மேலும் அறிய

வாண்ட்டடா வந்து.. வழுக்கி விழுந்து... பொதுமக்களிடம் சிக்கிய டூவீலர் திருடர்கள்..! திண்டிவனத்தில் ருசிகரம்..!

திண்டிவனம் அருகே இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இரு வாலிபர்களை பொதுமக்களிடம் வசமாக சிக்கியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கன்னிகாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே என்ஃபீல்டு புல்லட்டில் வந்து கொண்டிருந்த வாலிபர் திடீரென நிலை தடுமாறி வண்டியுடன் வழுக்கி விழுந்தார். உடனே அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு, அவர் ஓட்டி வந்த வாகனத்தை தூக்க முயன்றபோது  வாகனத்தில் சாவி இல்லாததாலும், வாகனத்தின் பக்கவாட்டில் உள்ள ஒயர் மூலம் இணைத்து அந்த இருசக்கர வாகனத்தை இயக்கியது தெரியவந்ததால் சந்தேகமடைந்த பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து கூட்டேரிப்பட்டில் உள்ள புறக்காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு காவலர்கள் இல்லாததால் மயிலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.


வாண்ட்டடா வந்து.. வழுக்கி விழுந்து... பொதுமக்களிடம் சிக்கிய டூவீலர் திருடர்கள்..! திண்டிவனத்தில் ருசிகரம்..!

புறக்காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தான் வெல்டிங் வேலைக்கு செல்லவேண்டும். என்னை விடுங்கள் என கூறியதுடன், என்னை மீறி பிடித்தால் நான் லாரியில் விழுந்து தற்கொலை செய்துகொள்வேன் என பொதுமக்களை மிரட்டினான். அதனால் பொதுமக்கள் அச்சமடைந்து இதுகுறித்து மீண்டும் மயிலம் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். தகவல் அளித்து வெகுநேரமாக போலீசார் அங்கு வராததால் நிலைமை விபரீதமானது. மேலும் இது குறித்து திண்டிவனம் காவல் துணை கண்காணிப்பாளரிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்பு நீண்ட போராட்டத்திற்குப் பின்பு தகவலின்பேரில் போக்குவரத்து ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.


வாண்ட்டடா வந்து.. வழுக்கி விழுந்து... பொதுமக்களிடம் சிக்கிய டூவீலர் திருடர்கள்..! திண்டிவனத்தில் ருசிகரம்..!

இதே நேரத்தில் அந்த வாலிபருடன் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இன்னொரு வாலிபர் தான் ஓட்டிவந்த வாகனத்தை கூட்டேரிப்பட்டு பகுதியில் உள்ள கடைவாசல் முன்பு நிறுத்திவிட்டு ஒன்றும் தெரியாதது போல நின்றிருந்தார். பின்னர் அந்த வாலிபர் அவ்வழியே சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி, தான் அவசரமாக மயிலம் செல்ல வேண்டுமென அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார். இதனை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் அந்த வாலிபர் பிடிபட்ட வாலிபருடன் வந்தவர் எனக்கூறியதை அடுத்து போலீசார் துரத்திச் சென்று அவரை மடக்கி பிடித்தனர்.


வாண்ட்டடா வந்து.. வழுக்கி விழுந்து... பொதுமக்களிடம் சிக்கிய டூவீலர் திருடர்கள்..! திண்டிவனத்தில் ருசிகரம்..!

பின்பு போலீசார் இரு வாலிபர்களையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் எடுத்து வந்த இரண்டு இரு சக்கர வாகனங்களும் சென்னை பல்லாவரம், மறைமலைநகர் ஆகிய பகுதிகளில் இருந்து திருடியது எனத் தெரியவந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர்கள் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மயிலம், காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் செல்வம் என்பதும், மற்றொருவர் மயிலம் அடுத்த வெளியனூர் பகுதியை சேர்ந்த தயாளன் என்பவரின்  மகன் மோகன்ராஜ் என்பதும் தெரியவந்தது. மேலும் நடத்திய விசாரணையில் இவர்கள் இருவரும் தொடர்ந்து இரு சக்கர வாகனத்திருட்டில் ஈடுபடுவது தெரியவந்ததது. இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததை அடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தலைப்பு செய்திகள்

மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget