Crime: ’மனைவியும், தோழியும் தான் காரணம்’ - பேஸ்புக்கில் பதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட பத்திரிகையாளர்..!
தனது தற்கொலைக்கு மனைவியும், தோழியும் தான் காரணம் என பேஸ்புக்கில் பதிவிட்டு நபர் ஒருவர் தன்னைதானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் பாரத் மிஸ்ரா (45). இவருக்கு கௌசல்யா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் கோவர்தன்விலாஸ் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். மேலும், இவருக்கு பின்சி பரேரா என்பவரிடம் நட்பு ஏற்பட்டது.
சில ஆண்டுகளாக இருவரும் நட்பாக பேசி வந்துள்ளனர். இந்நிலையில், இவருக்கும் இவரது மனைவு கௌசல்யாவுக்கு நீண்ட நாட்களாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாரத் மிஸ்ரா வீட்டில் இல்லாமல் இருந்துள்ளார். இந்த சமயத்தில் அவரது நன்பர் பின்சி பரேராவுடன் நெருக்கமாக பழகினார். பின்னர், இவர்களுக்கு இடையிலும் சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை:
அப்போது, சம்பவத்தன்று மாலை பின்சி பரேராவுடன் போனில் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன்பின்பு, பாரத் மிஸ்ரா தனது பேஸ்புக் பக்கத்தில் நான் தற்கொலை செய்து கொள்வதற்கு எனது மனைவியும், பெண் தோழியும் தான் காரணம் என்று பதிவிட்டிருந்தார். இதன்பின்பு, அவரது வீட்டிலேயே தன்னைதானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உடனே துப்பாக்கி சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பேஸ்புக்கில் பதிவிட்டது பற்றி அவரது மனைவி மற்றும் தோழியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Suicidal Trigger Warning..
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் படிக்க
Crime: நெல்லை, நாங்குநேரியில் கொடூரமாக வெட்டப்பட்ட பள்ளி மாணவர்கள்.. நடந்தது என்ன?
கோவை வருகிறார் ராகுல் காந்தி ; தகுதி நீக்கத்திற்கு பிறகு முதல் முறையாக வயநாடு செல்கிறார்..





















