![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Crime: இப்படியும் ஏமாத்துவாங்க; நம்பிடாதீங்க! மாணவருக்கு நேர்ந்த பரிதாபம்! - எச்சரிக்கும் போலீஸ்!
Villupuram : திண்டிவனம் அருகே குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி வாலிபரிடம் ரூ.4 லட்சம் மோசடி...
![Crime: இப்படியும் ஏமாத்துவாங்க; நம்பிடாதீங்க! மாணவருக்கு நேர்ந்த பரிதாபம்! - எச்சரிக்கும் போலீஸ்! Villupuram A teenager was cheated of Rs 4½ lakh by claiming that he could get more profit with less investment Crime: இப்படியும் ஏமாத்துவாங்க; நம்பிடாதீங்க! மாணவருக்கு நேர்ந்த பரிதாபம்! - எச்சரிக்கும் போலீஸ்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/05/76269210a3d5a34415ff5650ececf9c9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அவரப்பாக்கத்தை சேர்ந்தவர் ஜான்பாஷா மகன் அப்துல்கபூர் (வயது 20). இவருடைய செல்போன் எண்ணை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர், தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அந்த நபர் தான், ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் தலைமை அதிகாரி எனவும், நாங்கள் அனுப்பும் யூ டியூப் சேனல் படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பி வைத்தால் குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் எனவும் கூறினார்.
இதை நம்பிய அப்துல்கபூர், அந்த நபர் கூறியவாறு ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பி ரூ.2,850-ஐ பெற்றுள்ளார். பின்னர் டெலிகிராம் ஐடி மூலம் அப்துல்கபூரை தொடர்பு கொண்ட நபர், குறைந்த முதலீடு செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி அதற்காக ஒரு லிங்கையும் அனுப்பி வைத்துள்ளார்.
உடனே அந்த லிங்கினுள் சென்ற அப்துல்கபூர், தனக்கான பாஸ்வேர்டு, பயனர் முகவரி ஆகியவற்றை பதிவேற்றம் செய்து, அந்த நபர் குறிப்பிட்ட டெலிகிராம் ஐடிக்கு 6 தவணைகளாக ரூ.4 லட்சத்து 58 ஆயிரத்து 594-ஐ செலுத்தினார். ஆனால் டாஸ்க் முடித்த பின்னரும், அப்துல்கபூருக்கு சேர வேண்டிய பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார். இதுகுறித்து அவர், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தார். பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை நூதன முறையில் மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
இணைய வழி காவல்துறை விழிப்புணர்வு
பொதுமக்களுக்கு உடனடி லோன் ஆப் இன்ஸ்டன்ட் லோன் ஆப் சம்பந்தமாக புதுச்சேரி இணைய வழி காவல்துறை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தெரிவிப்பது என்னவென்றால், ”இதுபோன்ற உடனடி மொபைல் ஆப்பிள் எந்த ஒரு வெரிஃபிகேஷனும் செய்யாமல் கொடுக்கப்படுகின்ற லோன்களில் 99% பயனாளிகள் இது போலவே மிரட்டப்படுகின்றனர். ஆயிரம் ரூபாய்க்கு ஒரு லட்சம் இரண்டு லட்சம் ரூபாய் என கட்டி தங்களுடைய மன நிம்மதியையும் பொதுமக்கள் இழக்கின்றனர். மேலும் இணைய வழி மோசடிக்காரர்கள் லோன் வாங்கியவர்களை அச்சுறுத்த அவர்கள் படங்களை மார்பிங் செய்து அவர்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் அனுப்பி அவர்களை மிரட்டுகின்றனர்.
பொதுமக்கள் குறிப்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாத இது போன்ற லோன் ஆப்புகளில் உடனடி கடனை வாங்கி இதுபோன்று பணத்தையும் மானத்தையும் இழக்க வேண்டாம் என இணைய வழி காவல்துறை தங்களுக்கு எச்சரிக்கை செய்கிறது. மேலும் உடனடி லோன் ஆப்பிள் நாம் கேட்கின்ற தொகையை அவர்கள் கொடுப்பதில்லை ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு முப்பதாயிரம் ரூபாய் உங்களுக்கு கொடுத்தோம் என்று வசூலிக்க ஆரம்பிக்கின்றனர். அதனால் பொதுமக்கள் இது போன்ற உடனடி லோன் ஆப்பில் இருந்து கடன் பெற வேண்டாம் என்றும் இது சம்பந்தமான புகார் ஏதேனும் இருந்தால் 1930 விற்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும்” கூறியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)