![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Villupuram News: "கேட்ட காசு எங்கே?" லஞ்சம் பெற்று சர்ச்சையில் அடுத்தடுத்து சிக்கிய வி.ஏ.ஓ-க்கள்!
விழுப்புரம் மாவட்டத்தில் லஞ்சம் பெற்று சர்ச்சையில் அடுத்தடுத்து சிக்கிய வி.ஏ.ஓ-க்கள்
![Villupuram News: Villupuram: VAO arrested for accepting bribe of Rs 20000 for patta name transfer Villupuram News:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/27/0313add91788da71731da5cce3985803_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம் மாவட்டம், நவமால் காப்பேர் கிராமத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் சப்ராபீபி வாரிசுச் சான்றிதழ் வழங்குவதற்கு 2,000 ரூபாய் லஞ்சம் பெற்றதாக வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவர் பணி இடைநீக்கம் செய்யப்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் ஓய்வதற்குள் வானூர் அடுத்த தைலாபுரத்தில் கிராம நிர்வாக அலுவலராக இருந்த ராஜி (59) என்ற நபர், பட்டா மாறுதல் செய்வதற்காக 20,000 ரூபாய் லஞ்சம் பெற்றதால், லஞ்ச ஒழிப்பு துறையால் கைது செய்யப்படுள்ளார். இன்னும் ஆறு மாதங்களில் பணி ஓய்வு பெறும் நிலையில் இருந்திருக்கிறார் இந்த அதிகாரி.
கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் பெற்ற இந்தச் சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, அடுத்தடுத்து கிராம நிர்வாக அலுவலர்கள் லஞ்சம் பெற்று சிக்கியுள்ள சம்பவம் பேசுபொருளாகவும் மாறியுள்ளது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தாவது.
தைலாபுரத்தைச் சேர்ந்தவர் உத்ரகுமார் (30). இவரின் தந்தை ஏழுமலை பெயரிலும், அண்ணன் முருகன் என்பவரின் பெயரிலும் பல வருடங்களுக்கு முன்பு நான்கு ஏக்கர் நிலம் வாங்கியுள்ளனர். ஏழுமலை படிக்காதவர் என்பதால், பட்டா பெயர் மாற்றம் செய்யாமல் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், பட்டா மாற்றம் செய்வதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்திருக்கிறார் உத்ரகுமார்.
கிராமம் என்பதால் கிராம நிர்வாக அலுவலர் கவனத்துக்கு அது வந்துள்ளது. அதனால், கிராம நிர்வாக அலுவலர் ராஜியை அணுகியிருக்கின்றனர். பட்டா மாற்ற ஒரு பெயருக்கு 10,000 ரூபாய் வீதம் 20,000 ரூபாய் தர வேண்டும் என கேட்டிருக்கிறார்ர் கிராம நிர்வாக அலுவலர் ராஜி. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர், எங்கள் துறையை அணுகினார். எங்கள் துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய நோட்டுகள் 20,000 ரூபாயைக் கொடுத்து அனுப்பினோம். உத்திரகுமார் தைலாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கே நேரில் சென்று பட்டா மாறுதல் பற்றிக் கேட்டிருக்கிறார். “கேட்ட காசு எங்கே?” என கிராம நிர்வாக அலுவலர் கேட்க, ரசாயனம் தடவிய 20,000 ரூபாயைக் கொடுத்திருக்கிறார் உத்திரகுமார். அதைப் பெற்றதும் தன் பேன்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டிருக்கிறார்.
அடுத்ததாக, நாங்கள் சென்று விசாரித்த போது உண்மையை ஒப்புக்கொண்டார். லஞ்சமாகப் பெற்ற தொகையைச் சோதித்து பார்த்த போது உறுதியானது. அதைத் தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் காண்பித்து கைது செய்திருக்கிறோம் என்றனர். விழுப்புரம் மாவட்டத்தில், வி.ஏ.ஓ இருவர் அடுத்தடுத்து லஞ்சம் பெற்று சர்ச்சையில் சிக்கியுள்ள சம்பவம் மாவட்டத்தில் மற்ற கிராம நிர்வாக அலுவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Anna University Results: அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)