மேலும் அறிய

குடும்ப தகராறில் கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவி கைது

’’கணவனுக்கு மதுப்பழக்கம் அதிகரித்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது’’

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த விளந்தை கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் மகன் சந்தோஷ் (38), கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்றபோது அவருக்கும், சென்னை மண்ணடி பகுதியை சேர்ந்த சுரேகா (30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பிறகு சந்தோஷ், வெளியூர்களுக்கு தான் வேலைக்கு செல்லும் இடங்களில் அப்பகுதியில் வாடகை வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு அபிநயா (11) என்ற மகளும், வெற்றிவேல் (7) என்ற மகனும் உள்ளனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் நாயக்கன்தோப்பு பகுதியில் வாடகை வீட்டில் சந்தோஷ் தனது குடும்பத்தினருடன் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார். சந்தோசின் மனைவி சுரேகா தற்போது 3 மாதம் கர்ப்பமாக உள்ளார்.


குடும்ப தகராறில் கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவி கைது

சந்தோசுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். மேலும் சுரேகாவின் நடத்தையிலும் சந்தோஷ் சந்தேகப்பட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கடந்த சில வாரங்களாக சந்தோஷ் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அவரை சுரேகா கண்டித்துள்ளார்.

இதன் காரணமாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சந்தோஷ் மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது நடத்தையில் சந்தேகப்பட்டு மீண்டும் சுரேகாவிடம் தகராறு செய்துள்ளார். அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் அதிகரித்த நிலையில் சந்தோஷ் அங்கிருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து சுரேகாவை வெட்ட முயன்றார்.

இதில் சுதாரித்துக் கொண்ட சுரேகா, சந்தோஷிடம் இருந்த கத்தியை பிடுங்கி ஆத்திரத்தில் கணவர் என்றும் பாராமல் அவரது மார்பு பகுதியில் குத்தியதாக தெரிகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் சுரேகா, விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையம் சென்று நடந்த சம்பவம் பற்றி கூறி சரண் அடைந்தார்.


குடும்ப தகராறில் கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவி கைது

இதையடுத்து விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சற்குணம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சந்தோஷின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேகாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரத்தில்  கணவனை மனைவி கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Edappadi Palanisamy: “இந்த கூட்டத்த பார்த்தா ஸ்டாலினுக்கு ஜுரம் வரும்“; அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்-இபிஎஸ் அதிரடி
“இந்த கூட்டத்த பார்த்தா ஸ்டாலினுக்கு ஜுரம் வரும்“; அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்-இபிஎஸ் அதிரடி
10-ம் வகுப்பு படிச்சுருக்கீங்களா; தொழில் முனைவோர் ஆகணுமா.? தமிழக அரசு தரும் அற்புதமான வாய்ப்பு
10-ம் வகுப்பு படிச்சுருக்கீங்களா; தொழில் முனைவோர் ஆகணுமா.? தமிழக அரசு தரும் அற்புதமான வாய்ப்பு
Edappadi K Palaniswami : ’ஆட்சியை பிடித்தே ஆகனும்’ முதல் ஆளாக சுற்றுப்பயணம் தொடங்கிய EPS..!
’ஆட்சியை பிடித்தே ஆகனும்’ முதல் ஆளாக சுற்றுப்பயணம் தொடங்கிய EPS..!
Trump Vs Musk: “அவரு, அத வச்சுக்கிட்டு ஜாலியா விளையாடலாம்“ - எலான் மஸ்க்கை கலாய்த்த ட்ரம்ப், எதற்கு தெரியுமா.?
“அவரு, அத வச்சுக்கிட்டு ஜாலியா விளையாடலாம்“ - எலான் மஸ்க்கை கலாய்த்த ட்ரம்ப், எதற்கு தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Edappadi Palanisamy: “இந்த கூட்டத்த பார்த்தா ஸ்டாலினுக்கு ஜுரம் வரும்“; அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்-இபிஎஸ் அதிரடி
“இந்த கூட்டத்த பார்த்தா ஸ்டாலினுக்கு ஜுரம் வரும்“; அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்-இபிஎஸ் அதிரடி
10-ம் வகுப்பு படிச்சுருக்கீங்களா; தொழில் முனைவோர் ஆகணுமா.? தமிழக அரசு தரும் அற்புதமான வாய்ப்பு
10-ம் வகுப்பு படிச்சுருக்கீங்களா; தொழில் முனைவோர் ஆகணுமா.? தமிழக அரசு தரும் அற்புதமான வாய்ப்பு
Edappadi K Palaniswami : ’ஆட்சியை பிடித்தே ஆகனும்’ முதல் ஆளாக சுற்றுப்பயணம் தொடங்கிய EPS..!
’ஆட்சியை பிடித்தே ஆகனும்’ முதல் ஆளாக சுற்றுப்பயணம் தொடங்கிய EPS..!
Trump Vs Musk: “அவரு, அத வச்சுக்கிட்டு ஜாலியா விளையாடலாம்“ - எலான் மஸ்க்கை கலாய்த்த ட்ரம்ப், எதற்கு தெரியுமா.?
“அவரு, அத வச்சுக்கிட்டு ஜாலியா விளையாடலாம்“ - எலான் மஸ்க்கை கலாய்த்த ட்ரம்ப், எதற்கு தெரியுமா.?
US Texas Flood: அமெரிக்காவின் டெக்சாஸில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளம் - பலி எண்ணிக்கை 82 -ஆக உயர்வு
அமெரிக்காவின் டெக்சாஸில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளம் - பலி எண்ணிக்கை 82 -ஆக உயர்வு
மதுரை முருகன் பக்தர்கள் மாநாடு; குவிந்த லட்சக்கணக்கானோர்; தமிழ்நாட்டில் பாஜக-விற்கு ஊக்கம்
மதுரை முருகன் பக்தர்கள் மாநாடு; குவிந்த லட்சக்கணக்கானோர்; தமிழ்நாட்டில் பாஜக-விற்கு ஊக்கம்
Watch Video: “நீங்க ஏன் இங்க இருக்கீங்க.? இந்தியாவுக்கே போங்க“; இனவெறி பேச்சு - அமெரிக்கருக்கு வலுக்கும் கண்டனங்கள்
“நீங்க ஏன் இங்க இருக்கீங்க.? இந்தியாவுக்கே போங்க“; இனவெறி பேச்சு - அமெரிக்கருக்கு வலுக்கும் கண்டனங்கள்
இது நல்லா இருக்கேப்பா.. அரசு அதிரடி! தனியார் பேருந்துகளுக்கு சவால் விடும் புதிய பேருந்துகள் அறிமுகம்!
இது நல்லா இருக்கேப்பா.. அரசு அதிரடி! தனியார் பேருந்துகளுக்கு சவால் விடும் புதிய பேருந்துகள் அறிமுகம்!
Embed widget