மேலும் அறிய

தமிழ்நாட்டில் திருடி ஆந்திராவிற்கு கடத்த முயன்ற கழுதைகள் மீட்பு: இறைச்சிக்காக களமிறங்கிய கும்பல்!

ஆரணியில் திருடிய கழுதைகளை கொண்டும் செல்லும் போது வாகன சோதனையில் சிக்கினர்.

வேலூர் மாநகருக்குட்பட்ட அண்ணாசாலையில் வேலூர் தெற்கு காவல் துறையினர் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மினி வேன் ஒன்றில் கழுதைகளை ஏற்றி கொண்டு ஆந்திராவைச் சேர்ந்த 5 பேர் வந்துள்ளனர்.


தமிழ்நாட்டில் திருடி ஆந்திராவிற்கு கடத்த முயன்ற கழுதைகள் மீட்பு: இறைச்சிக்காக களமிறங்கிய கும்பல்!

அவர்கள் காவல் துறையினரை சாலையில் கண்டதும் மினி வேனை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளனர். இதனையடுத்து சந்தேகம் அடைந்த காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு வாகனத்தை வேகமாக விரட்டி சென்று மக்கான் சிக்னல் அருகே  மடக்கியுள்ளனர். அப்போது மினி வேனில் இருந்த 4 பேர்  தப்பி வேனில் இருந்து குதித்து தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து கழுதையை ஏற்றிவந்த மினி வேன் ஓட்டுநரான சீனிவாசலால்(50) என்பவரை மட்டும் மடக்கிப்பிடித்தனர்.

பிடிபட்ட ஓட்டுனர் சீனிவாசலால் என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடத்தலில் ஈடுபட்ட இவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் இருந்து கழுதைகளை இறைச்சிக்காக ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு கொண்டு செல்வது தெரியவந்தது. இதனையடுத்து வாகனத்துடன் கடத்தி வரப்பட்ட 6 கழுதைகளை வேலூர் தெற்கு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆந்திராவை சேர்ந்த ஓட்டுநரிடம் காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர்.


தமிழ்நாட்டில் திருடி ஆந்திராவிற்கு கடத்த முயன்ற கழுதைகள் மீட்பு: இறைச்சிக்காக களமிறங்கிய கும்பல்!

இதுதொடர்பாக காவல் துறையினர் தெரிவிக்கையில் ஆந்திர மாநிலத்தில் வசிப்பவர்களில் சிலர் உடல் வலிமை பெறுவதற்காக கழுதை கறியை (இறைச்சியை) உண்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்க்கு அறிவியல் பூர்வமாக எவ்வித ஆதாரங்களும் இல்லாத நிலையில் கழுதைகளை இறைச்சிக்காக கொல்வது சட்டப்படி குற்றம் என்று ஆந்திர மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தை மீறுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆந்திர மாநில அரசு எச்சரித்துள்ளது.

இப்படியான நிலையில் ஆந்திராவில் போதிய கழுதைகள் இல்லாததால் கழுதை இறைச்சியை உண்ண விரும்பும் சிலர் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற வெளி மாநிலங்களில் இருந்து கழுதைகளை இறைச்சிக்காக கொண்டு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்த நிலையில் தான் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இருந்து கழுதைகளை கொண்டு சென்றது தெரியவந்துள்ளது. குறிப்பாக இவர்கள் கழுதையை பணம் கொடுத்து வாங்கவில்லை அங்கிருந்து திருடி சென்றுள்ளனர். வேலூரில் கழுதையை பிடித்தது குறித்து திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காவல் துறையினருக்கு நாங்கள் தகவல் தெரிவித்த போது அங்கு சிலரது கழுதைகள் திருடு போயிருப்பதாக புகார் வந்துள்ளது. இவர்கள் தான் அந்த கழுதைகளை திருடியிருப்பார்கள் என்றும் தெரியவருகிறது. இருந்தபோதும் ஆரணியில் புகார் அளித்தவர்களை வேலூர் தெற்கு காவல் நிலையத்திற்க்கு வர சொல்லியுள்ளோம். அவர்கள் வந்தவுடன் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்ட பிறகு கழுதைகள் ஒப்படைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இறைச்சிக்காக கழுதைகளை ஆந்திராவுக்கு கடத்திய சம்பவம் இப்பகுதியில் வியப்புக்குரியதாக பார்க்கப்பட்டது.

தலைப்பு செய்திகள்

பெற்ற குழந்தையை விற்ற தாய்; ஆம்பூரில் அரங்கேறிய கொடூரம்; பின்னணியில் இருக்கும் பகீர் உண்மைகள்
பெற்ற குழந்தையை விற்ற தாய்; ஆம்பூரில் அரங்கேறிய கொடூரம்; பின்னணியில் இருக்கும் பகீர் உண்மைகள்
Child Abuse: திருவள்ளூர் 3 வயது குழந்தை ”கூட்டு பாலியல் வன்கொடுமை கிடையாது” - காவல்துறை விளக்கம்
திருவள்ளூர் 3 வயது குழந்தை ”கூட்டு பாலியல் வன்கொடுமை கிடையாது” - காவல்துறை விளக்கம்
" உன்னை சந்திக்கனும் " நண்பர் தானே என நம்பி வந்த பெண் காவலருக்கு நேர்ந்த பாலியல் கொடூரம்
திருமணம் மீறிய உறவு !! கள்ளக் காதலால் இளம்பெண்ணுக்கு நடுரோட்டில் நடந்த பயங்கரம்
திருமணம் மீறிய உறவு !! கள்ளக் காதலால் இளம்பெண்ணுக்கு நடுரோட்டில் நடந்த பயங்கரம்

வீடியோ

Iran US War: அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்! குறையும் பெட்ரோல் டீசல் விலை?ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
Mdmk dmk alliance Break : திமுக-வுக்கு டாட்டா? ரூட்டை மாற்றும் வைகோ உடையப்போகும் கூட்டணி?
Singappen Task Force : பெண்ணிடம் சில்மிஷம்! சீறிப்பாய்ந்த சிங்கப்பெண் படை! சிவகாசியில் நடந்த ACTION
Child Abuse : கும்மிடிப்பூண்டி கொடூரம்குழந்தை பாலியல் வன்கொடுமை! உண்மையை உடைத்த காவல்துறை!
Bungee Jumping Accident | உயிரைப் பறித்த BUNGEE JUMPING! கயிறு கட்ட மறந்த ஊழியர்கள்..பரிதாபமாக உயிரிழந்த பெண்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jayakumar: நள்ளிரவில் விஜய்க்கு பாடம் எடுத்த ஜெயக்குமார்..! டெபாசிட் பெறுவது எப்படி? TVK பதிலடி
நள்ளிரவில் விஜய்க்கு பாடம் எடுத்த ஜெயக்குமார்..! டெபாசிட் பெறுவது எப்படி? TVK பதிலடி
TN Weather Update: இடி, மின்னல், பலத்த காற்று..! 9 மாவாட்டங்களில் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னல், பலத்த காற்று..! 9 மாவாட்டங்களில் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
US Iran Deal Vs Israel: இவங்க முடிக்க விட மாட்டாங்க போலயே.! “அமெரிக்கா-ஈரான் டீல் எங்கள கட்டுப்படுத்தாது“ - இஸ்ரேல் அறிவிப்பு
இவங்க முடிக்க விட மாட்டாங்க போலயே.! “அமெரிக்கா-ஈரான் டீல் எங்கள கட்டுப்படுத்தாது“ - இஸ்ரேல் அறிவிப்பு
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள்; விஜய்க்கு கோரிக்கைகளை அடுக்கிய பா.ரஞ்சித் - என்னென்ன?
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள்; விஜய்க்கு கோரிக்கைகளை அடுக்கிய பா.ரஞ்சித் - என்னென்ன?
IPS Transfer: 56 ஐபிஎஸ் அதிகாரிகள்! கொத்தாக டிரான்ஸ்பர் செய்த தவெக அரசு - யார்? யார்? எங்கே?
IPS Transfer: 56 ஐபிஎஸ் அதிகாரிகள்! கொத்தாக டிரான்ஸ்பர் செய்த தவெக அரசு - யார்? யார்? எங்கே?
குடும்பத்தோடு குதூகலமாக போக! 136 கி.மீட்டர் மைலேஜ் தரும் OPG Mobility Faast F3 இ ஸ்கூட்டர்
குடும்பத்தோடு குதூகலமாக போக! 136 கி.மீட்டர் மைலேஜ் தரும் OPG Mobility Faast F3 இ ஸ்கூட்டர்
Breakfast Scheme: இனி 8ஆம் வகுப்பு வரை காலை உணவு; முதல்வர் விஜய் அசத்தல் அறிவிப்பு- எப்போது முதல்?
Breakfast Scheme: இனி 8ஆம் வகுப்பு வரை காலை உணவு; முதல்வர் விஜய் அசத்தல் அறிவிப்பு- எப்போது முதல்?
Chennai Power Cut: சென்னைல ஜூன் 16-ம் தேதி(16.06.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை ஏற்படப் போகுது; உங்க ஏரியா இருக்கா.?
சென்னைல ஜூன் 16-ம் தேதி(16.06.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை ஏற்படப் போகுது; உங்க ஏரியா இருக்கா.?
Embed widget