மேலும் அறிய

பள்ளி சிறுமிகளிடம் பாலியல் சீண்டல்: விழுப்புரம் தலைமை ஆசிரியர் மீது ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

விழுப்புரம் : பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தலைமை ஆசிரியர் மீது ஒருவர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

மயிலம் அருகே செயல்பட்டு வரும் அரசு துவக்க பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக கூறியும், அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் பெற்றோர் ஒருவர் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று  புகார் மனு அளித்தார்.

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகேயுள்ள நெடிமோழியனூரில் செயல்பட்டு வரும் அரசு துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக அருள்மொழி வர்மன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். தலைமை ஆசிரியராக உள்ள அருள்மொழி வர்மன் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம்  தகாத முறையில் அங்கங்களை தொட்டு பாலியல் சீண்டலில்  ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுடிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட 5 ஆம் வகுப்பு மாணவி மூன்று தினங்களுக்கு முன் தலைமை ஆசிரியர் தங்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதை பெற்றோரிடத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், பெரியதச்சூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். எனினும் போலீசார் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவர்கள் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன், பெற்றோர்களிடம் ஆசிரியர் மீது வழக்கு தொடர்வதால் உங்களது குழந்தையின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும் எனக்கூறி புகாரைத் திரும்ப பெற வைத்துள்ளார்  இதே போன்று பல்வேறு மாணவிகளிடம்  தலைமை ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பல்வேறு புகார்கள் எழுந்து நிலையில் அங்கு பயிலும் பெண் குழந்தைகள்  மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகத் தகவல் வெளியானது.

இதனால் தலைமை ஆசிரியர் மீது  சமூக நலத்துறை மூலமாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்ககோரி அப்பள்ளியின் பெற்றோர் தரப்பில் தமிழ் தென்றல் என்பவர் இன்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த புகாரினை பெற்று கொண்ட ஆட்சியர் பழனி இது தொடர்பாக உரிய விசாரனை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளி மாணவிகளிடம் தலைமை ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், பெற்றோர் தரப்பில் புகார் அளித்துள்ள தமிழ் தென்றல் உடன் ஆசிரியரை காப்பாற்றும் நோக்கில் பேசிய ஆடியோவும் சமூக வலைத்தளத்தில் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget