மேலும் அறிய

Crime: கடனை திருப்பிக்கேட்டால் கூலிப்படையை வைத்து கொலை செய்துவிடுவேன் - மிரட்டல் விடுத்த இருவர் கைது

திண்டிவனம் முன்னாள் நகரமன்ற தலைவரிடம் 76 லட்சம் கடன் பெற்று மோசடி செய்த இருவரை விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம்: பழைய இரும்புகளை உடைக்கும் தொழில் செய்ய திண்டிவனம் முன்னாள் நகரமன்ற தலைவரிடம் 76 லட்சம் கடன் பெற்று மோசடி செய்த இருவரை விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த முன்னாள் நகரமன்ற தலைவரான வெங்கடேசனிடம் கடந்த 2021-ம் ஆண்டு காஞ்சீபுரம் மாவட்டம் புக்கத்துறையை சேர்ந்த ராஜேஷ் மற்றும் புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த விஜயகுமார் இருவரும், வெங்கடேசனிடம் பழைய இரும்புகளை உடைக்கும் தொழில் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என கூறி அதற்காக 80 லட்சம் கடனாக தரும்படியும் பணத்தை 5 நாட்களுக்குள் திருப்பித்தருவதாகவும் கூறியுள்ளனர். அதனை நம்பிய வெங்கடேசன், கடந்த 25.9.2021 அன்று தனக்கு தெரிந்த திண்டிவனத்தை சேர்ந்த சுப்புராயலு என்பவரிடம் இருந்து கடனாக 65 லட்சம் பெற்று அன்றைய தினமே அத்தொகையை கொடுத்துள்ளார்.

அந்த பணத்தை ராஜேஷ், விஜயகுமார் மற்றும் விஜயகுமாரின் உறவினரான புதுச்சேரி மனப்பட்டை சேர்ந்த பிரபு ஆகியோர் காரில் வந்து பெற்றுச்சென்றனர். அதன் பிறகு சில நாட்கள் கழித்து வெங்கடேசனை அவர்கள் தொடர்புகொண்டு உடனடியாக 11 லட்சம் வேண்டும் என்றும், பழைய இரும்புகளை மொத்தமாக வாங்கியதற்காக ஒரு தொகை வர வேண்டியுள்ளது, அந்த தொகைக்கு ஜி.எஸ்.டி. கட்டினால் தொகை வந்துவிடும், எனவே ஜி.எஸ்.டி. கட்ட 11 லட்சம் தேவைப்படுகிறது என்றும், இந்த தொகையை 10 நாட்களில் தந்து விடுவதாக அவர்கள் கூறியுள்ளனர். இதை நம்பிய வெங்கடேசன், தனக்கு தெரிந்தவர்களிடம் இருந்து பணத்தை பெற்று அதனை 22.11.2021 அன்று ராஜேசுக்கு கொடுத்துள்ளார்.

இவ்வாறாக 76 லட்சத்தை பெற்ற ராஜேஷ் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து பல மாதங்கள் ஆகியும் வெங்கடேசனுக்கு கடன் தொகையை கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர். இந்நிலையில் கடந்த 5.3.2023 அன்று ராஜேஷ், விஜயகுமார் ஆகிய இருவரும் திண்டிவனம் சலவாதி பகுதிக்கு வருமாறு வெங்கடேசனை அழைத்தனர். அதன்படி அங்கு வந்த வெங்கடேசன், தனது பணத்தை திருப்பித்தருமாறு வற்புறுத்தி கேட்டார்.  அதற்கு ராஜேஷ், விஜயகுமார், பிரபு ஆகிய 3 பேரும் சேர்ந்து வெங்கடேசனை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதோடு பணத்தை திருப்பிக்கேட்டால் கூலிப்படையை வைத்து கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட  வெங்கடேசன், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ராஜேஷ் உள்ளிட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ், விஜயகுமார் ஆகிய இருவரையும் கைது செய்து தலைமறைவாக உள்ள பிரபுவை தேடி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget