![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Crime : சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கணவன்..! செல்போனில் படம்பிடித்து ரசித்த மனைவி..! உத்தரபிரதேசத்தில் கொடூரம்..!
உத்தரபிரசேத்தில் மனைவி செல்போனில் படம்பிடிக்க, கணவன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Crime : சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கணவன்..! செல்போனில் படம்பிடித்து ரசித்த மனைவி..! உத்தரபிரதேசத்தில் கொடூரம்..! Uttar Pradesh Teen Girl physical abuse By Man While Wife Films Act And Later Uploads On Social Media; Couple Arrested Crime : சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கணவன்..! செல்போனில் படம்பிடித்து ரசித்த மனைவி..! உத்தரபிரதேசத்தில் கொடூரம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/16/6993d076bca0ba3b1c42259ee8703e6f1657975343_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு அமைந்துள்ளது படாவூன். இந்த நகரத்திற்கு உட்பட்டு அமைந்துள்ளது பைஷ்கஞ்ச் பேடா காவல்நிலையம். இந்த காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமியின் பெற்றோர்கள் இந்த காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளனர்.
அந்த புகாரில் கடந்த 12-ந் தேதி அதே பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் சிறுமியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே அந்த நபரின் மனைவியும் இருந்துள்ளார். தெரிந்தவர்கள் என்று சிறுமியும் சென்றுள்ளார். ஆனால், திடீரென அந்த நபர் சிறுமியிடம் அத்துமீறி நடந்துள்ளார். அதற்கு அந்த நபரின் மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார்.
பின்னர், சிறுமியை அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்வதை அவரது மனைவி தன்னுடைய செல்போனில் படம்பிடித்துள்ளார். பின்னர், அந்த சிறுமியிடம் இந்த சம்பவம் தொடர்பாக வெளியே கூறினால் இந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம் என்று கணவன் மனைவி இருவரும் சேர்ந்து மிரட்டியுள்ளனர்.
இவர்களுக்கு மிரட்டலுக்கு பயந்தும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியதாலும் சிறுமி அதிர்ச்சியுடன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சிறுமி மிகவும் பயந்து போயிருந்ததை கண்ட சிறுமியின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே., சிறுமியிடம் பெற்றோர்கள் விசாரித்துள்ளனர்.
இதையடுத்து, சிறுமியின் பெற்றோர்கள் பைஷ்கஞ்ச் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அந்த கணவர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்து அதை படம்பிடித்த மனைவி இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமின்றி அந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மனைவி அதை படம்பிடித்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : Crime : 7 மாதங்களுக்கு முன்பு தாக்கப்பட்ட தந்தை.. பழிவாங்க வந்த சிறுவன்...பதைபதை வைத்த வீடியோ
மேலும் படிக்க : Crime: சக்தி வாய்ந்த கலசம், பச்சை மூலிகை கல்.... கத்தி முனையில் சித்த மருத்துவரிடம் நகை, பணம் பறித்த 6 பேர் கைது..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)