மேலும் அறிய

ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை திருட்டு: திருச்சி லலிதா ஜுவல்லரி சம்பவத்துடன் தொடர்பா?

இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு காவல் துறையினர். தொடர் வேட்டையில் கொள்ளையனை நெருங்கும் தனிப்படை.

வேலூர் மாநகரின் முக்கிய பகுதியான நேஷ்னல் திரையங்க பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர் பழைய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் உள்ள தோட்டப்பாளையம் தர்மராஜா கோவில் அருகில் அமைந்துள்ளது, பிரபல நகை கடை ஜோஸ்-ஆலுக்காஸ். 5 தளங்களுடன் இயங்கி வரும் இந்த நகை கடையில் நேற்று (டிச 15) நள்ளிரவு சுவற்றை துளையிட்டு சுமார் 15 கிலோ தங்க நகைகள் மற்றும் 500 கிராம் வைர நகைகள் என பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. இது தொடர்பாக கடையின் மேலாளர் பிரதீஷ் அளித்த புகாரின் அடிப்படையில் 457, 380 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை திருட்டு: திருச்சி லலிதா ஜுவல்லரி சம்பவத்துடன் தொடர்பா?

இந்நிலையில் கொள்ளை நடந்த நகைக்கடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (டிச 16) மாலை வடக்கு மண்டல காவல் துறையின் துணை தலைவர் (IG) சந்தோஷ் குமார், வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் (DIG) ஏ.ஜி பாபு மற்றும் விழுப்புரம் சரக காவல்துறையின் துணைத் தலைவர் (DIG) பாண்டியன் ஆகியோர் கொள்ளை நடந்த ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடைக்கு நேரில் சென்று ஆய்வு செய்து இது குறித்து எஸ்.பி ராஜேஷ் கண்ணாவிடம் கேட்டறிந்து விசாரணை மேற்கொண்டார்.


ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை திருட்டு: திருச்சி லலிதா ஜுவல்லரி சம்பவத்துடன் தொடர்பா?

ஆய்வு மற்றும் விசாரணைக்குப் பிறகு ஐஜி சந்தோஷ் குமார் கூறுகையில், இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 4 டி.எஸ்.பி தலைமையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கடையின் சிசிடிவி காமிராவில் மாஸ்க் அணிந்த ஒருவரது உருவம் பதிவாகி உள்ளது. சில தடயங்கள் கிடைத்துள்ளது அதனை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது விரைவில் குற்றவாளியை பிடிப்போம் என்றார். இது போன்ற பல வழக்குகள் ஏற்கனவே பதிவாகியுள்ளது. மேலும் திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும், அந்த குற்றவாளியிடமும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார் தெரிவித்தார்.


ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை திருட்டு: திருச்சி லலிதா ஜுவல்லரி சம்பவத்துடன் தொடர்பா?

மேலும் இக்கொள்ளை சம்பவம் தொடர்பாக தொடர்ந்து இரண்டாவது நாளாக தனிப்படை காவல் துறையினர் நகை கடை பணியாளர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வேலூர் மாநகரின் முக்கிய பகுதிகள், சாலைகளில் உள்ள சிசிடிவிக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். 4 டிஎஸ்பிக்கள் ஒரு ஏ.எஸ்.பி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 8 தனிப்படையினரில் ஒரு குழு ஆந்திர மாநிலத்திலும், ஒரு குழு கர்நாடக மாநிலத்திலும் முகாமிட்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர் என தெரியவந்துள்ளது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

