மேலும் அறிய

திருப்பூரில் சீரழியும் மாணவர்கள்; 1.5 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் - கடைக்காரர் கைது ..!

விற்பனைக்காக கஞ்சா சாக்லேட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 1.5 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்த 1.5 கிலோ கஞ்சா சாக்லேட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அருள்புரம், சின்னக்கரை பகுதிகளில் ஆயிரக்கணக்கான வட மாநிலத் தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். அவர்கள் அங்குள்ள பனியன் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். இதனிடையே வட மாநிலத் தொழிலாளர்கள் குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை அதிகமாக பயன்படுத்தி வருவதால், அந்தப் பொருட்கள் விற்பனை அந்தப் பகுதிகளில் ஜோராக நடைபெற்று வருகிறது. அதேபோல பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளி மாணவர்களை கவரும் வகையில், ஊசி வடிவிலான சாக்லேட்கள், சிகரெட் வடிவ சாக்லேட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக பலமுறை காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தாலும், முழுமையாக தடுக்க முடியவில்லை. தொடர்ந்து போதை பொருட்கள் விற்பனை நடந்து வருகிறது.


திருப்பூரில் சீரழியும் மாணவர்கள்; 1.5 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் - கடைக்காரர் கைது ..!

இந்நிலையில் பல்லடம் அருள்புரம் பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு போதை சாக்லேட்டுகள் சப்ளை செய்யப்படுவதாக பல்லடம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் பல்லடம் காவல் துறையினர் அருள்புரம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பல்லடம் அருகே உள்ள குங்குமம்பாளையம் பிரிவிலுள்ள பெட்டிக் கடை ஒன்றில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்ட போது, அங்கே விற்பனைக்காக கஞ்சா சாக்லேட்கள் என்னும் போதை சாக்லேட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 1.5 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.


திருப்பூரில் சீரழியும் மாணவர்கள்; 1.5 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் - கடைக்காரர் கைது ..!

இதனைத் தொடர்ந்து கடையின் உரிமையாளரான ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த விஜய் மகந்தி (வயது 40) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த 9 இலட்சத்து 58 ஆயிரத்து 700 ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர். போதைப் பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்து காவல் துறையினர் கைது செய்யப்பட்ட விஜய் மகந்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பள்ளி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்யப்பட்ட சிகரெட் வடிவ சாக்லேட்கள், ஊசி வடிவ சாக்லேட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

கஞ்சா போதையில் வெறிச் செயல் ; தனியாக இருந்த 60 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்
கஞ்சா போதையில் வெறிச் செயல் ; தனியாக இருந்த 60 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்
நொடிப் பொழுதில் மாறிய கல்யாண வீடு: திருமண ஊர்வலத்தில் புகுந்த சொகுசு கார்; 13 பேர் ரத்த வெள்ளத்தில் அலறல்!
நொடிப் பொழுதில் மாறிய கல்யாண வீடு: திருமண ஊர்வலத்தில் புகுந்த சொகுசு கார்; 13 பேர் ரத்த வெள்ளத்தில் அலறல்!
ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! தட்டி தூக்கிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை
ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! தட்டி தூக்கிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை
தற்காலிக ஆசிரியர் பணிக்கு வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் !! கணித ஆசிரியர் கைது
தற்காலிக ஆசிரியர் பணிக்கு வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் !! கணித ஆசிரியர் கைது

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Passport Ranking: மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Mamata Banerjee: ”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
Tata EV Discounts: ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
Embed widget