மேலும் அறிய

திடீரென இறங்கிய மர்ம கும்பல்: திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுட்டுக்கொலை - மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி!

துப்பாக்கிச்சூடுக்கு பிறகு, ரத்தம் கொட்டிய சத்யன் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேற்கு வங்க மாநிலம் பஹ்ராம்பூரில் திரிணாமுல் காங்கிரஸின் உள்ளூர் தலைவர்களில் ஒருவரான சத்யன் சௌத்ரி அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் பிப்லாப் குண்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய பிப்லாப் குண்டு, ”இது ஒரு சோகமான சம்பவம். சௌத்ரி கட்சி தொடங்கியதில் இருந்தே கட்சிக்காக பணியாற்றி வருகிறார். இவரது மரணம் தொடர்பாக காவல்துறை நியாயமான விசாரணையை நடத்த வேண்டும். காவல்துறையினர் இதைப் பற்றிக் கண்டுபிடித்து நியாயமான விசாரணை நடத்துவார்கள் என்று நான் நம்புகிறேன். ” என தெரிவித்தார்.

இந்தோ-ஆசிய செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, ’திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முர்ஷிதாபாத் மாவட்ட பொதுச் செயலாளர் சத்யன் சௌத்ரி (ஞாயிறு) நேற்று மதியம் முர்ஷிதாபாத்தில் உள்ள பரத்பூரில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் முன் தனது நெருங்கிய கூட்டாளிகளுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, மர்ம கும்பல் ஒன்றின் எதிர்பாராத தாக்குதலால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சம்பவ இடத்திற்கு வந்த மூன்று மர்ம நபர்கள் சத்யனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்’ என்று குறிப்பிட்டு இருந்தது. 

துப்பாக்கிச்சூடுக்கு பிறகு, ரத்தம் கொட்டிய சத்யன் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சத்யன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். 

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், படுகொலைக்குப் பின்னால் ஆளும் கட்சியில் உள்ள உட்பூசல்கள் காரணமாக இருக்கலாம். இறந்த உள்ளூர் தலைவர்களில் ஒருவரான சத்யன் சௌத்ரி கட்சியின் மாவட்டத் தலைமையின் மற்ற பிரிவுகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சி சார்ந்த விவகாரங்களில் இருந்து தன்னை ஒதுக்கித் தள்ளத் தொடங்கியுள்ளார். இப்படியான சூழ்நிலையில்தான் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததாக தெரிவித்துள்ளனர். 

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளூர் கட்சி தலைவர் சத்யன் சௌத்ரி ஒரு காலத்தில் மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சனின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார். அதன்பிறகு, சில கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததாக கூறப்படுகிறது. 

காங்கிரஸ் எம்.பியும், சத்யனின் நெருங்கிய நண்பருமான ஆதிர் ரஞ்சன், தனது நண்பரின் மரணத்திற்கு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தார். இதுகுறித்து ஆதிர் ரஞ்சன், “மறைந்த சத்யன் சௌத்ரி எனது நெருங்கிய நண்பர். முழுமையான விசாரணை நடத்தி, குற்றவாளியைக் கண்டுபிடித்து தண்டிக்குமாறு காவல்துறையினரிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து முர்ஷிதாபாத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சூர்ய பிரதாப் யாதவ் கூறுகையில், ”இது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளில் இருந்து கொலையாளிகளை அடையாளம் காணும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget