மேலும் அறிய

VAO Murder: அலுவலகத்துக்குள் புகுந்து கிராம நிர்வாக அதிகாரி வெட்டிக் கொலை.. தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலகத்துக்குள் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலகத்துக்குள் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள சூசை பாண்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ். இவர் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாட்டில் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இதனிடையே இன்று இவர் வழக்கம்போல  அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது திடீரென அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரை அரிவாளால் கை,தலை.கழுத்து உள்ளிட்ட பகுதியில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

லூர்து பிரான்சிஸ் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் கிராம நிர்வாக அலுவலகத்துக்குள் வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக  முறப்பநாடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  போலீசார் லூர்து பிரான்சிஸை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், லூர்து பிரான்சிஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், சில நாட்களுக்கு முன் லூர்து பிரான்சிஸ் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் போலீசில் புகார் அளித்தது தெரிய வந்தது. மணல் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடையவர்கள் தான் இந்த கொலை சம்பவத்திற்கு காரணமாக இருப்பார்கள் என போலீசார் சந்தேகித்துள்ளனர்.

இதனிடையே இந்த கொலை சம்பவத்தில் வல்லநாடு அருகே உள்ள கலியாவூரைச்  சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொருவரான மாரிமுத்து என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலகத்துக்குள் புகுந்து அதிகாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு நேரில் சென்ற தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் செந்தில்ராஜ், ”லூர்து பிரான்சிஸ் மிக நேர்மையான அதிகாரி. ஆதிச்சநல்லூரில் பணியாற்றிய போது அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து மீட்கும் விவகாரத்தில் மிகவும் தைரியமாக செயல்பட்டவர். அவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முறப்பநாடு வருவாய் கிராமத்தில் அவர் பணியாற்றி வந்தார். அவரது மரணத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டுள்ளார் தானும் அந்த இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொள்ள உள்ளேன்” என தெரிவித்தார். 

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட லூர்து பிரான்சிஸ் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணத் தொகையும்,  குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி சித்தா பெண் டாக்டரிடம் ரூ.52 லட்சம் பணம் மோசடி
டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி சித்தா பெண் டாக்டரிடம் ரூ.52 லட்சம் பணம் மோசடி
Loan Recovery Agent ஆபாச பேச்சு !! தட்டி தூக்கிய போலீசார் !! நடந்தது என்ன ?
Loan Recovery Agent ஆபாச பேச்சு !! தட்டி தூக்கிய போலீசார் !! நடந்தது என்ன ?
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
Embed widget