மேலும் அறிய

Crime: அடங்காத காதல்.. கணவனை கொன்ற மனைவி.. உதவிய முன்னாள், இந்நாள் காதலன்!

சுக்தேவ்கிரியின் அண்ணன் சாந்தகிரியுடன் ஜாக்ருதிக்கு பழக்கம் ஏற்பட்டது நாளடைவில் இது திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. ஒருகட்டத்தில் ஜாக்ருதி தனது கணவரையும் குழந்தைகளையும் கைவிட்டு சென்று விட்டார்.

குஜராத் மாநிலத்தில் கணவரைக் கொலை செய்த வழக்கில் அவரது மனைவியும், கள்ளக்காதலனும் அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்ய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பின்னணியில் ஏகப்பட்ட விஷயங்கள் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. அதனைப் பற்றிக் காணலாம். 

குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கு ஜாக்ருதி என்ற பெண்ணும், சுக்தேவ்கிரி கோஸ்வாரி என்ற நபரும் திருமணமாகி வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே சுக்தேவ்கிரியின் அண்ணன் சாந்தகிரியுடன் ஜாக்ருதிக்கு பழக்கம் ஏற்பட்டது நாளடைவில் இது திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. ஒருகட்டத்தில் ஜாக்ருதி தனது கணவரையும் குழந்தைகளையும் கைவிட்டு சாந்திகிரியைத் திருமணம் செய்ய வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 

இருவரும் அருகிலுள்ள மற்றொரு கிராமத்தில் புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். அத்துடன் அந்த பிரச்னை முடியவில்லை. லாரி ஓட்டுநரான சாந்திகிரி, அடிக்கடி வாரக்கணக்கில் வீட்டிலிருந்து வெளியூர் சென்றுவிடுவது வழக்கம். அப்படியாக அவர் இல்லாத நேரத்தில் ஜாக்ருதி பாரத் சபாரியா என  மற்றொரு நபருடன் கள்ளக்காதலில் ஈடுபட தொடங்கியிருக்கிறார். இந்த உறவு மிக தீவிரமாக இருந்த நிலையில் சாந்திகிரி  வேலை விஷயமாக வெளியூர் செல்லும்போதெல்லாம் இந்த ஜோடிக்கு ஒரே குஷியாக இருக்கும் அளவுக்கு பழக்கம் எல்லை மீறி சென்றுள்ளது. இதற்காக பாரத் சபாரியாவை தனது வீட்டுக்கு அருகிலேயே ஜாக்ருதி குடிவைத்துள்ளார். 

இதற்கிடையில் எத்தனை நாளைக்கு தான் நாம் திருட்டுத்தனமாக சந்திக்க வேண்டியது, அதனால் நம் உறவுக்கு தடையாக இருக்கும் சாந்தகிரியை கொலை செய்து விடலாம் என இருவரும் முடிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சாந்திகிரியைக் கொல்வதற்காக ஜாக்ருதி, பாரத் இருவரும் யூனிஸ் என்ற நபரை 25,000 ரூபாய்க்கு பணிக்கு அமர்த்தியுள்ளனர். 

ஒரு நாள் இரவு கொலையைச் செய்யும் நோக்கத்தில் யூனிஸ் ஜாக்ருதிவீட்டிற்குள் நுழைந்தான். ஆனால் சாந்திகிரி தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டதும் தைரியத்தை இழந்ததாகக் கூறப்படுகிறது. அவரைக் கொல்வதற்குப் பதிலாக யூனிஸ் யாருக்கும் தெரியாமல் தூங்கிக்கொண்டிருந்த அந்த நபரைப் புகைப்படம் எடுத்து, கொலை நடந்துவிட்டதாகப் பொய்யாகக் கூறி ஜாக்ருதிக்கு அனுப்பியுள்ளான். தன் கணவர் இறந்துவிட்டார் என்று நம்பிய ஜாக்ருதி அவனுக்குப் பணத்தைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

மறுநாள் காலையில் சாந்தகிரி உயிருடன் இருப்பதைக் கண்ட ஜாக்ருதி தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். தனது முதல் திட்டம் தோல்வியடைந்ததால் கள்ளக்காதலர்கள் தாங்களே கொலை செய்யும் முடிவுக்கு வந்துள்ளனர். அதன்படி இதற்காக திட்டமிட்டுள்ளனர். பாரத் சாந்தகிரி கழுத்தை நெறித்துக் கொலை செய்தார். ஜாக்ருதி அவரது முகத்தில் தலையணை வைத்து அழுத்தி திட்டத்தை சாதுரியமாக முடித்துள்ளனர். இதற்கிடையில் சாந்தகிரி உடலை கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்துள்ளனர். அந்த உடலை அகற்ற ஏற்கனவே தான் காதலில் இருந்த தீபக்கை ஜாக்ருதி அணுகியுள்ளார். மூவரும் சேர்ந்து சாந்திகிரியின் உடலை சுரேந்திரநகரில் உள்ள ஒரு கால்வாயில் வீசி இதனை ஒரு விபத்து போல சித்தரித்துள்ளனர். 

சாந்திகிரி லாரி ஓட்டுநராக வேலைக்குச் சென்றுவிட்டதாகவும், புதிய வேலை கிடைத்துவிட்டதாகவும், தனது தொலைபேசி எண்ணை மாற்றிவிட்டதாகவும் அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் ஜாக்ருதி சமாளித்து வந்துள்ளார். ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக அகமதாபாத் போலீசில் புகாரளிக்கப்பட்டது. கிட்டதட்ட எட்டு மாதங்களுக்குப் பின் அந்த மர்மம் வெளிப்பட்டுள்ளது. இரண்டு மாத காலம் ரகசிய விசாரணை செய்து ஜாக்ருதி உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

காலை காங்கிரஸ்.. மாலை திமுக.. சீர்காழியை அதிரவைத்த மோதல்: போலீசாருடன் மல்லுக்கட்டிய தொண்டர்கள்..!
காலை காங்கிரஸ்.. மாலை திமுக.. சீர்காழியை அதிரவைத்த மோதல்: போலீசாருடன் மல்லுக்கட்டிய தொண்டர்கள்..!
சென்னை அருகே பரபரப்பு ; 3 பேர் கொலைக்கு பழிக்குப் பழியாக பிரபல ரவுடி நடுரோட்டில் வெட்டிக் கொலை
சென்னை அருகே பரபரப்பு ; 3 பேர் கொலைக்கு பழிக்குப் பழியாக பிரபல ரவுடி நடுரோட்டில் வெட்டிக் கொலை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை – ஒரு மாதம் காத்திருந்து பழிக்குப் பழி வாங்கிய கும்பல் !
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை – ஒரு மாதம் காத்திருந்து பழிக்குப் பழி வாங்கிய கும்பல் !
திருமணமான 3 மாதத்தில் நர்சிங் மாணவி தூக்கில் தொங்கிய கொடூரம் ; சப்-கலெக்டர் ஜீப் முற்றுகை
திருமணமான 3 மாதத்தில் நர்சிங் மாணவி தூக்கில் தொங்கிய கொடூரம் ; சப்-கலெக்டர் ஜீப் முற்றுகை
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

15 நாட்கள்.. 25 கொலைகள்! POLICE உடன் திடீர் மீட்டிங்! ORDER போட்ட CM விஜய்
சிறுவன் வெட்டிக்கொலை! 1 மாதமாக சதித்திட்டம்! மதுரை கொலை பகீர் பின்னணி!
”எல்லாம் கரெக்ட்டா போகுதா” நள்ளிரவு 1 மணிக்கு ஆய்வு! அமைச்சர் பிரபு அதிரடி
MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CV Shanmugam: சிவி சண்முகத்தை நம்புனது தப்பா போச்சே! கதி கலங்கி நிற்கும் EPS எதிர்ப்பு அதிமுக MLA-க்கள்!
CV Shanmugam: சிவி சண்முகத்தை நம்புனது தப்பா போச்சே! கதி கலங்கி நிற்கும் EPS எதிர்ப்பு அதிமுக MLA-க்கள்!
’TVK அலுவலகமாக மாறிய தலைமைச் செயலகம்?’ விமர்சனத்திற்குள்ளாகும் அமைச்சர்களின் செயல்பாடுகள்..!
’TVK அலுவலகமாக மாறிய தலைமைச் செயலகம்?’ இங்குதான் உறுப்பினர் சேர்க்கையா!
Manali Oil Godown Blast: 60 அடி உயரத்திற்கு வெடித்துச் சிறதறிய எண்ணெய் பேரல்கள்; மணலி புது நகர் அருகே பயங்கர தீ விபத்து.!
60 அடி உயரத்திற்கு வெடித்துச் சிறதறிய எண்ணெய் பேரல்கள்; மணலி புது நகர் அருகே பயங்கர தீ விபத்து.!
ADMK MLA Resigned : ‘ஸ்கெட்ச் போட்ட செங்கோட்டையன், தட்டி தூக்கிய ஆதவ்’ அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தது எப்படி ?
‘ஸ்கெட்ச் போட்ட செங்கோட்டையன்’ அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா பின்னணி!
ADMK MLA Joins TVK: உடையும் அதிமுக... 3 எம்.எல்.ஏ-க்கள் திடீர் ராஜினாமா.. அசுர வளர்ச்சி அடையும் தவெக
ADMK MLA Joins TVK: உடையும் அதிமுக... 3 எம்.எல்.ஏ-க்கள் திடீர் ராஜினாமா.. அசுர வளர்ச்சி அடையும் தவெக
Ramya Bharathi IPS : ’கோவை வழக்கில் சிரித்த பெண் ஐ.ஜி’ யார் இந்த ரம்யா பாரதி?
’கோவை வழக்கில் சிரித்த பெண் ஐ.ஜி’ யார் இந்த ரம்யா பாரதி?
Iran on Hormuz: நிம்மதிடா யப்பா.! ஹார்முஸ் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்.? அது என்ன தெரியுமா.?
நிம்மதிடா யப்பா.! ஹார்முஸ் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்.? அது என்ன தெரியுமா.?
Arun IPS : ’த.வெ.க ஆட்சியில் அருண் IPSக்கு முக்கிய பதவி?’ முதல்வரின் முடிவு என்ன ?
’த.வெ.க ஆட்சியில் அருண் IPSக்கு முக்கிய பதவி?’ முதல்வரின் முடிவு என்ன ?
Embed widget