் இல்லை என தெரிவித்து 3 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த சுஹாசினி் என்ற பெண் ஆந்திராப்போலீசாரிடம் வசமாக சிக்கினார்..

ஆந்திராவில் படங்களை மிஞ்சும் அளவிற்கு மாஸ்டர் பிளாn போட்டு 3-வது திருமணம் செய்ததோடு, பணம் நகையினைக் கொள்ளையடித்து சென்ற வழக்கில் சுஹாசினி என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

சினிமாக்களில் தான் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருமணமான ஆண், பெண் யாராக இருந்தாலும் வேறொருவரை ஏமாற்றி திருமணம் செய்வதைப் பார்த்திருப்போம். அப்படியான விஷயங்கள் தற்போது அதிகரித்தும் வருகிறது. அப்படித்தான் ஆந்திர மாநிலம் சித்தூரில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், அடக்கமாகவும் தெரிந்த பெண்களைப் பார்த்தால் அவர்களுடன் நட்பு கொள்ள வேண்டும் என்ற ஆசை பலருக்கும் வருவதுபோல, சித்தூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 26 வயதான சுஹாசினி என்ற பெண்ணுடன், அதே நிறுவனத்தில் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணிபுரிந்த சுனில் நட்புடன் பழகி வந்துள்ளார். நன்றாக போய்க்கொண்டிருந்த நட்பு காதலில் முடிந்து இவர்கள் இருவரும் காதல் வயப்படத்தொடங்கிவிட்டனர்.


மாஸ்டர் ப்ளான் போட்டு மூன்று திருமணம் : வடிவேலு பட பாணியில் தெரியவந்த மோசடி..!

இந்நேரத்தில் தான் எனக்கு யாரும் இல்லை, நான் அனாதை என்று தெரிவித்த நிலையில் தான், சுனில் தனது குடும்பத்தாரிடம் பேசி இருவரும் திருமணம் செய்துள்ளனர். இதனையடுத்துதான் இவர்களது வாழ்வில் பிரச்சனை தொடங்கியது. தன்னுடைய தாய்மாமன் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது எனவே பணம் தேவை என சுனிலின் தந்தையிடம் பெற்றுள்ளார் சுஹாசினி.  இத்தகவலை அறிந்த சுனில், ஏற்கனவே திருமணத்திற்கு முன்பு தான் 2 லட்சம் வாங்கியுள்ள நிலையில், ஏன் தற்பொழுது மீண்டும் பணம் வாங்கியிருக்கிறாய்? என கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் சுஹாசினியால் எந்த பதிலையும் தெரிவிக்க முடியவில்லை. இதனையடுத்து சுனில் வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் போன்றவற்றை கொள்ளையடித்து சென்று விட்டார்.

இதனையடுத்து அதிர்ச்சியடைந்த சுனில், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போய் இருந்த நிலையில்தான், தன்னிடம் இருந்த சுஹாசினியின் ஆதாரில் உள்ள முகவரிக்கு சென்று விசாரித்துள்ளார். அப்பெண்ணின் வீட்டிற்கு அருகில் இருந்தவர்கள், ஏற்கனவே இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது என கூறியுள்ளனர். தான் ஏமாந்துவிட்டோம் என்று புலம்பிய சுனில் இதுக்குறித்து அலிபிரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஏமாற்றி திருமணம், பண மோசடி போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் போலீசார் தங்களது விசாரணையை தொடங்கினர்.


மாஸ்டர் ப்ளான் போட்டு மூன்று திருமணம் : வடிவேலு பட பாணியில் தெரியவந்த மோசடி..!

போலீசாருக்கு தலைசுற்றும் அளவிற்கு தான் விசாரணையில் தகவல் கிடைத்தது. ஆம், சுஹாசினி என்ற இந்தப்பெண் வினய் என்பவரை ஏற்கனவே திருமணம் செய்துகொண்டதோடு அவரிடம் பணமோசடி செய்ததாக வழக்கு ஒன்று பதிவாகியிருந்தது தெரியவந்தது.

ஒரு மாத காலமாக இப்பெண்ணை போலீசார் தேடிவந்த நிலையில்தான், திருப்பதியில் சிவிம்ஸ் மருத்துவமனை அருகே சுற்றித்திரிந்த சுஹாசினியை போலீசார் கைது செய்துவிசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த 3 பேரை தவிர்த்து வேறு யாராவது சுஹாசினியின் காதல் வலையில் சிக்கி வாழ்க்கையையும், பணத்தையும் இழந்துள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

" உல்லாசமாக இருக்கலாம் " ஆசை வார்த்தை கூறி பைனான்ஸியரை நிர்வாணமாக்கி மிரட்டிய பெண்
டாஸ்மாக் சென்று திரும்பியவருக்கு நேர்ந்த கொடூரம் !! மில் தொழிலாளி நள்ளிரவில் அடித்துக் கொலை
டாஸ்மாக் சென்று திரும்பியவருக்கு நேர்ந்த கொடூரம் !! மில் தொழிலாளி நள்ளிரவில் அடித்துக் கொலை
crime: இன்ஸ்டாகிராம் மோகம்: மனைவியை கொன்று நிர்வாணமாக்கிய கணவன்; பகீர் வாக்குமூலம்!
crime: இன்ஸ்டாகிராம் மோகம்: மனைவியை கொன்று நிர்வாணமாக்கிய கணவன்; பகீர் வாக்குமூலம்!
" யாரிடமாவது சொன்னால் கொலை செய்திடுவேன் " சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரியாணி கடை ஓனர்

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget