மேலும் அறிய

திருவாரூரில் டிராக்டர் மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு

ஊட்டியாணி என்கிற இடத்தில் செங்கல் ஏற்றி வந்த டிராக்டர் இவர்கள் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சுபா என்கிற கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்

திருவாரூர் மாவட்டம் இளமங்கலம் கிராமத்தை சேர்ந்த முருகேசன்  என்பவரின் மகள் சுபா. இவர் திருவாரூரில் உள்ள திருவிக அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இதழியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இதேபோன்று வடவேற்குடி கிராமத்தைச் சேர்ந்த தெட்சிணமூர்த்தி என்பவரின் மகள் ஜெனித்தா, இவர் திருவிக அரசு கலைக் கல்லூரியில் விலங்கியல் துறை பட்டப்படிப்பு படித்து வருகிறார். தோழிகளான சுதாவும் ஜெனிதாவும் இருசக்கர வாகனத்தில் தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஊட்டியாணி என்கிற இடத்தில் செங்கல் ஏற்றி வந்த டிராக்டர் இவர்கள் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சுபா என்கிற கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.


திருவாரூரில் டிராக்டர் மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு

மேலும் மற்றொரு மாணவியான ஜெனிதாவை மீட்டு அருகில் இருந்த பொதுமக்கள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் தெரிந்தவுடன் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் மருத்துவமனைக்குள் குவிய தொடங்கினர் அதனையடுத்து திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரி நிர்வாகம் கல்லூரிக்கு இன்று விடுமுறை அறிவித்து உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் ஓட்டுநர் பாலாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் தப்பி ஓடிய நிலையில் வடபாதிமங்கலம் காவல்துறையினர் இந்த விபத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

திருவாரூரில் டிராக்டர் மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு

மேலும் டிராக்டரின் உரிமையாளர் பிரபாகர் என்பவரை கைது செய்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிராக்டரில் அளவுக்கு அதிகமான செங்கல் ஏற்றி வந்ததன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கல்லூரி மாணவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் சக மாணவ மாணவிகளிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
Embed widget