மேலும் அறிய

திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் 5 கொள்ளையர்கள் கைது; 108 பவுன் நகைகள் பறிமுதல்

திருச்சி அருகே ஆயுதங்களுடன் 5 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 108 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி நெ.1 டோல்கேட் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக நள்ளிரவு நேரங்களில் பல்வேறு வீடுகளில் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இதனால் கொள்ளிடம் போலீசார் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் போலீஸ்காரர் அசோக் பட்டத்தம்மாள் தெரு பகுதியில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகே காட்டு பகுதியில் நின்றிருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தினார். அப்போது, அவர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்தோம். இயற்கை உபாதை கழிக்க வந்து இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் அவர்கள் கையில் இரும்பு கம்பி, திருப்புலி மற்றும் கையுறை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததை கவனித்த காவலர் அசோக், அவர்களை பிடித்தால் தன்னை தாக்கி விடுவார்கள் என எண்ணி 4 பேரிடமும் சாதுர்யமாக பேசி வெளிச்சம் நிறைந்த பகுதிக்கு அழைத்து வந்தார். பின்னர் இதுகுறித்து மற்ற இரவுநேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் விரைந்து வந்து 4 பேரையும் மடக்கி பிடித்து அவர்களிடம் இருந்த ஆயுதங்களை கைப்பற்றினர்.


திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் 5 கொள்ளையர்கள் கைது; 108 பவுன் நகைகள் பறிமுதல்

இதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி பெரிய மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிச்சமுத்து மகன் கவுதம்பிரபு (வயது 27), பனமரத்துப்பட்டி தாலுகா, காந்தி நகர் 3-வது தெருவை சேர்ந்த பூபதி மகன் ஹரிஹரன் (19), கொண்டாலம்பட்டி, அழகுநகரை சேர்ந்த சின்னத்தம்பி மகன் விஜயகுமார் (20), நாமக்கல் மாவட்டம், மாணிக்கம்பாளையம் தாலுகா, சேருகலை பகுதியை சேர்ந்த அப்புசாமி மகன் பாலமுருகன் (32) என்றும், இவர்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.


திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் 5 கொள்ளையர்கள் கைது; 108 பவுன் நகைகள் பறிமுதல்

மேலும் அவர்கள் பிச்சாண்டார்கோவில் ரயில்நிலையம் அருகே இருந்த ஒரு வீட்டில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற தயார் நிலையில் இருந்தபோது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதுகுறித்து 4 பேரின் மீது வழக்குப்பதிவு செய்த கொள்ளிடம் போலீசார் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து தனித்தனியாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொள்ளையடித்த சம்பவங்கள் குறித்து வாக்குமூலம் அளித்தனர். பின்னர் போலீசார் அந்த 4 பேரையும் கைது செய்து அவர்கள் பதுக்கி வைத்து இருந்த திருட்டு நகைகள் 108 பவுனை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கொள்ளையில் தொடர்புடைய நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே பூலாங்காட்டூர் பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் கனகராஜ் (33) என்பவரையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7400
Active
11967
Recovered
87
Deaths
Last Updated: Sat 14 June, 2025 at 04:00 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Iran Israel Strikes: ”போரை தொடங்கிய இஸ்ரேல்” விடுவதாய் இல்லை என குண்டு மழை பொழிந்த ஈரான் - வீடியோ வைரல்
Iran Israel Strikes: ”போரை தொடங்கிய இஸ்ரேல்” விடுவதாய் இல்லை என குண்டு மழை பொழிந்த ஈரான் - வீடியோ வைரல்
அகமதாபாத்தில் பறிபோன 274 உயிர்கள்.. விமானி பற்றி லீக்கான புது தகவல் - இதுதான் அது
அகமதாபாத்தில் பறிபோன 274 உயிர்கள்.. விமானி பற்றி லீக்கான புது தகவல் - இதுதான் அது
EPS DMK: எடப்பாடி மிது திமுக ப்ரூட்டல் அட்டாக் - புது பட்டப்பெயர், எல்லாமே புஸ்வானங்கள் தான் என சாடல்
EPS DMK: எடப்பாடி மிது திமுக ப்ரூட்டல் அட்டாக் - புது பட்டப்பெயர், எல்லாமே புஸ்வானங்கள் தான் என சாடல்
Meghalaya Honemoon Murder: 3 முறை எஸ்கேப் ஆன கணவன் - காதலனோடு பக்கா ஸ்கெட்ச், போட்டு தள்ளிய மனைவி
Meghalaya Honemoon Murder: 3 முறை எஸ்கேப் ஆன கணவன் - காதலனோடு பக்கா ஸ்கெட்ச், போட்டு தள்ளிய மனைவி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”நமக்கு எதுக்கு அதிக சீட்” வார்னிங் கொடுத்த அமித்ஷா! EPS-ஐ வைத்து மோடியின் ப்ளான்பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Driving

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Israel Strikes: ”போரை தொடங்கிய இஸ்ரேல்” விடுவதாய் இல்லை என குண்டு மழை பொழிந்த ஈரான் - வீடியோ வைரல்
Iran Israel Strikes: ”போரை தொடங்கிய இஸ்ரேல்” விடுவதாய் இல்லை என குண்டு மழை பொழிந்த ஈரான் - வீடியோ வைரல்
அகமதாபாத்தில் பறிபோன 274 உயிர்கள்.. விமானி பற்றி லீக்கான புது தகவல் - இதுதான் அது
அகமதாபாத்தில் பறிபோன 274 உயிர்கள்.. விமானி பற்றி லீக்கான புது தகவல் - இதுதான் அது
EPS DMK: எடப்பாடி மிது திமுக ப்ரூட்டல் அட்டாக் - புது பட்டப்பெயர், எல்லாமே புஸ்வானங்கள் தான் என சாடல்
EPS DMK: எடப்பாடி மிது திமுக ப்ரூட்டல் அட்டாக் - புது பட்டப்பெயர், எல்லாமே புஸ்வானங்கள் தான் என சாடல்
Meghalaya Honemoon Murder: 3 முறை எஸ்கேப் ஆன கணவன் - காதலனோடு பக்கா ஸ்கெட்ச், போட்டு தள்ளிய மனைவி
Meghalaya Honemoon Murder: 3 முறை எஸ்கேப் ஆன கணவன் - காதலனோடு பக்கா ஸ்கெட்ச், போட்டு தள்ளிய மனைவி
WTC Final SA vs AUS: ஜெயிச்சுடுயா பவுமா? வெறும் 69 ரன்கள்.. கறையை துடைக்குமா தென்னாப்பிரிக்கா?
WTC Final SA vs AUS: ஜெயிச்சுடுயா பவுமா? வெறும் 69 ரன்கள்.. கறையை துடைக்குமா தென்னாப்பிரிக்கா?
கலாநிதி மாறனின் 4000 கோடி சொத்துக்கு ஒரே வாரிசு... காவ்யாவின் காதலர் இந்த பிரபலமா? பயில்வான் போட்ட புது குண்டு!
கலாநிதி மாறனின் 4000 கோடி சொத்துக்கு ஒரே வாரிசு... காவ்யாவின் காதலர் இந்த பிரபலமா? பயில்வான் போட்ட புது குண்டு!
மொய் விருந்தில் வெற்றி பெறுவாளா தமிழ்செல்வி ?  பரபரக்கும் திருப்பங்களுடன் விஜய் டிவியின்  சின்ன மருமகள் நெடுந்தொடர் !! 
மொய் விருந்தில் வெற்றி பெறுவாளா தமிழ்செல்வி ?  பரபரக்கும் திருப்பங்களுடன் விஜய் டிவியின்  சின்ன மருமகள் நெடுந்தொடர் !! 
EPS Vs Stalin: நான் உண்மையான விவசாயியா.? நீங்க உண்மையான விவசாயியா.? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி
நான் உண்மையான விவசாயியா.? நீங்க உண்மையான விவசாயியா.? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி
Embed widget