மேலும் அறிய

கலெக்டர் அலுவலகத்தில் ஸ்கூட்டரை உடைத்து பணம் கொள்ளை... விரட்டிப் பிடித்த பெண் காவலர்!

பொது மக்கள் யாரும் வழிப்பறி குப்பலை பிடிக்க முயற்சிக்காத நிலையில்,  வழிப்பறி கும்பல் ஆட்சியர் அலுவலக கேட்டை தாண்டியுள்ளனர்.

வேலூர் மாநகருக்குட்பட்ட சத்துவாச்சாரி அன்னை தெரெசா 2-வது தெரு பகுதியை சேர்ந்தவர் அகஸ்டின்(60). ஒய்வு பெற்ற போக்குவரத்து ஊழியரான இவர், சத்துவாச்சாரியில் உள்ள IOB வங்கிக்கு சென்று தனது வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 50 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு அதை ஒரு லெதர் பையில் போட்டு தனது ஸ்கூட்டரில் புறப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர், அங்கு சித்த மருத்துவ மையத்தில் உள்ள தனது நண்பரை பார்க்கச் சென்றுள்ளார். அப்போது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு பணப்பையை ஸ்கூட்டரின் சீட்டிற்கு அடியில் வைத்து பூட்டிவிட்டு சென்றுள்ளார். அவர் வங்கியில் வெளியேறியதில் இருந்து நோட்டமிட்ட கும்பல் ஒன்று, இவை அனைத்தையும் கவனித்து வந்தது. இரண்டு இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த அந்த 4 பேர்  கும்பல், அகஸ்டின் உள்ளே சென்றதும் ஸ்கூட்டரின் பின் பகுதியை கள்ளச்சாவி போட்டு திறந்து அதிலிருந்த பணம்பையை எடுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.


கலெக்டர் அலுவலகத்தில் ஸ்கூட்டரை உடைத்து பணம் கொள்ளை... விரட்டிப் பிடித்த பெண் காவலர்!

தற்செயலாக இதனை கண்ட அகஸ்டின் கூச்சலிட்டு அலறி "திருடன் பிடிங்க பிடிங்க" என கத்தியுள்ளார். பொது மக்கள் யாரும் வழிப்பறி குப்பலை பிடிக்க முயற்சிக்காத நிலையில்,  வழிப்பறி கும்பல் ஆட்சியர் அலுவலக கேட்டை தாண்டியுள்ளனர். அப்போது அகஸ்டினின் அலறல் சத்தத்தை கேட்ட பாதுகாப்பு பணியில் இருந்த ஜீவிதா என்ற பெண் காவலர் உடனே அந்த வழிப்பறி கும்பலை விரட்டிச்சென்று பிடிக்க முயற்சித்துள்ளார். பெண் காவலர் விரட்டுவதை கண்ட வழிப்பறி கும்பல் பணப்பையை போட்டுவிட்டு இரண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடியுள்ளனர். மேலும் ஓடும் போது ஒரு செல்போனையும் தவறவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து பெண் காவலர் ஜீவிதா பணப்பையை மீட்டு அகஸ்டியனிடம் கொடுத்துள்ளார். மேலும் வழிப்பறி கும்பல் விட்டுச்சென்ற செல்போனை காவல் துறையில் ஓப்படைத்துள்ளார்.


கலெக்டர் அலுவலகத்தில் ஸ்கூட்டரை உடைத்து பணம் கொள்ளை... விரட்டிப் பிடித்த பெண் காவலர்! 

இது குறித்து அகஸ்டின் கூறுகையில், நான் வங்கியில் இருந்து பணம் எடுத்து வரும் போது யாரும் என்னை பின் தொடர்ந்ததாக நான் பார்க்கவில்லை. மேலும் எனது இருசக்கர வாகனத்தை பூட்டிவிட்டுத்தான் சென்றேன் எப்படி இதை திறந்து பணம் எடுத்தார்கள் என தெரியவில்லை. நான் கூச்சலிட்டு அலறிய போதும் யாருமே அவர்களை பிடிக்க முன்வரவில்லை. அந்த பெண் காவலர் தான் விரட்டிச்சென்றார். அவருக்கு எனது நன்றி என கூறினார். பணம் கிடைத்தது என்ற மகிழ்ச்சியில் அகஸ்டின் இருந்தாலும், சிறுது நேரத்தில் நடந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து அவர் இன்னும் மீளவில்லை.


கலெக்டர் அலுவலகத்தில் ஸ்கூட்டரை உடைத்து பணம் கொள்ளை... விரட்டிப் பிடித்த பெண் காவலர்!

இச்சம்பவம் தொடர்பாக சத்துவாச்சாரி காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அவர்கள் தவறவிட்டுச்சென்ற செல்போனை வைத்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இரண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடிய 4 பேரை தேடி வருகின்றனர். துரிதமாக செயல்பட்டு தைரியமாக வழிப்பறி கும்பலை விரட்டிச்சென்ற பெண் காவலர் ஜீவிதாவுக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


கலெக்டர் அலுவலகத்தில் ஸ்கூட்டரை உடைத்து பணம் கொள்ளை... விரட்டிப் பிடித்த பெண் காவலர்!

பட்டப்பகலில் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலேயே 4 பேர் கொண்ட கும்பல் பணம் பறிக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொது மக்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mallikarjun Kharge Fainted : மயங்கி விழுந்த கார்கே!Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 30:  தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Vanniarasu:
Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
தொடரும் கட்டப்பஞ்சாயத்துகள் ; ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம் - தாக்குதலுக்கு ஆளான அவலம்...!  
மயிலாடுதுறை அருகே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டை சுற்றி வேலி அமைத்த அவலம்.
ஒரே ஒரு போன் கால், அரசு மருத்துவமனைக்கு விரைந்த ஆட்சியர்; இதுதான் விஷயம்..!
வலியால் துடித்த கர்ப்பிணி, தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்து ஆட்சியர் எடுத்த நடவடிக்கை.
Embed widget