மேலும் அறிய

மதுரை : புகார் கொடுக்க வந்தபோது பழக்கம்.. பெண்ணுக்கு பாலியல்தொல்லை.. இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

வீடு கட்டுவதற்காக வைத்துள்ள பணத்தினை தன்னிடம் தருமாறு ஆனந்த தாண்டவம் கேட்டுள்ளார். வீட்டைக் கட்டித் தருவார் என்ற நம்பிக்கையில் கோமதி மொத்தம் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

காவல் நிலையத்தில் புகாரளிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விளாத்திகுளம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவின் மனைவி கோமதி கடந்த 2019 ஆம் ஆண்டு ஒத்தக்கடை மலையாண்டிபுரத்தில் உள்ள தங்களுக்கு சொந்தமான இடத்தில் புதிதாக வீடு கட்ட திட்டமிட்டுள்ளார். அதற்கான பணியை  அலங்காநல்லூரை சேர்ந்த முருகன் என்ற பொறியாளரிடம் மொத்தமாக ஒப்படைத்துள்ளார். ஆனால் முருகன் அளவுக்கதிகமான பணத்தைப் பெற்றுக் கொண்டு குறித்த நேரத்தில்  கட்டுமான பணிகளை முடிக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். 

இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின் மதுரை ஒத்தக்கடை காவல் நிலையத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு கோமதி புகார் ஒன்றை அளித்தார். அப்போது அங்கு காவல் ஆய்வாளராக ஆனந்த தாண்டவம் என்பவர் பணியாற்றியுள்ளார். அவர் முருகன் மற்றும் கோமதியை வரவழைத்து  புகார் மனு குறித்து விசாரணை நடத்தியுள்ளார். அப்போது ஆனந்த தாண்டவத்திற்கும், கோமதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து வீடு கட்டுவதற்காக வைத்துள்ள பணத்தினை தன்னிடம் தருமாறு ஆனந்த தாண்டவம் கேட்டுள்ளார். வீட்டைக் கட்டித் தருவார் என்ற நம்பிக்கையில் கோமதி மொத்தம் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. மேலும் கோமதியுடையாக பழக்கத்தால் அவரது வீட்டுக்கு சென்ற ஆனந்த தாண்டவம், அங்கு கோமதிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும்,  யாருக்கும் தெரியாமல் அருகிலுள்ள கோவிலில் வைத்து தாலி கட்டியுள்ளார். 

பணத்தையும் கொடுக்காமல், பாலியல் தொல்லையும் அளித்து மன உளைச்சலுக்கு ஆளான தான் 2 முறை தற்கொலை முயற்சி மேற்கொண்டு அருகிலுள்ளவர்களால் காப்பாற்றப்பட்டதாக கோமதி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து   முதல்வரின் தனிப்பிரிவு, மனித உரிமை ஆணைய தலைவர், தென்மண்டல காவல்துறை தலைவர், மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையர் என அனைவரிடமும் அஞ்சல் வழியாக புகார் அளித்தார். 

கோமதி புகார் குறித்து விசாரணை நடந்து வந்த நிலையில், தற்போது விளாத்திகுளம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் ஆனந்த தாண்டவத்தை சஸ்பெண்ட் செய்து நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

கஞ்சா போதையில் வெறிச் செயல் ; தனியாக இருந்த 60 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்
கஞ்சா போதையில் வெறிச் செயல் ; தனியாக இருந்த 60 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்
நொடிப் பொழுதில் மாறிய கல்யாண வீடு: திருமண ஊர்வலத்தில் புகுந்த சொகுசு கார்; 13 பேர் ரத்த வெள்ளத்தில் அலறல்!
நொடிப் பொழுதில் மாறிய கல்யாண வீடு: திருமண ஊர்வலத்தில் புகுந்த சொகுசு கார்; 13 பேர் ரத்த வெள்ளத்தில் அலறல்!
ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! தட்டி தூக்கிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை
ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! தட்டி தூக்கிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை
தற்காலிக ஆசிரியர் பணிக்கு வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் !! கணித ஆசிரியர் கைது
தற்காலிக ஆசிரியர் பணிக்கு வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் !! கணித ஆசிரியர் கைது

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Passport Ranking: மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Mamata Banerjee: ”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
Tata EV Discounts: ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
Embed widget