மேலும் அறிய

அரசு பஸ்ஸை அலற வைத்த போதை பெண்: போலீசில் கதறிய பயணிகள்... சாந்தியை சாந்தப்படுத்த முடியாத திக் திக் நிமிடங்கள்!

‛இது என்னடா... நமக்கு வந்த சோதனை...’ என பலரும் வாயடைத்தனர். எத்தனை பேர் வந்தாலும், அத்தனை பேரையும் ‛வாங்கடா... வாங்கடா...’ என தனி பெண்ணாக சீறிப்பாய்ந்தார் சாந்தி. 

 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஈரோட்டிலிருந்து மதுரையை நோக்கி 50 பயணிகளுடன் கோவை போக்குவரத்து கழக பேருந்து வந்து கொண்டிருந்தது. ரம்யமான பாடல், குளுமையான சூழல் என அருமையான பயணத்தில் அமர்ந்திருந்தனர் பயணிகள். ஆனால், அது எல்லாம் கரூர் வரும் வரை தான். கரூர் வந்தது... கூடவே கவலையும் வந்தது. சாந்தி என்ற பயணி, அப்போது தான் அந்த பஸ்ஸில் ஏறி, முன்புற படிக்கட்டு அருகே உள்ள இருக்கையில் அமர்ந்தார். அவரோடு வேட்டி சட்டை அணிந்த ஒரு நபரும் பயணித்தார். அவர் அந்த பெண்ணின் வீட்டில் பணியாற்றும் தோட்டக்காரராம். 


அரசு பஸ்ஸை அலற வைத்த போதை பெண்: போலீசில் கதறிய பயணிகள்... சாந்தியை சாந்தப்படுத்த முடியாத திக் திக் நிமிடங்கள்!

பஸ் நகர்ந்தம், ஒரு விதமான வித்தியாசமான வாசம் வந்திருக்கிறது. அது மதுபான வாசம் என்பதை அனைவரும் அறிந்து கொண்டனர். ஆனால், யார் குடித்திருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் தான், பேருந்தின் கியர் மாறியது போல, சாந்தியின் பேச்சும் மாறியது. தன்னுடன் வந்த பணியாளரை மெல்ல மெல்ல வசைபாட தொடங்கினார் சாந்தி. பஸ் டாப் கியருக்கு மாறிய போது, சாந்தியும் டாப் கியர் எடுத்தார். காதில் கேட்க முடியாத ஆபாச வார்த்தைகளால் உடன் வந்தவரை அர்ச்சனை செய்யத் தொடங்கினார். 

அதை கேட்ட பயணிகள், என்ன செய்வது என்று தெரியாமல் நெழிந்தனர். நேரம் செல்ல செல்ல... வார்த்தைகளின் வக்கிரம் உச்சத்தில் சென்றது. தட்டிக் கேட்கலாம் என சிலர் முயன்ற போது, அவர்களை நோக்கி அர்ச்சனை திரும்பியது. ‛இது என்னடா... நமக்கு வந்த சோதனை...’ என பலரும் வாயடைத்தனர். எத்தனை பேர் வந்தாலும், அத்தனை பேரையும் ‛வாங்கடா... வாங்கடா...’ என தனி பெண்ணாக சீறிப்பாய்ந்தார் சாந்தி. 

பேருந்தில் இருந்த பெண்கள் சிலரும், அவரை கட்டுப்படுத்த முயற்சித்து, கடுப்பாகி அமர்ந்தனர். உலகில் உள்ள ஒட்டுமொத்த கெட்ட வார்த்தைகளால் நிரம்பி வழிந்தது அந்த அரசுப் பேருந்து, ஆனால், பயணிகள் எண்ணிக்கை என்னவோ... அதை விட குறைவு தான். சாந்தியை சாந்தப்படுத்த பேருந்து நடத்துனர், ஓட்டுநர் எல்லாரும் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்து, இறுதியில் போலீஸ் ஸ்டேஷன் செல்ல முடிவு செய்தனர். 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வந்ததும்,  பேருந்தை காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லுமாறு  பயணிகள் கூறினார். இதுக்கு மேல் காது குடித்து கேட்க முடியாது என்று அவர்கள் புலம்பினர். டிரைவருக்கும், கண்டக்டருக்கும் அதே நிலையே. எனவே பேருந்து வேடசந்தூர் காவல் நிலையம் சென்றது. பஸ்ஸில் இருந்து பந்தாவாக இறங்கிய சாந்தி, மீண்டும் ஆபாச வார்த்தைகளை வாந்தி எடுத்தார். இதனால் காவல் நிலையமும் காவா நிலையமாக மாறியது. 


அரசு பஸ்ஸை அலற வைத்த போதை பெண்: போலீசில் கதறிய பயணிகள்... சாந்தியை சாந்தப்படுத்த முடியாத திக் திக் நிமிடங்கள்!

அந்த பெண் பேசிய பேச்சால் தங்கள் காதுகள் ரத்தகளறியானது குறித்து விசாரணை அதிகாரிகளிடம் புலம்பித் தீர்த்தனர் பயணிகள். ‛சரி.. சரி நீங்க போங்க நான் பார்த்துக்கிறேன்...’ என அவர்களை ஆறுதல் படுத்தி அனுப்பி வைத்தார் எஸ்ஐ. அதன் பின் அந்த பெண்ணை அழைத்து விசாரணை நடத்திய போலீசார், ‛இனிமே இப்படி பண்ணாதம்மா... போய் ஒழுங்க இரு...’ என எச்சரித்து அனுப்பினர். குயிலை பிடிச்சு கூண்டில் அடைக்க முயற்சித்த பயணிகளின் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், சிறைவாசம் ஜஸ்ட் மிஸ்ஸான சாந்தி, உடையாத பூந்தியாய் அப்படியே வெளியே வந்தார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget