மேலும் அறிய

தமிழ்நாட்டில் திருடி ஆந்திராவிற்கு கடத்த முயன்ற கழுதைகள் மீட்பு: இறைச்சிக்காக களமிறங்கிய கும்பல்!

ஆரணியில் திருடிய கழுதைகளை கொண்டும் செல்லும் போது வாகன சோதனையில் சிக்கினர்.

வேலூர் மாநகருக்குட்பட்ட அண்ணாசாலையில் வேலூர் தெற்கு காவல் துறையினர் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மினி வேன் ஒன்றில் கழுதைகளை ஏற்றி கொண்டு ஆந்திராவைச் சேர்ந்த 5 பேர் வந்துள்ளனர்.


தமிழ்நாட்டில் திருடி ஆந்திராவிற்கு கடத்த முயன்ற கழுதைகள் மீட்பு: இறைச்சிக்காக களமிறங்கிய கும்பல்!

அவர்கள் காவல் துறையினரை சாலையில் கண்டதும் மினி வேனை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளனர். இதனையடுத்து சந்தேகம் அடைந்த காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு வாகனத்தை வேகமாக விரட்டி சென்று மக்கான் சிக்னல் அருகே  மடக்கியுள்ளனர். அப்போது மினி வேனில் இருந்த 4 பேர்  தப்பி வேனில் இருந்து குதித்து தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து கழுதையை ஏற்றிவந்த மினி வேன் ஓட்டுநரான சீனிவாசலால்(50) என்பவரை மட்டும் மடக்கிப்பிடித்தனர்.

பிடிபட்ட ஓட்டுனர் சீனிவாசலால் என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடத்தலில் ஈடுபட்ட இவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் இருந்து கழுதைகளை இறைச்சிக்காக ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு கொண்டு செல்வது தெரியவந்தது. இதனையடுத்து வாகனத்துடன் கடத்தி வரப்பட்ட 6 கழுதைகளை வேலூர் தெற்கு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆந்திராவை சேர்ந்த ஓட்டுநரிடம் காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர்.


தமிழ்நாட்டில் திருடி ஆந்திராவிற்கு கடத்த முயன்ற கழுதைகள் மீட்பு: இறைச்சிக்காக களமிறங்கிய கும்பல்!

இதுதொடர்பாக காவல் துறையினர் தெரிவிக்கையில் ஆந்திர மாநிலத்தில் வசிப்பவர்களில் சிலர் உடல் வலிமை பெறுவதற்காக கழுதை கறியை (இறைச்சியை) உண்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்க்கு அறிவியல் பூர்வமாக எவ்வித ஆதாரங்களும் இல்லாத நிலையில் கழுதைகளை இறைச்சிக்காக கொல்வது சட்டப்படி குற்றம் என்று ஆந்திர மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தை மீறுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆந்திர மாநில அரசு எச்சரித்துள்ளது.

இப்படியான நிலையில் ஆந்திராவில் போதிய கழுதைகள் இல்லாததால் கழுதை இறைச்சியை உண்ண விரும்பும் சிலர் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற வெளி மாநிலங்களில் இருந்து கழுதைகளை இறைச்சிக்காக கொண்டு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்த நிலையில் தான் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இருந்து கழுதைகளை கொண்டு சென்றது தெரியவந்துள்ளது. குறிப்பாக இவர்கள் கழுதையை பணம் கொடுத்து வாங்கவில்லை அங்கிருந்து திருடி சென்றுள்ளனர். வேலூரில் கழுதையை பிடித்தது குறித்து திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காவல் துறையினருக்கு நாங்கள் தகவல் தெரிவித்த போது அங்கு சிலரது கழுதைகள் திருடு போயிருப்பதாக புகார் வந்துள்ளது. இவர்கள் தான் அந்த கழுதைகளை திருடியிருப்பார்கள் என்றும் தெரியவருகிறது. இருந்தபோதும் ஆரணியில் புகார் அளித்தவர்களை வேலூர் தெற்கு காவல் நிலையத்திற்க்கு வர சொல்லியுள்ளோம். அவர்கள் வந்தவுடன் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்ட பிறகு கழுதைகள் ஒப்படைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இறைச்சிக்காக கழுதைகளை ஆந்திராவுக்கு கடத்திய சம்பவம் இப்பகுதியில் வியப்புக்குரியதாக பார்க்கப்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Radha Nagar Subway: 15 வருட இழுபறி.. சென்னை ராதாநகர் சுரங்கப்பாதை ரெடி, ட்ராஃபிக் ஓவர், ரூ.32 கோடி, ஜன.7 திறப்பு
Radha Nagar Subway: 15 வருட இழுபறி.. சென்னை ராதாநகர் சுரங்கப்பாதை ரெடி, ட்ராஃபிக் ஓவர், ரூ.32 கோடி, ஜன.7 திறப்பு
BiggBoss Tamil 9: கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!
BiggBoss Tamil 9: கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!
பாலியல் வன்கொடுமை.. 19 வயது மாணவியின் வாழ்க்கையை நாசமாக்கிய பேராசிரியர்.. உயிரும் போச்சு!
பாலியல் வன்கொடுமை.. 19 வயது மாணவியின் வாழ்க்கையை நாசமாக்கிய பேராசிரியர்.. உயிரும் போச்சு!
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Radha Nagar Subway: 15 வருட இழுபறி.. சென்னை ராதாநகர் சுரங்கப்பாதை ரெடி, ட்ராஃபிக் ஓவர், ரூ.32 கோடி, ஜன.7 திறப்பு
Radha Nagar Subway: 15 வருட இழுபறி.. சென்னை ராதாநகர் சுரங்கப்பாதை ரெடி, ட்ராஃபிக் ஓவர், ரூ.32 கோடி, ஜன.7 திறப்பு
BiggBoss Tamil 9: கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!
BiggBoss Tamil 9: கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!
பாலியல் வன்கொடுமை.. 19 வயது மாணவியின் வாழ்க்கையை நாசமாக்கிய பேராசிரியர்.. உயிரும் போச்சு!
பாலியல் வன்கொடுமை.. 19 வயது மாணவியின் வாழ்க்கையை நாசமாக்கிய பேராசிரியர்.. உயிரும் போச்சு!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Embed widget