மேலும் அறிய

துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?

சீர்காழி அருகே அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் நகைகளை திருடிய இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 18 சவரன் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

சீர்காழி அருகே அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் நகைகளை திருடிய இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 18 சவரன் நகைகளை பறிமுதல் செய்து, மீதம் உள்ள கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.

ஆசிரியை வீட்டில் கொள்ளை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் கிராமத்தில் உள்ள கம்பன் நகரில் வசித்து வருபவர் 53 வயதான லட்சுமி. இவர் சேந்தங்குடியில் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனது உறவினர் வீட்டின் துக்க காரியத்திற்காக கடந்த 2023 -ஆம் ஆண்டு நவம்பர் 5 -ம் தேதி சென்றுள்ளார். அப்படியே துக்க நிகழ்வுகள் முடித்து நாதல்படுகையில் உள்ள தனது தம்பி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்து மறுநாள் 6-ம் தேதி பள்ளிக்கு பணிக்கு சென்று வேலை முடிந்து மாலை வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த அவர்  வீட்டின் முன்பக்க கிரில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே அறையில் இருந்த இரண்டு பீரோவை உடைத்து அதில் இருந்த 48 சவரன்  நகை மற்றும் ஒரு லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் திருட்டு போனதை கண்டு லெட்சுமி அதிர்ச்சி அடைந்தார்.


துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?

காவல் நிலையத்தில் ஆசிரியர் புகார்

இது குறித்து சீர்காழி காவல் நிலையத்தில் ஆசிரியர் லட்சுமி புகார் அளித்தார். அந்த புகாரின் பெயரில் சீர்காழி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். மேலும் இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், உதவி காவல் ஆய்வாளர் மணிகண்ட கணேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர். 

Dhanush about A R Rahman: “கையில் 30 படம் வச்சிருக்கார்; ஆனாலும் எனக்கு ஓகே சொன்னார்” - ரஹ்மான் குறித்து மனம் திறந்த தனுஷ்

இருவர் கைது

இதன் அடிப்படையில் கரூரை சேர்ந்த 26 வயதான மனோஜ் குமார் என்பவரை கைது செய்த தனிப்படை போலீசார் அவரிடம் இருந்த 13 சவரன் தங்க நகைகளை கைப்பற்றினர். தொடர்ந்து போலீசார் மனோஜ் குமாரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர். முன்னதாக கடந்த மே மாதம் 14 -ஆம் தேதி இவ்வழக்கில் தொடர்புடைய சென்னை திருவேற்காட்டைச் சேர்ந்த 24 வயதான சதீஷ் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 5 பவுன் நகையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் லட்சுமி வீட்டில் திருடப்பட்ட நகைகளில்18 சவரன் நகைகளை பறிமுதல் செய்துள்ள போலீசார், மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய ரமேஷ் என்பவரை தேடி வருகின்றனர். அவரை விரைவில் பிடித்து மீதமுள்ள நகைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறையினர் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.


துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?

தொடர் திருட்டு சம்பவங்கள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கடந்த சில மாதங்களாக நாளுக்கு நாள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க சீர்காழி காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டாலும் தொடர் திருட்டு சம்பவங்களை அவர்களால் தடுத்து நிறுத்துவது என்பது முடியாத காரியமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக இந்த கம்பன் நகரில் மட்டும் பல முறை வீட்டுகளில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடைபெறுவது தொடர்ந்து கதையாக இருந்து வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget