மேலும் அறிய

அண்டை மாநிலத்தவர் முதன்முறையாக கள்ளச்சந்தைகாரர் என பாளை சிறையில் அடைப்பு - முழு விவரம் என்ன?

அண்டை மாநிலத்தவர் கள்ளச்சந்தைகாரர் என பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பார்.

ரேசன் அரிசி கடத்தலும் கைதும்:

கடந்த 16.02.2024 அன்று தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச்சாவடியில் அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமாக வாகன தணிக்கை செய்யப்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த ஈச்சர் வேனை நிறுத்தி சோதனை செய்ததில் 4 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வாகனத்தை ஓட்டி வந்த கோவில்பட்டியை சேர்ந்த பட்டுராஜன் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில்  நெல்லை மாவட்டம்  நாரணம்மாள்புரத்தை சேர்ந்த மகாராஜன், தொல்காப்பியர் தெருவை சேர்ந்த மாடசாமி ஆகியோரிடமிருந்து ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கேரளா மாநிலம் திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரை பணங்கூட்டபுறை பகுதியை சேர்ந்த அன்வர்கான் என்பவருக்கு சொந்தமான குடோனில் பதுக்கி வைத்து கொள்ளை லாபம் சம்பாதிக்கும் விதமாக கடத்தி விற்பனை செய்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக ஏற்கனவே வழக்கு பதிவு செய்து செய்து பட்டுராஜன் என்பவரை தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கள்ளச்சந்தை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர். அதனை தொடர்ந்து இதில் தொடர்புடைய மகாராஜன் மற்றும் மாடசாமி ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றக்காவலுக்கு உட்படுத்தினர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த அன்வர்கானை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் தற்போது தனிப்படை போலீசார் அன்வர்கானை கைது செய்தனர். தொடர்ந்து அன்வர்கானுக்கு சொந்தமான தென்மலையில் உள்ள ரேசன் அரிசி பதுக்கி வைக்கும் குடோனில் சோதனை செய்தபோது தமிழக அரசால் வழங்கப்படும்  ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அண்டை மாநிலத்தவர் கள்ளச்சந்தைகாரர் என சிறையில் அடைப்பு:

இந்த நிலையில் அன்வர்கான் பொது விநியோக திட்ட ரேசன் அரிசியை கடத்தி குற்ற செயலில் ஈடுபட்டும் அதனால் கொள்ளை லாபம் சம்பாதித்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தாலும் இவர் மீது கேரளாவில் ஆறு குற்ற வழக்குகளும், குழித்துறை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறையில் தலா ஒரு வழக்கும் இருந்து வரும்  நிலையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் அறிவுறுத்தலின்படி மதுரை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் விஜயகார்த்திக்ராஜ் மற்றும் நெல்லை சரக  காவல் துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உத்தரவின்படி காவல் ஆய்வாளர் ரமேஷ்ராஜா பரிந்துரையில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் கள்ளச்சந்தை மற்றும் இன்றியமையா பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டத்தின்படி கள்ளச்சந்தைக்காரர் என தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி தற்போது அன்வர்கான் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  தென்மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றங்களுக்காக அண்டை மாநிலத்தை சேர்ந்த நபர் மீது முதல்முறையாக கள்ளச்சந்தை மற்றும் இன்றியமையா பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

காவல்துறை எச்சரிக்கை:

மேலும் இதே போல அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மண்டல காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். அதேபோல கடந்த இரண்டு மாதங்களில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சரகத்தில் 6 நபர்கள் மீது கள்ளச்சந்தை தடுப்புகாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget