மேலும் அறிய

பைனான்ஸ் நிறுவனத்தில் திருடிய வீடியோ வைரல் - சாலையில் சென்றபோது சிக்கிய 2 திருடர்களுக்கு தர்ம அடி

’’செய்யாறு பகுதியில் தொடர்ச்சியாக நிதி நிறுவனங்களில் கொள்ளையடித்த 2 கொள்ளையர்களை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்’’

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் கடந்த 2 மாதங்களாக மதிய உணவு நேரத்தில் பைனான்ஸ் கடைகள் மற்றும் ஸ்டுடியோக்களில் புகுந்து பணத்தை திருடி கொண்டு செல்வதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இது தொடர்பாக வியாபாரிகள் கொடுத்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து, காவல்துறையினர்  விசாரணை நடத்தி வந்தனர். நிலையில் செய்யாறு அடுத்த விண்ணவாடி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (34) இவர், செய்யாறு பேருந்து நிலையம் நுழைவு வாயிலில் உள்ள கட்டிடத்தில் உள்ள சிறிய அளவில் பைனான்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், சக்திவேல் கடந்த 6ஆம் தேதி மதியம் 1 மணியளவில், பைனான்ஸின் கண்ணாடி கதவை பூட்டிக்கொண்டு, தனது ஊழியர் முருகேசன் என்பவருடன், மதிய உணவு சாப்பிட வெளியே உணவகத்திற்கு சென்றுள்ளார். 

பைனான்ஸ் நிறுவனத்தில் திருடிய வீடியோ வைரல் - சாலையில் சென்றபோது சிக்கிய 2 திருடர்களுக்கு தர்ம அடி

அதனை தொடர்ந்து , மதியம் 3 மணியளவில் இருவரும் உணவு சாப்பிட பிறகு கடைக்கு திரும்பினர். அப்போது, பைனான்ஸின் கண்ணாடி கதவு திறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின்னர் அலறி அடித்து கொண்டு கடையின்  உள்ளே சென்ற போது, மேசை உள்ள லாக்கர் திறக்கப்பட்டு, அதிலிருந்த 34 ஆயிரம் ரூபாய் திருட்டுபோனது தெரிய வந்தது. இதுகுறித்து சக்திவேல் செய்யாறு காவல்நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில், காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

மேலும், ஏற்கனவே திருட்டு போன பைனான்ஸ், கடைகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர்  தீவிரமாக குற்றவாளிகளை  தேடும் பணியில்  ஈடுப்பட்டனர். அதில் அடையாளம் தெரியாத ஆசாமிகள் 2 பேர் கடைகளுக்குள் புகுந்து பணத்தை திருடி சென்றது பதிவாகி இருந்தது. மேலும், அந்த சிசிடிவி காட்சிகளும் சிலரது தொலைப்பேசியில் உள்ள வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக் போன்ற வலைத்தளங்களில் பரவியுள்ளது. இதை பார்த்த ஒரு  சில, பொதுமக்கள் அந்த மர்ம ஆசாமிகள் 2 பேரும் செய்யாறு மண்டித்தெருவில் ஒரு கடையின் அருகே இருந்ததை கண்டு பொதுமக்கள் 2 கொள்ளையர்களையும் பிடித்து தர்ம அடி கொடுத்து உள்ளனர். அதன் பின்னர் அங்கு இருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்படி அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு நின்று கொண்டிருந்து பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். 

பைனான்ஸ் நிறுவனத்தில் திருடிய வீடியோ வைரல் - சாலையில் சென்றபோது சிக்கிய 2 திருடர்களுக்கு தர்ம அடி

விசாரணையில்  நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, தொண்டிப்பட்டி புதூர் கிராமத்தை சேர்ந்த மோகன்ராஜ் (27), அவரது கூட்டாளியான ஈரோடு மாவட்டம், நாப்பியாலம் கிராமம் வளையல்கார தெருவை சேர்ந்த அருண்குமார் (30) என்பதும், இவர்கள் இருவரும் சிறையில் நண்பர்களான இவர்கள் செய்யாறு பகுதியில் பைனான்ஸ், கடைகள், ஸ்டுடியோவில் மதிய உணவு நேரத்தில் கண்ணாடி கதவை உடைத்து பணத்தை திருடிவந்ததும் தெரியவந்தது. மேலும், சக்திவேலின் பைனான்ஸ் நிறுவனத்தில் திருடியது இவர்கள்தான் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்ப திவு செய்த காவல்துறையினர் மோகன்ராஜ், அருண்குமார் ஆகிய 2 நபர்களையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 12,500 ரூபாய் காவல்துறையினர்  பறிமுதல் செய்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget