மேலும் அறிய

திடீரென இறங்கிய மர்ம கும்பல்: திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுட்டுக்கொலை - மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி!

துப்பாக்கிச்சூடுக்கு பிறகு, ரத்தம் கொட்டிய சத்யன் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேற்கு வங்க மாநிலம் பஹ்ராம்பூரில் திரிணாமுல் காங்கிரஸின் உள்ளூர் தலைவர்களில் ஒருவரான சத்யன் சௌத்ரி அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் பிப்லாப் குண்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய பிப்லாப் குண்டு, ”இது ஒரு சோகமான சம்பவம். சௌத்ரி கட்சி தொடங்கியதில் இருந்தே கட்சிக்காக பணியாற்றி வருகிறார். இவரது மரணம் தொடர்பாக காவல்துறை நியாயமான விசாரணையை நடத்த வேண்டும். காவல்துறையினர் இதைப் பற்றிக் கண்டுபிடித்து நியாயமான விசாரணை நடத்துவார்கள் என்று நான் நம்புகிறேன். ” என தெரிவித்தார்.

இந்தோ-ஆசிய செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, ’திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முர்ஷிதாபாத் மாவட்ட பொதுச் செயலாளர் சத்யன் சௌத்ரி (ஞாயிறு) நேற்று மதியம் முர்ஷிதாபாத்தில் உள்ள பரத்பூரில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் முன் தனது நெருங்கிய கூட்டாளிகளுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, மர்ம கும்பல் ஒன்றின் எதிர்பாராத தாக்குதலால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சம்பவ இடத்திற்கு வந்த மூன்று மர்ம நபர்கள் சத்யனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்’ என்று குறிப்பிட்டு இருந்தது. 

துப்பாக்கிச்சூடுக்கு பிறகு, ரத்தம் கொட்டிய சத்யன் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சத்யன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். 

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், படுகொலைக்குப் பின்னால் ஆளும் கட்சியில் உள்ள உட்பூசல்கள் காரணமாக இருக்கலாம். இறந்த உள்ளூர் தலைவர்களில் ஒருவரான சத்யன் சௌத்ரி கட்சியின் மாவட்டத் தலைமையின் மற்ற பிரிவுகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சி சார்ந்த விவகாரங்களில் இருந்து தன்னை ஒதுக்கித் தள்ளத் தொடங்கியுள்ளார். இப்படியான சூழ்நிலையில்தான் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததாக தெரிவித்துள்ளனர். 

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளூர் கட்சி தலைவர் சத்யன் சௌத்ரி ஒரு காலத்தில் மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சனின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார். அதன்பிறகு, சில கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததாக கூறப்படுகிறது. 

காங்கிரஸ் எம்.பியும், சத்யனின் நெருங்கிய நண்பருமான ஆதிர் ரஞ்சன், தனது நண்பரின் மரணத்திற்கு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தார். இதுகுறித்து ஆதிர் ரஞ்சன், “மறைந்த சத்யன் சௌத்ரி எனது நெருங்கிய நண்பர். முழுமையான விசாரணை நடத்தி, குற்றவாளியைக் கண்டுபிடித்து தண்டிக்குமாறு காவல்துறையினரிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து முர்ஷிதாபாத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சூர்ய பிரதாப் யாதவ் கூறுகையில், ”இது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளில் இருந்து கொலையாளிகளை அடையாளம் காணும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

" என் பொண்டாட்டி குழந்தைகளை விட நீ தான் முக்கியம் " மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
காதலித்து கர்ப்பம்
காதலித்து கர்ப்பம் " குழந்தையை தூக்கி போட்டு வா " குழந்தைக்கு நேர்ந்த சோகம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: விஜயின் வேட்புமனுவிலேயே கோளாறு..! ஃபார்ம் கூட ஃபில் பண்ண தெரியலயா? பெரம்பூரில் தள்ளுபடி?
TVK Vijay: விஜயின் வேட்புமனுவிலேயே கோளாறு..! ஃபார்ம் கூட ஃபில் பண்ண தெரியலயா? பெரம்பூரில் தள்ளுபடி?
Trump Iran War: “அமெரிக்கா அவமானப்பட்டு, இழிவுபட்டு, வருத்தப்பட்டு...“; ட்ரம்ப்புக்கு மெர்சல் காட்டிய ஈரான்
“அமெரிக்கா அவமானப்பட்டு, இழிவுபட்டு, வருத்தப்பட்டு...“; ட்ரம்ப்புக்கு மெர்சல் காட்டிய ஈரான்
CSK vs PBKS: சொந்த மண்ணில் கம்பேக் தருமா சிஎஸ்கே? பேட்டிங்கில் தேறுமா? வரிந்து கட்டும் பஞ்சாப் - வெற்றி யாருக்கு?
CSK vs PBKS: சொந்த மண்ணில் கம்பேக் தருமா சிஎஸ்கே? பேட்டிங்கில் தேறுமா? வரிந்து கட்டும் பஞ்சாப் - வெற்றி யாருக்கு?
Suzuki Burgman Street 125: ஒரு லட்சத்துக்கே புதிய பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர் அறிமுகம் - TVS, ஆக்டிவா தாங்குமா?
Suzuki Burgman Street 125: ஒரு லட்சத்துக்கே புதிய பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர் அறிமுகம் - TVS, ஆக்டிவா தாங்குமா?
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
Embed widget