மேலும் அறிய

கடலூரில் வீட்டில் கஞ்சா சாகுபடியில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது

’’ஒரு சோதனை முயற்சியாக கஞ்சா வளர்த்து வந்ததாகவும்; சோதனையில் நன்றாக வளர்ந்து வந்ததால் இதனை அதிகப்படுத்தும் முயற்சியில் ஈடுபடலாம் என எண்ணி இருந்ததாக விசாரணையில் தகவல்’’

கடலூர் அருகே உள்ள பாதிரிக்குப்பம் பகுதியில் உள்ள ரங்காத்தமன் கோவில் தெருவில் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா அவர்களின் தலைமையில் காவல் துறையினர் அந்த பகுதிக்குச் சென்று சோதனை செய்தனர். அப்போது ரங்காத்தமன் கோவில் தெருவில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில், பூந்தொட்டியிலும், வீட்டு வாசலிலும் கஞ்சா செடி வளர்த்து வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
 

கடலூரில் வீட்டில் கஞ்சா சாகுபடியில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது
 
உடனடியாக செடிகளை வளர்த்த 2 பேரை பிடித்த காவல் துறையினர் அவர்களை திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும், அங்கே வளர்க்கப்பட்டு வந்த கஞ்சா செடிகளையும் வேருடன் பிடுங்கி கைப்பற்றினர். பின்னர் காவல் துறையினர் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் பாதிரிக்குப்பம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன், விக்னேஸ்வரன் என தெரியவந்தது. மேலும் தொடர்ந்து அவர்களை விசாரணை செய்த பொழுது, அவர்கள் இதனை சில வாரங்களுக்கு முன் தான் வளர்க்க தொடங்கினர் எனவும் மேலும் இதனை ஒரு சோதனை முயற்சியாக வளர்த்து வந்ததாகவும் கூறினர். மேலும் இந்த சோதனையில் நன்றாக வளர்ந்து வந்ததால் இதனை அதிகப்படுத்தும் முயற்சியில் ஈடுபடலாம் என எண்ணி இருந்துள்ளனர் ஆனால் அப்பொழுது தான் காவல் துறையினரின் சோதனையில் மாட்டிக்கொண்டுதாக தெரிவித்தனர். மேலும் இந்த கஞ்சா செடி வளர்த்ததில் ஒருவரான தப்பி ஓடிய ஜானகிராமன் என்பவரைத் காவல் துறையினர் தேடி வருகின்றனர். 

கடலூரில் வீட்டில் கஞ்சா சாகுபடியில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது
 
கடலூரில் ஏற்கனவே கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே பயத்தை ஏற்படுத்திய நிலையில் தற்பொழுது வீட்டிலேயே கஞ்சா செடி வளர்த்து வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுகுறித்து, திருப்பாதிரிப்புலியூர் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சமீப காலங்களாக கடலூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்களின் புழக்கம் அதிகமாக காணப்படுகிறது, இதனை தடுப்பதற்கு காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும் இவ்வாறு தொடர்ந்து பெருகி வரும் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களின் புழக்கங்களை தடுப்பதற்கு காவல் துறையினர் இதற்கென தனிப்படை அமைத்து தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இதுபோல் இனி வரும் காலங்களில் நடக்காமல் இருக்க காவல் துறையினர் நடவடிக்கைகளை தீவிரமாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget