மேலும் அறிய

VAO Murder: அலுவலகத்துக்குள் புகுந்து கிராம நிர்வாக அதிகாரி வெட்டிக் கொலை.. தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலகத்துக்குள் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலகத்துக்குள் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள சூசை பாண்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ். இவர் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாட்டில் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இதனிடையே இன்று இவர் வழக்கம்போல  அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது திடீரென அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரை அரிவாளால் கை,தலை.கழுத்து உள்ளிட்ட பகுதியில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

லூர்து பிரான்சிஸ் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் கிராம நிர்வாக அலுவலகத்துக்குள் வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக  முறப்பநாடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  போலீசார் லூர்து பிரான்சிஸை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், லூர்து பிரான்சிஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், சில நாட்களுக்கு முன் லூர்து பிரான்சிஸ் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் போலீசில் புகார் அளித்தது தெரிய வந்தது. மணல் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடையவர்கள் தான் இந்த கொலை சம்பவத்திற்கு காரணமாக இருப்பார்கள் என போலீசார் சந்தேகித்துள்ளனர்.

இதனிடையே இந்த கொலை சம்பவத்தில் வல்லநாடு அருகே உள்ள கலியாவூரைச்  சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொருவரான மாரிமுத்து என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலகத்துக்குள் புகுந்து அதிகாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு நேரில் சென்ற தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் செந்தில்ராஜ், ”லூர்து பிரான்சிஸ் மிக நேர்மையான அதிகாரி. ஆதிச்சநல்லூரில் பணியாற்றிய போது அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து மீட்கும் விவகாரத்தில் மிகவும் தைரியமாக செயல்பட்டவர். அவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முறப்பநாடு வருவாய் கிராமத்தில் அவர் பணியாற்றி வந்தார். அவரது மரணத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டுள்ளார் தானும் அந்த இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொள்ள உள்ளேன்” என தெரிவித்தார். 

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட லூர்து பிரான்சிஸ் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணத் தொகையும்,  குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

சத்தமில்லாமல் நடந்த சர்வதேச கடத்தல்! சென்னை விமான நிலையத்தில். விடிய விடிய நடந்த சோதனையில் பரபரப்பு!
சத்தமில்லாமல் நடந்த சர்வதேச கடத்தல்! சென்னை விமான நிலையத்தில் நடந்த சோதனையில் பரபரப்பு!
ஆசிரியர்கள் உட்கோஷ்டி மோதலால் நேர்ந்த கொடூரம்: 3 ஆசிரியர்களைப் பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
ஆசிரியர்கள் உட்கோஷ்டி மோதலால் நேர்ந்த கொடூரம்: 3 ஆசிரியர்களைப் பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி சைபர் மோசடி! 3 பேரிடம் ரூ.4.17 லட்சம் அபேஸ்
புதுச்சேரியில் அதிர்ச்சி சைபர் மோசடி! 3 பேரிடம் ரூ.4.17 லட்சம் அபேஸ்
Tenkasi: சைடிஷ் வாங்க லேட் ஆனதால் ஆத்திரம்.. இளைஞர் வெட்டிக்கொலை.. 3 சிறுவர்கள் கைது!
Tenkasi: சைடிஷ் வாங்க லேட் ஆனதால் ஆத்திரம்.. இளைஞர் வெட்டிக்கொலை.. 3 சிறுவர்கள் கைது!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Anand : ’ஒன்னுமே செய்ய முடியல’ புலம்பும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் – செக் வைத்த செக்கரட்டரி..!
’ஒன்னுமே செய்ய முடியல’ புலம்பும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் – செக் வைத்த செக்கரட்டரி..!
வட கிழக்கு பருவ மழை பாதிப்பை சமாளிக்க CM விஜய்யின் மாஸ் PLAN.! IAS அதிகாரிகள் நியமனம் – யார் எந்த இடத்திற்கு.?
மழை பாதிப்பை சமாளிக்க CM விஜய்யின் மாஸ் PLAN.! IAS அதிகாரிகள் நியமனம் – யார் எந்த இடத்திற்கு.?
ADMK To TVK : தவெகவிற்கு தாவ 5 அதிமுக MLA-க்கள் ரெடி.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்கும் விஜய்- நடப்பது என்ன.?
தவெகவிற்கு தாவ 5 அதிமுக MLA-க்கள் ரெடி.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்கும் விஜய்- நடப்பது என்ன.?
உதயநிதியை விடாமல் குறிவைக்கும் தவெக.! உடனே ஆக்‌ஷன் எடுக்க பறந்த அதிரடி உத்தரவு- ஷாக்கில் திமுக
உதயநிதியை விடாமல் குறிவைக்கும் தவெக.! உடனே ஆக்‌ஷன் எடுக்க பறந்த அதிரடி உத்தரவு- ஷாக்கில் திமுக
Leema Rose Martin: என் கணவர் தான் கிடைச்சாரா? .. சும்மா சும்மா இழுக்குறீங்க.. திமுக மீது லீமா ரோஸ் டென்ஷன்!
Leema Rose Martin: என் கணவர் தான் கிடைச்சாரா? .. சும்மா சும்மா இழுக்குறீங்க.. திமுக மீது லீமா ரோஸ் டென்ஷன்!
China Iran Vs America: ஈரான் மீது பொருளாதாரத் தடை; கொந்தளித்த சீனா; “இப்படி பண்ணா தான் சரியா வரும்“: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
ஈரான் மீது பொருளாதாரத் தடை; கொந்தளித்த சீனா; “இப்படி பண்ணா தான் சரியா வரும்“: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
TVS iQube MillionR எடிஷன் அறிமுகம்! 212 கி.மீ ரேஞ்ச், அதிக இடவசதி, ரூ.60 ஆயிரம் விலையில்- வேறென்ன ஸ்பெஷல்?
TVS iQube MillionR எடிஷன் அறிமுகம்! 212 கி.மீ ரேஞ்ச், அதிக இடவசதி, ரூ.60 ஆயிரம் விலையில்- வேறென்ன ஸ்பெஷல்?
ரொம்ப கம்மி வட்டியில் மகளிருக்கு கடன்.! ரூ.500 கோடியை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கெல்லாம் கிடைக்கும்.?
ரொம்ப கம்மி வட்டியில் மகளிருக்கு கடன்.! ரூ.500 கோடியை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கெல்லாம் கிடைக்கும்.?
Embed widget