வெறும் ரூ 40,000க்கு கசியவிடப்பட்ட ராணுவ தகவல்கள்.. வசமாக சிக்கிய குஜராத் இளைஞர்
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மற்றொரு நபர்.. குஜராத்தில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ATS
பொறியியல் பட்டதாரியா? உணவு, இருப்பிடத்துடன் வெளிநாட்டு வேலை- ரூ.80 ஆயிரம் சம்பளம்- விண்ணப்பிப்பது எப்படி?
பொறியியல் பட்டதாரியா? உணவு, இருப்பிடத்துடன் வெளிநாட்டு வேலை- ரூ.80 ஆயிரம் சம்பளம்- விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC Group 4: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு உடனே விண்ணப்பிங்க- 4 ஆயிரம் பணியிடங்கள்!- முழு விவரம்
TNPSC Group 4: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு உடனே விண்ணப்பிங்க- 4 ஆயிரம் பணியிடங்கள்!- முழு விவரம்
இனி கரண்ட் பில் கட்ட வேண்டாம்! எப்படி தெரியுமா? இதை செய்யுங்கள் முதலில்
இனி கரண்ட் பில் கட்ட வேண்டாம்! எப்படி தெரியுமா? இதை செய்யுங்கள் முதலில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | ராகுலுக்கு பிடிவாரண்ட்! அதிரடி காட்டிய நீதிமன்றம்! அமித்ஷா குறித்து அவதூறுKaliyammal Political Party | காளியம்மாளின் புதிய கட்சி?அதிர்ச்சியில் சீமான்! பின்னணியில் திமுக?அருண் ராஜ் கையில் பொறுப்பு! கலக்கத்தில் புஸ்ஸி ஆனந்த்! ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்”பொன்முடியவே ஓரங்கட்டுறீங்களா” லட்சுமணனை கண்டித்த MRK பன்னீர்செல்வம்! கடுப்பில் ஆதரவாளர்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெறும் ரூ 40,000க்கு கசியவிடப்பட்ட ராணுவ தகவல்கள்.. வசமாக சிக்கிய குஜராத் இளைஞர்
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மற்றொரு நபர்.. குஜராத்தில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ATS
பொறியியல் பட்டதாரியா? உணவு, இருப்பிடத்துடன் வெளிநாட்டு வேலை- ரூ.80 ஆயிரம் சம்பளம்- விண்ணப்பிப்பது எப்படி?
பொறியியல் பட்டதாரியா? உணவு, இருப்பிடத்துடன் வெளிநாட்டு வேலை- ரூ.80 ஆயிரம் சம்பளம்- விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC Group 4: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு உடனே விண்ணப்பிங்க- 4 ஆயிரம் பணியிடங்கள்!- முழு விவரம்
TNPSC Group 4: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு உடனே விண்ணப்பிங்க- 4 ஆயிரம் பணியிடங்கள்!- முழு விவரம்
இனி கரண்ட் பில் கட்ட வேண்டாம்! எப்படி தெரியுமா? இதை செய்யுங்கள் முதலில்
இனி கரண்ட் பில் கட்ட வேண்டாம்! எப்படி தெரியுமா? இதை செய்யுங்கள் முதலில்
Villupuram DMK: பொன்முடிக்கு நோ ! ஆர்டர் போட்ட லட்சுமணன்..  ஆடிப்போன எம்.ஆர்.கே
Villupuram DMK: பொன்முடிக்கு நோ ! ஆர்டர் போட்ட லட்சுமணன்.. ஆடிப்போன எம்.ஆர்.கே
பாமக உட்கட்சி பூசல்.. சுற்றுப்பயணத்தை கையில் எடுத்த அன்புமணி.. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு
பாமக உட்கட்சி பூசல்.. சுற்றுப்பயணத்தை கையில் எடுத்த அன்புமணி.. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு
பிளே ஆப்க்கு முன்பாக ஆர்.சி.பி அடைக்க வேண்டிய ஓட்டை என்ன ? நிபுனர்கள் கருத்து
பிளே ஆப்க்கு முன்பாக ஆர்.சி.பி அடைக்க வேண்டிய ஓட்டை என்ன ? நிபுனர்கள் கருத்து
IND vs ENG: ஸ்ரேயாஸ் இல்லாம போறீங்களா? மிடில் ஆர்டரில் என்ன செய்யப்போகிறது இந்தியா? ரசிகர்கள் ஆதங்கம்
IND vs ENG: ஸ்ரேயாஸ் இல்லாம போறீங்களா? மிடில் ஆர்டரில் என்ன செய்யப்போகிறது இந்தியா? ரசிகர்கள் ஆதங்கம்
Embed widget