மேலும் அறிய

Crime: சந்தேகம்...சந்தேகம்.. சுத்தியலால் மனைவிக்கு செய்த பயங்கரம்.. செங்கத்தில் கொடூரம்..

செங்கம் அருகே மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் சுத்தியால் அடித்து கொடூரமாக கொலை செய்த கணவன்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரிமலைபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜி வயது (34). இவர் கூலிவேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி வயது (30). இவர்களுக்கு திருமணமாகி சுமார் 16 ஆண்டுகள் கடந்த நிலையில் ஒரு மகள் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். ஒரு மகன் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகின்றார். இந்நிலையில் விஜிக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை தன் மனைவி செல்வியின் கண்காணிப்பில் விட்டுவிட்டு திருப்பூர் பகுதிக்கு தனியார் கம்பெனியில் கூலி வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் விஜி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மனைவி செல்வியின் நடத்தையில் சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனைவி  மீது சந்தேகப்பட்டு அடிக்கடி அவருடன் வாக்குவாததில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் விஜிக்கு மனைவியின் மீது சந்தேகம் எழுந்து வாக்கு வாதத்தில் ஈடுட்டுள்ளார். பின்னர் இருவருக்கும் இடையே  ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்துள்ளது. 

 


Crime: சந்தேகம்...சந்தேகம்.. சுத்தியலால் மனைவிக்கு செய்த பயங்கரம்.. செங்கத்தில் கொடூரம்..

அதனைத்தொடர்ந்து நேற்று இரவு தனது மனைவியின் மேல் அதிக அளவில் சந்தேகம் அடைந்த விஜி, வீட்டில் இருந்த தங்களுடைய பிள்ளைகளை ஊரில் நடக்க கூடிய கோவில் திருவிழாவிற்கு அனுப்பி வைத்துவிட்டு, வீட்டின் கதவை மூடிவிட்டு மனைவியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதனால் ஆத்திரமடைந்த விஜி வீட்டில் இருந்த டீவியில் அதிக அளவில் சவுண்டு வைத்து விட்டு, தனது வீட்டில் இருந்த பெரிய சுத்தியலை எடுத்து மனைவி செல்வியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் தலை பிளந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் மிதந்த செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு எந்த வித சந்தேகம் எழாத நிலையில் விஜி வீட்டின் கதவை பூட்டி ‌விட்டு மேல் செங்கம் காவல்நிலையத்திற்கு இரவு 2 மணிக்கு சென்று  என் மனைவிமீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை சுத்தியால் அடித்து கொலை செய்துவிட்டதாக கூறி சுத்தியுடன் சரணடைந்தார். 

 


Crime: சந்தேகம்...சந்தேகம்.. சுத்தியலால் மனைவிக்கு செய்த பயங்கரம்.. செங்கத்தில் கொடூரம்..

அதன் பிறகு மேல் செங்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வியின் உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தனது மகளை சந்தேகத்தின் பெயரில் மருமகன் விஜி கொடூரமான முறையில் அடித்து கொலை செய்ததாக தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து மேல்செங்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியின் மீது சந்தேகம் அடைந்து கொடூரமான முறையில் சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget