மேலும் அறிய

அரசு பஸ்ஸை அலற வைத்த போதை பெண்: போலீசில் கதறிய பயணிகள்... சாந்தியை சாந்தப்படுத்த முடியாத திக் திக் நிமிடங்கள்!

‛இது என்னடா... நமக்கு வந்த சோதனை...’ என பலரும் வாயடைத்தனர். எத்தனை பேர் வந்தாலும், அத்தனை பேரையும் ‛வாங்கடா... வாங்கடா...’ என தனி பெண்ணாக சீறிப்பாய்ந்தார் சாந்தி. 

 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஈரோட்டிலிருந்து மதுரையை நோக்கி 50 பயணிகளுடன் கோவை போக்குவரத்து கழக பேருந்து வந்து கொண்டிருந்தது. ரம்யமான பாடல், குளுமையான சூழல் என அருமையான பயணத்தில் அமர்ந்திருந்தனர் பயணிகள். ஆனால், அது எல்லாம் கரூர் வரும் வரை தான். கரூர் வந்தது... கூடவே கவலையும் வந்தது. சாந்தி என்ற பயணி, அப்போது தான் அந்த பஸ்ஸில் ஏறி, முன்புற படிக்கட்டு அருகே உள்ள இருக்கையில் அமர்ந்தார். அவரோடு வேட்டி சட்டை அணிந்த ஒரு நபரும் பயணித்தார். அவர் அந்த பெண்ணின் வீட்டில் பணியாற்றும் தோட்டக்காரராம். 


அரசு பஸ்ஸை அலற வைத்த போதை பெண்: போலீசில் கதறிய பயணிகள்... சாந்தியை சாந்தப்படுத்த முடியாத திக் திக் நிமிடங்கள்!

பஸ் நகர்ந்தம், ஒரு விதமான வித்தியாசமான வாசம் வந்திருக்கிறது. அது மதுபான வாசம் என்பதை அனைவரும் அறிந்து கொண்டனர். ஆனால், யார் குடித்திருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் தான், பேருந்தின் கியர் மாறியது போல, சாந்தியின் பேச்சும் மாறியது. தன்னுடன் வந்த பணியாளரை மெல்ல மெல்ல வசைபாட தொடங்கினார் சாந்தி. பஸ் டாப் கியருக்கு மாறிய போது, சாந்தியும் டாப் கியர் எடுத்தார். காதில் கேட்க முடியாத ஆபாச வார்த்தைகளால் உடன் வந்தவரை அர்ச்சனை செய்யத் தொடங்கினார். 

அதை கேட்ட பயணிகள், என்ன செய்வது என்று தெரியாமல் நெழிந்தனர். நேரம் செல்ல செல்ல... வார்த்தைகளின் வக்கிரம் உச்சத்தில் சென்றது. தட்டிக் கேட்கலாம் என சிலர் முயன்ற போது, அவர்களை நோக்கி அர்ச்சனை திரும்பியது. ‛இது என்னடா... நமக்கு வந்த சோதனை...’ என பலரும் வாயடைத்தனர். எத்தனை பேர் வந்தாலும், அத்தனை பேரையும் ‛வாங்கடா... வாங்கடா...’ என தனி பெண்ணாக சீறிப்பாய்ந்தார் சாந்தி. 

பேருந்தில் இருந்த பெண்கள் சிலரும், அவரை கட்டுப்படுத்த முயற்சித்து, கடுப்பாகி அமர்ந்தனர். உலகில் உள்ள ஒட்டுமொத்த கெட்ட வார்த்தைகளால் நிரம்பி வழிந்தது அந்த அரசுப் பேருந்து, ஆனால், பயணிகள் எண்ணிக்கை என்னவோ... அதை விட குறைவு தான். சாந்தியை சாந்தப்படுத்த பேருந்து நடத்துனர், ஓட்டுநர் எல்லாரும் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்து, இறுதியில் போலீஸ் ஸ்டேஷன் செல்ல முடிவு செய்தனர். 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வந்ததும்,  பேருந்தை காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லுமாறு  பயணிகள் கூறினார். இதுக்கு மேல் காது குடித்து கேட்க முடியாது என்று அவர்கள் புலம்பினர். டிரைவருக்கும், கண்டக்டருக்கும் அதே நிலையே. எனவே பேருந்து வேடசந்தூர் காவல் நிலையம் சென்றது. பஸ்ஸில் இருந்து பந்தாவாக இறங்கிய சாந்தி, மீண்டும் ஆபாச வார்த்தைகளை வாந்தி எடுத்தார். இதனால் காவல் நிலையமும் காவா நிலையமாக மாறியது. 


அரசு பஸ்ஸை அலற வைத்த போதை பெண்: போலீசில் கதறிய பயணிகள்... சாந்தியை சாந்தப்படுத்த முடியாத திக் திக் நிமிடங்கள்!

அந்த பெண் பேசிய பேச்சால் தங்கள் காதுகள் ரத்தகளறியானது குறித்து விசாரணை அதிகாரிகளிடம் புலம்பித் தீர்த்தனர் பயணிகள். ‛சரி.. சரி நீங்க போங்க நான் பார்த்துக்கிறேன்...’ என அவர்களை ஆறுதல் படுத்தி அனுப்பி வைத்தார் எஸ்ஐ. அதன் பின் அந்த பெண்ணை அழைத்து விசாரணை நடத்திய போலீசார், ‛இனிமே இப்படி பண்ணாதம்மா... போய் ஒழுங்க இரு...’ என எச்சரித்து அனுப்பினர். குயிலை பிடிச்சு கூண்டில் அடைக்க முயற்சித்த பயணிகளின் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், சிறைவாசம் ஜஸ்ட் மிஸ்ஸான சாந்தி, உடையாத பூந்தியாய் அப்படியே வெளியே வந்தார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar
Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
TN Orange Alert: சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
Apple Distributors Warning: இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
MK Stalin Slams EPS: “சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
“சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
Embed widget