மேலும் அறிய

திருப்பூரில் சீரழியும் மாணவர்கள்; 1.5 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் - கடைக்காரர் கைது ..!

விற்பனைக்காக கஞ்சா சாக்லேட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 1.5 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்த 1.5 கிலோ கஞ்சா சாக்லேட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அருள்புரம், சின்னக்கரை பகுதிகளில் ஆயிரக்கணக்கான வட மாநிலத் தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். அவர்கள் அங்குள்ள பனியன் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். இதனிடையே வட மாநிலத் தொழிலாளர்கள் குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை அதிகமாக பயன்படுத்தி வருவதால், அந்தப் பொருட்கள் விற்பனை அந்தப் பகுதிகளில் ஜோராக நடைபெற்று வருகிறது. அதேபோல பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளி மாணவர்களை கவரும் வகையில், ஊசி வடிவிலான சாக்லேட்கள், சிகரெட் வடிவ சாக்லேட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக பலமுறை காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தாலும், முழுமையாக தடுக்க முடியவில்லை. தொடர்ந்து போதை பொருட்கள் விற்பனை நடந்து வருகிறது.


திருப்பூரில் சீரழியும் மாணவர்கள்; 1.5 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் - கடைக்காரர் கைது ..!

இந்நிலையில் பல்லடம் அருள்புரம் பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு போதை சாக்லேட்டுகள் சப்ளை செய்யப்படுவதாக பல்லடம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் பல்லடம் காவல் துறையினர் அருள்புரம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பல்லடம் அருகே உள்ள குங்குமம்பாளையம் பிரிவிலுள்ள பெட்டிக் கடை ஒன்றில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்ட போது, அங்கே விற்பனைக்காக கஞ்சா சாக்லேட்கள் என்னும் போதை சாக்லேட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 1.5 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.


திருப்பூரில் சீரழியும் மாணவர்கள்; 1.5 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் - கடைக்காரர் கைது ..!

இதனைத் தொடர்ந்து கடையின் உரிமையாளரான ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த விஜய் மகந்தி (வயது 40) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த 9 இலட்சத்து 58 ஆயிரத்து 700 ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர். போதைப் பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்து காவல் துறையினர் கைது செய்யப்பட்ட விஜய் மகந்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பள்ளி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்யப்பட்ட சிகரெட் வடிவ சாக்லேட்கள், ஊசி வடிவ சாக்லேட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
Embed widget