மேலும் அறிய

திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் 5 கொள்ளையர்கள் கைது; 108 பவுன் நகைகள் பறிமுதல்

திருச்சி அருகே ஆயுதங்களுடன் 5 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 108 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி நெ.1 டோல்கேட் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக நள்ளிரவு நேரங்களில் பல்வேறு வீடுகளில் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இதனால் கொள்ளிடம் போலீசார் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் போலீஸ்காரர் அசோக் பட்டத்தம்மாள் தெரு பகுதியில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகே காட்டு பகுதியில் நின்றிருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தினார். அப்போது, அவர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்தோம். இயற்கை உபாதை கழிக்க வந்து இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் அவர்கள் கையில் இரும்பு கம்பி, திருப்புலி மற்றும் கையுறை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததை கவனித்த காவலர் அசோக், அவர்களை பிடித்தால் தன்னை தாக்கி விடுவார்கள் என எண்ணி 4 பேரிடமும் சாதுர்யமாக பேசி வெளிச்சம் நிறைந்த பகுதிக்கு அழைத்து வந்தார். பின்னர் இதுகுறித்து மற்ற இரவுநேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் விரைந்து வந்து 4 பேரையும் மடக்கி பிடித்து அவர்களிடம் இருந்த ஆயுதங்களை கைப்பற்றினர்.


திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் 5 கொள்ளையர்கள் கைது; 108 பவுன் நகைகள் பறிமுதல்

இதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி பெரிய மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிச்சமுத்து மகன் கவுதம்பிரபு (வயது 27), பனமரத்துப்பட்டி தாலுகா, காந்தி நகர் 3-வது தெருவை சேர்ந்த பூபதி மகன் ஹரிஹரன் (19), கொண்டாலம்பட்டி, அழகுநகரை சேர்ந்த சின்னத்தம்பி மகன் விஜயகுமார் (20), நாமக்கல் மாவட்டம், மாணிக்கம்பாளையம் தாலுகா, சேருகலை பகுதியை சேர்ந்த அப்புசாமி மகன் பாலமுருகன் (32) என்றும், இவர்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.


திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் 5 கொள்ளையர்கள் கைது; 108 பவுன் நகைகள் பறிமுதல்

மேலும் அவர்கள் பிச்சாண்டார்கோவில் ரயில்நிலையம் அருகே இருந்த ஒரு வீட்டில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற தயார் நிலையில் இருந்தபோது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதுகுறித்து 4 பேரின் மீது வழக்குப்பதிவு செய்த கொள்ளிடம் போலீசார் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து தனித்தனியாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொள்ளையடித்த சம்பவங்கள் குறித்து வாக்குமூலம் அளித்தனர். பின்னர் போலீசார் அந்த 4 பேரையும் கைது செய்து அவர்கள் பதுக்கி வைத்து இருந்த திருட்டு நகைகள் 108 பவுனை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கொள்ளையில் தொடர்புடைய நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே பூலாங்காட்டூர் பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் கனகராஜ் (33) என்பவரையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget