மேலும் அறிய

அதிர்ச்சியில் உறைந்த விழுப்புரம் : மகளைக் கொன்று தந்தை தற்கொலை முயற்சி - ஓய்வு பெற்ற SI வெறிச்செயல்!

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த தனது மகளை, ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஒருவரே கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயற்சி!

விழுப்புரம்: விழுப்புரம் அருகே, நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த தனது மகளை, ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஒருவரே கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகளை கொலை செய்த தந்தை

 விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அடுத்த இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோதண்டராமன். இவர் காவல் துறையில் உதவி ஆய்வாளராக (SI) பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகள் சுமலதா. ஆஸ்துமா உள்ளிட்ட கடுமையான சுவாசக் கோளாறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்த சுமலதா, தனது கணவரைப் பிரிந்து கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தந்தை கோதண்டராமனின் பராமரிப்பில் வசித்து வந்தார்.

தொடர் சிகிச்சைக்குப் பின்னும் சுமலதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. மகள் மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமப்படுவதையும், அவரது துயரத்தையும் கண்டு கோதண்டராமன் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். மகளைச் சரிவர கவனிக்க முடியவில்லையே என்ற விரக்தியும் அவருக்குள் இருந்துள்ளது.

இந்த நிலையில், இன்று ஆத்திரமும் வேதனையும் அடைந்த கோதண்டராமன், எதிர்பாராத விதமாக வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மகள் சுமலதாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். பின்னர், அதே கத்தியால் தனது கழுத்தையும் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

கணவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கோதண்டராமனின் மனைவி அலறல் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்துவிட்டு உடனடியாக கண்டமங்கலம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த சுமலதாவின் உடலையும், படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த கோதண்டராமனையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது கோதண்டராமனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, வேறு ஏதேனும் குடும்பத் தகராறு காரணமா அல்லது மகளின் உடல்நல பாதிப்பு மட்டுமே காரணமா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாக்க வேண்டிய தந்தையே, மகளைக் கொன்ற சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலைத் தடுப்பு உதவி எண்கள்:

மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணம் ஏற்பட்டால், அதிலிருந்து விடுபட கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்: தமிழக அரசின் உதவி எண்: 104 (24 மணிநேர சேவை), சினேகா தற்கொலை தடுப்பு மையம்: 044-24640050 / 044-24640060, நிம்மதி தற்கொலை தடுப்பு மையம்: 1800-121-2030

"தற்கொலை எதற்கும் முடிவல்ல. மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணம் இருந்தால் மேற்கண்ட எண்களைத் தொடர்பு கொண்டு தகுந்த ஆலோசனை பெறவும்."

தலைப்பு செய்திகள்

"என் உயிர் போனாலும் பரவாயில்லை.." சீர்காழியில் தமிழருக்காக தன் வாழ்வைப் பணயம் வைத்த வடமாநில கேட் கீப்பர்..!
" சித்தப்பா இன்னும் தூங்குறாரு " ரத்தக் கறையை துடைத்து விட்டு காபி குடித்த மனைவி
Bengaluru: மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. கணவர் சண்டை.. கோபத்தில் குழந்தையை கொன்ற பெற்றோர்!
Bengaluru: மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. கணவர் சண்டை.. கோபத்தில் குழந்தையை கொன்ற பெற்றோர்!
மயிலாடுதுறை கோவில் சிலைகள் காரைக்காலில் சிக்கியது எப்படி? காரைக்காலில் நள்ளிரவில் அதிரடி வேட்டை!
மயிலாடுதுறை கோவில் சிலைகள் காரைக்காலில் சிக்கியது எப்படி? காரைக்காலில் நள்ளிரவில் அதிரடி வேட்டை!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
EPS ADMK : தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- இபிஎஸ்
தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- விளாசிய இபிஎஸ்
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க இதையெல்லாம் கட்டாயம் செய்ங்க- அன்புமணி
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க இதையெல்லாம் கட்டாயம் செய்ங்க- அன்புமணி
Embed widget