மேலும் அறிய

திருச்சியில் பயங்கரம்... பெண் எரித்து கொலை - சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீஸ் விசாரணை

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாநகரில் கடந்த சில மாதங்களாக தொடர் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்த வண்ணம் இருந்தனர். இதனைத் தொடர்ந்து குற்றச்சம்பவங்களை தடுப்பதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து 24 மணி நேரமும் ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட வேண்டுமென மாநகர காவல் துறை ஆணையர் காமினி உத்தரவிட்டிருந்தார். அதன்படி சரித்திர பதிவேடுகளில் உள்ள ரவுடிகளின் பட்டியலை தயாரித்து தொடர்ந்து அவர்களை போலீசார் கண்காணித்து வருகிறார்கள். பொதுமக்களை அச்சுறுத்தம் விதமாக குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்து சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் பாலத்தின்கீழ் 10-வது கட்டைப் பகுதியில் அடையாளம் தெரியாத பெண் தலை மற்றும் கை எரிந்த நிலையில் சடலமாகக் கிடப்பதாக, அப்பகுதி பொதுமக்கள் கொள்ளிடம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தகவலறிந்த லால்குடி சரக டி.எஸ்.பி அஜய் தங்கம் தலைமையில் கொள்ளிடம் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பாதி எரிந்த நிலையில் கிடந்த பெண் சடலம் குறித்து விசாரணை செய்தனர்.


திருச்சியில் பயங்கரம்... பெண் எரித்து கொலை - சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீஸ் விசாரணை

மேலும், சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்குள்ள தடயங்களை சேகரித்தனர். அந்தப் பெண்ணுக்கு 45 வயது இருக்கலாம் என்று போலீஸார் கண்டறிந்தனர். அதன் பின்னர், எரித்துக் கொலைசெய்யப்பட்டிருந்த அந்தப் பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், உடற்கூறு ஆய்வு மேற்கொள்வதற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்த கொள்ளிடம் காவல் நிலைய போலீஸார், கொலைசெய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இங்கு வந்தார்? எதற்காக எரித்துக் கொலைசெய்யப்பட்டார். பாலியல் வன்கொடுமை செய்ய்யப்பட்டுக் கொலைசெய்யப்பட்டாரா, கொலையாளிகள் யார் என்று பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். கொள்ளிட ஆற்றுப் பாலத்தின்கீழ் பெண் ஒருவர் எரித்துக் கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதியியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறை ஆய்வு செய்து , சந்தேகம் படும்படி அப்பகுதியில் சுற்றித்திரிந்த நபர்களை கண்டறிந்து விசாரணையை தீவிரப் படுத்தி உள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget